ஒரு தொலைபேசி உரையாடலில் எழுத்தாளர் பா. ராகவன் அவர்கள் “சுஜாதா நினைவு போட்டி நடக்க இருக்கிறது. அதற்கு ஒரு குறுநாவல் எழுதி அனுப்புங்கள்” என ஊக்குவிக்க... இரு பெரும் எழுத்தாளுமைகளின் ஆசியால் விளைந்ததே இந்த ’விடாப்பிடி’ குறுநாவல்.
கொரோனாவினால் போட்டி நடக்க இயலாமல் போனதால், இது கிண்டிலில் புத்தகமானது.
ஐ.டி. துறையில், டாட்.காம் குமிழி வெடித்து பெரும் பிரளயமே நிகழ்ந்த இறுதி ஆண்டில் (2001), அதில் சிக்கிக் கொண்ட ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் நாயகன் ஒரு சி.டி.யை (குறுந்தகடு) வைத்து புது ப்ராஜெக்டை உருவாக்கி கம்பெனியை மீட்க முயலும் கதையே இந்த “விடாப்பிடி”.
எதை எழுதினாலும் முதல் நபராகப் படித்து, திருத்தங்கள் யோசனைகள் சொல்லும் நண்பர் சித்ரன் ரகுநாத் அவர்களின் உதவியின்றி இந்த “விடாப்பிடி” முழுமை அடைந்திருக்காது. மூவருக்கும் நன்றி.
இக்குறுநாவல் சற்றே ஒரு த்ரில்லர் வகையாக அமைந்திருக்கிறது. தங்களின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் அறிய ஆவல். நன்றி.
அமேசான் சுட்டி: விடாப்பிடி
விலை: ரூ 49.