Tuesday, June 1, 2010

முனியின் செமினார்

சில சமயம், கல்லூரிகளில் ஐ.டி டிபார்ட்மெண்டிற்கு செமினார் எடுக்க எனக்கு அழைப்பு வரும். அவர்கள் கேட்கும் தலைப்பில் அல்லது நானே ஒரு தலைப்பில் செமினார் எடுப்பேன்.

போர் அடிக்காமல் இருக்க, ஜோக்குகள், சிறு கதைகள், கிளைக் கதைகள் எல்லாம் சொல்லி, அதிலிருந்து டெக்னிகல் சமாச்சாரத்திற்குத் தாவி செமினார் எடுத்து வந்தேன்

எப்படிப்பட்ட கல்லூரியாக இருந்தாலும், வம்பு செய்வதற்கென்றே சில மாணவர்கள் இருப்பதுதானே விதி. இவர்கள் செய்த அலம்பலில் செமினார் அடிக்கடி தடைபட்டது.

இவர்களை வழிக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்கை கையாண்டேன். ராஜேஷ்குமார் கதைகளில், விவேக் கேள்வி கேட்கும்போது மாட்டிக் கொண்ட குற்றவாளிக்கு அந்த ஏசியிலும் வியர்க்குமே! அது மாதிரி சுலபமான, ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களை வியர்க்க வைத்தேன். அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அன்னியோன்னியமாக அவர்களின் தோளில் கைபோட்டு, நடு சந்திக்கு இழுத்துவிட்டு, கேள்வியைக் கேட்டு, பதில் சொல்ல அவர்கள் கையில் மைக்கையும் திணித்து விடுவேன்.

தங்கள் அபிமான ஃபிகர்கள் மத்தியில், மானம் பறிபோவதால், அந்த மாணவர்கள் கப்சிப்பென அடங்கினர். மேடையிலேயே நிற்காமல், ஹால் முழுக்க ரவுண்ட் அடித்தபடியே செமினார் எடுத்ததால், கேள்விக்கு பயந்து, சலசலப்புகள் தானே அடங்கின.

ஒரு முறை ஒரு பெரிய கல்லூரியில் செமினார் எடுக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஐ.டி டிபார்டிமெண்டும் பங்கு பெற்றதால், எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருந்தது. ஒரு ஜோக்குடன் துவங்கினேன்.

“இப்படித்தான், ஒரு மத்யான நேரம். எல்லாரும் வயிறுமுட்ட சாப்ட்ட பிறகு செமினாருக்கு வந்தாங்க. ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முதல் ரோல டொபுக்-னு ஒரு தல சாஞ்சு விழுந்துச்சு. பயந்து வேற பக்கம் போனா, அங்க கொர்ர்ர்ர்...னு சத்தம். உடனே பக்கத்திலிருந்த பையனுக்கு செம கோவம் வந்துடுச்சு. அவன் சொன்னான்.. டேய்... எவ்ளோ பெரிய செமினார் நடக்குது. நீ இவ்ளோ சத்தம் போட்டு குறட்ட உட்ற... நாங்கெல்லாம் தூங்க வேணா...?

அரங்கம் கலகலக்க, செமினார் துவங்கியது.

ஒரு கட்டத்தில் செமினார் மந்த நிலைக்கு வர, கேள்வி பாணிக்குத் தாவினேன். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவரை கேள்வி கேட்க, அவர் மலங்க மலங்க முழித்தபடி தப்பாக பதிலளிக்க, ஒட்டு மொத்த அரங்கமும் சுவாரஸ்யமானது. தூக்கம் கலைந்து அனைவரும் சடுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இதைக் கவனித்துவிட்ட நான், அந்த மாணவரையே குறிவைத்து அடிக்கடி கேள்விகளைக் கேட்க, ஒவ்வொருமுறையும் அவர் சொதப்ப செமினார் டாப் கியரில் சென்றது.

கடைசியாக ஒரு படு சுலபமான கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் சரியான விடையளித்துவிட, “அப்பாடா, ஃபைனலி ஐ காட் எ ரைட் ஆன்ஸர் ஃப்ரம் யு” என்று நான் அவரை பாராட்ட அரங்கமே அதிர்ந்தது.

செமினார் இனிதே முடிந்தது. முதல்வர் அறையில் (அட, பிரின்சிபால் ரூமுங்க) டீ பார்ட்டி. ஹாலில் இருந்த கேமிரா மூலம், தன் இடத்திலேயே செமினாரைப் பார்த்திருந்த முதல்வர் என்னை பெரிதும் பாராட்டினார் (பாராட்டு விழாவெல்லாம் இல்லீங்க). “படு ஜோவியலாகவும், டெக்னிக்கலாகவும் நடத்தினீர்கள். அதைவிட எங்கள் ஸ்டூடண்ட்சை கட்டுக் கோப்பாக வைத்திருந்தீர்கள். நீங்க அடிக்கடி வந்து செமினார் எடுக்கணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது, ஹெச்.ஓ.டி என் காதருகே கிசுகிசுத்தார். “சார், எல்லாம் பிரமாதம். ஆனா ஒரு சின்ன வருத்தம்”.

“ஐயோ, என்னாச்சு சார்?”

“நீங்க கேள்வி கேட்டு தெணறடிச்சது ஸ்டூடண்ட் இல்ல சார், எங்க டிபார்ட்மெண்டில் ஒரு புரொபசர். அங்க பாருங்க முனி அடிச்சதுபோல நிக்கறாரு” என்றார்.

அடப் பாவமே!

9 comments:

  1. என்ன இந்த கலக்கு கலக்கறிங்க.

    ReplyDelete
  2. கடைசில சரியான திருப்பங்க..

    நல்லா இருக்கு..

    தொடர்ந்து நிறைய எழுதுங்க :))

    வாழ்த்துகள்

    ReplyDelete
  3. ப்ரொஃபஸருக்கே கேள்வியா? நீங்க பெரியாள்தான் ;)

    செம ஜாலியான பதிவு. பாராட்டுகள் & வாழ்த்துகள்!

    - என். சொக்கன்,
    பெங்களூரு.

    ReplyDelete
  4. அருமை, பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. Couldn't expect the twist at the end... Gud one... Keep up sir

    ReplyDelete
  6. அப்புடிப் போடு அருவாள.....

    ReplyDelete
  7. செம்ம சூப்பர் கிளைமேக்ஸ் :))

    ReplyDelete

உங்கள் கருத்தை கொஞ்சம் சொல்லுங்களேன்...