<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380</id><updated>2012-01-14T16:00:58.827+05:30</updated><category term='மொழி'/><category term='டியூசன்'/><category term='வயல்'/><category term='புத்தகம்'/><category term='லைப்ரரி'/><category term='மஹாதேவ்'/><category term='கதிர் வீச்சு'/><category term='சமஸ்கிருதம்'/><category term='வசதி'/><category term='தீபாவளி மலர்'/><category term='பாலைவனம்'/><category term='அட்லாண்டிஸ்'/><category term='கல்பாக்கம்'/><category term='லாட்ஸ்'/><category term='கணக்கு'/><category term='ட்வெண்டி-20'/><category term='ஹசாரே'/><category term='மென்பொருள்'/><category term='நூல் விமர்சனம்'/><category term='வெஸ்ட் இண்டீஸ்'/><category term='டாடா மார்கோபோலோ'/><category term='இங்கிலாந்து'/><category term='கிழக்கு'/><category term='துபாய்'/><category term='கம்ப்யூட்டர்'/><category term='நரிக் குறவர்'/><category term='Cassandra'/><category term='ஜாவா'/><category term='பாகிஸ்தானி'/><category term='யூஸபிலிட்டி'/><category term='கணினி'/><category term='மாடு'/><category term='சிவா'/><category term='புராணம்'/><category term='சென்னை'/><category term='நாய்'/><category term='லிஃப்ட்'/><category term='முரளீதரன்'/><category term='IPL'/><category term='ஜல்லிக்கட்டு'/><category term='தமிழ்'/><category term='லோக்பால்'/><category term='இமயமலை'/><category term='ஜாக்கிச்சான்'/><category term='ஜப்பான்'/><category term='நகைச்சுவை'/><category term='பர்ஜ் கலீபா'/><category term='மூன்று விரல்'/><category term='நதி'/><category term='பிரெஞ்சுப் புரட்சி'/><category term='ராமர்'/><category term='CD'/><category term='கிராமம்'/><category term='காஷ்மீர்'/><category term='ஐ.டி'/><category term='சேரன் சோழன் பாண்டியன்'/><category term='பேயோன்'/><category term='கைலாஷ்'/><category term='பஸ்'/><category term='20-20'/><category term='Twitter'/><category term='சொக்கன்'/><category term='இரா. முருகன்'/><category term='பின் லாடன்'/><category term='Floppy'/><category term='அபராதம்'/><category term='மாமல்லபுரம்'/><category term='குரங்கு'/><category term='திசை காட்டிப் பறவை'/><category term='தீக்குச்சி'/><category term='Oracle'/><category term='twenty-20'/><category term='புரொபசர்'/><category term='கிரிக்கெட்'/><category term='நாகா'/><category term='கபில்'/><category term='அபாயம்'/><category term='கோயம்பேடு'/><category term='செங்கல்பட்டு'/><category term='அக்வேரியம்'/><category term='உண்ணாவிரதம்'/><category term='ஜோக்'/><category term='ஐ.பி.எல்'/><category term='மீன்'/><category term='amish'/><category term='அனுபவம்'/><category term='கபில்தேவ்'/><category term='வெள்ளைக்காரி'/><category term='Digg'/><category term='PC-Quest'/><category term='Facebook'/><category term='பயணம்'/><category term='பேருந்து'/><category term='கடவுள்'/><category term='Harddisk'/><category term='ராம்லீலா'/><category term='டைடல்'/><category term='வாழைக்காய்'/><category term='பார்லிமெண்ட்'/><category term='சமையல்'/><category term='படிப்பு'/><category term='கீ போர்ட்'/><category term='பாதுகாப்பு'/><category term='முத்தொள்ளாயிரம்'/><category term='Google'/><category term='டாட்நெட்'/><category term='Open Source'/><category term='அணு மின்நிலையம்'/><category term='கல்லூரி'/><category term='Database'/><category term='மகாத்மா'/><category term='நாவல்'/><category term='shiva trilogy'/><category term='செமினார்'/><category term='கியாஸ்'/><title type='text'>காஞ்சி ரகுராம்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>33</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-3736161836193606071</id><published>2012-01-11T18:46:00.000+05:30</published><updated>2012-01-11T18:46:13.836+05:30</updated><title type='text'>ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span style="background-color: white; color: #222222; font-family: 'Trebuchet MS', Trebuchet, Verdana, sans-serif; font-size: 13px;"&gt;&lt;b&gt;&lt;u&gt;பண்புடன் - இணைய இதழில் எனது கட்டுரை...&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="background-color: #fdfdfd; color: #333333; font-family: 'Bitstream Vera Sans', Verdana, Helvetica; font-size: 14px; padding-bottom: 0.5em; padding-left: 0.5em; padding-right: 0.5em; padding-top: 0.5em; text-align: justify;"&gt;“நீ என்ன ஜாதி தம்பி?”&lt;/div&gt;&lt;div style="background-color: #fdfdfd; color: #333333; font-family: 'Bitstream Vera Sans', Verdana, Helvetica; font-size: 14px; padding-bottom: 0.5em; padding-left: 0.5em; padding-right: 0.5em; padding-top: 0.5em; text-align: justify;"&gt;&amp;nbsp;அந்த முதியவர் கேட்ட போது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. பள்ளத்தில் சைக்கிள் இறங்கியதால் விழுந்துவிட்டவரை தூக்கி உட்கார வைத்திருக்கிறேன். அவருக்காக ஹேண்டில் பாரை சரி செய்த போதுதான் அக்கேள்வியைக் கேட்டார்.&lt;/div&gt;&lt;div style="background-color: #fdfdfd; color: #333333; font-family: 'Bitstream Vera Sans', Verdana, Helvetica; font-size: 14px; padding-bottom: 0.5em; padding-left: 0.5em; padding-right: 0.5em; padding-top: 0.5em; text-align: justify;"&gt;&lt;a href="http://www.panbudan.com/story/it-companyil-varnaasramam"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-3736161836193606071?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/3736161836193606071/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2012/01/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3736161836193606071'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3736161836193606071'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2012/01/blog-post.html' title='ஐ.டி கம்பெனியில் வர்ணாஸ்ரமம்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-7341965735260525080</id><published>2011-12-28T13:18:00.000+05:30</published><updated>2012-01-05T14:41:08.494+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='PC-Quest'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='CD'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Harddisk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Floppy'/><title type='text'>இலவச இணைப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-ReLXyRLgssg/TvrIEZwpylI/AAAAAAAAAMw/i7eEsWN_FoQ/s1600/floppy.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="200" src="http://2.bp.blogspot.com/-ReLXyRLgssg/TvrIEZwpylI/AAAAAAAAAMw/i7eEsWN_FoQ/s200/floppy.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;‘கடக்காரன் உங்கள நல்லா ஏமாத்திட்டான்பா’&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா சொல்ற”&lt;br /&gt;&lt;br /&gt;‘பின்ன என்னப்பா. இந்த புத்தகத்தோட ஃப்ளாப்பி ஃப்ரீனு சொன்னான்னு நீங்களும் எனக்காக வாங்கி வந்துட்டீங்க... ஃப்ளாப்பி கறுப்பா சதுரமாத்தான் இருக்கும்... இது என்னமோ வட்டமா கலர் கலரா மின்னுது... இது வெறும் பிளாஸ்டிக்ப்பா’ என்று சொல்லி அதை அலட்சியமாக டைனிங் டேபிளின் மேல் வீசி விட்டு, கல்லூரிக்குக் கிளம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வருடம் 1994.&lt;br /&gt;&lt;br /&gt;அரையடி சதுரத்திற்கு 1.2 MB கொள்ளளவுடன் இருந்த ஃப்ளாப்பி டிஸ்க்குகளே பிரதானமாக புழக்கத்தில் இருந்தன. ஒன்றின் விலை 40 ரூபாய். கல்லூரி எங்கள் வகுப்பில் ஆளுக்கு ஒரு ஃப்ளாப்பியை வாங்கிக் கொடுத்திருந்தது. அதை லேப் பீரோவிலேயே பாதுகாக்கவும் செய்தது! லேபினுள் நுழையும் போது, பெயர்களின் அகர வரிசைப்படி லைனில் நிற்போம். இரண்டு பூட்டுக்கள் கொண்ட பீரோவிலிருந்து, எங்கள் ரோல் நம்பர் எழுதப்பட்ட ஃப்ளாப்பியை எடுத்துத் தருவார்கள். கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்கள் எழுதிவிட்டு அதை ஃப்ளாப்பியில் சேமித்தபின் கண்ணில் ஒற்றிக் கொண்டு அங்கேயே ஒப்படைத்துவிட்டு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகளாக Basic, FORTRAN, COBOL, Pascal ஆகிய கம்ப்யூட்டர் மொழிகளில் மாய்ந்து மாய்ந்து ப்ரோக்ராம் எழுதியும் பாதி ஃப்ளாப்பிதான் நிரம்பியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஃப்ளாப்பி டெக்னாலஜியில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு 1.44 MB-களுடன் கையடக்கமாக ஃப்ளாப்பிகள் வெளிவரத் தொடங்க, அதில் ஒன்றையாவது வாங்கி, C மொழியில் ப்ரோக்ராம் எழுதி நிரப்பி விட வேண்டும் என்பதே, என் அப்போதைய வாழ்நாள் லட்சியம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிலைமை இப்படி இருக்க, தந்தையார் ஏதோ ஒரு பிளாஸ்டிக்கை ஃப்ளாப்பி என்று வாங்கி வந்து விட்டாரே என்று வருத்தப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பில் நுழைந்தால், நண்பன் சீனுவாசனைச் சுற்றி அனைவரும் ஏதோ வைரப் புதையலைக் கண்டவர் போல வாய் பிளந்து நிற்க, அவன் கையில் தந்தை வாங்கிய PC-Quest மாத இதழ் + அந்த பிளாஸ்டிக்.&lt;br /&gt;&lt;br /&gt;“டேய் ரகு, விஷயம் தெரியுமா... இதோட பேர் காம்பாக்ட் டிஸ்க்காம். இதோட கப்பாஸிடி.... கப்பாஸிடி... அவனுக்கு மூச்சு வாங்கியது... அறுநூத்து ஐம்பது MB-யாம்டா...”&lt;br /&gt;&lt;br /&gt;‘என்னாது... அறுநூத்து ஐம்பதா’... ஒரு நொடி கண்ணிருட்டி மயக்கம் வந்து தெளிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“PC-Quest-இன் 25 ஆவது இஷ்யுவை கொண்டாட இத ஃப்ரீயா குடுத்திருக்காங்கடா...”&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கொண்டு அவன் சொன்னது எதுவும் காதில் ஏறவே இல்லை. எங்கள் கல்லூரியின் லேப்பில் இருக்கும் கம்ப்யூட்டர்களின் ஹார்ட்-டிஸ்கின் அதிகபட்ச கொள்ளளவே 16 MB-தான். பாதி கம்ப்யூட்டர்களுக்கு ஹார்ட்-டிஸ்கே கிடையாது. அவைகளில் இரண்டு ஃப்ளாப்பி டிரைவ்கள் இருக்கும். Command.com என்ற பைலைக் கொண்ட ஒரு ஃப்ளாப்பியை முதல் டிரைவில் நுழைத்து பூட் செய்து கொள்ள வேண்டும். இரண்டாம் டிரைவில் நுழைக்கப்படும் ஃப்ளாப்பிதான் அந்தக் கம்ப்யூட்டரின் ஹார்ட்-டிஸ்க். லேப்பில் இருக்கும் அனைத்து கம்ப்யூட்டர் ஹார்ட்-டிஸ்குகளின் கொள்ளளவைக் கூட்டினாலும் 100 MB தேறாது. இதனால் அறுநூத்து ஐம்பதைக் கேட்ட காதில் இடி இறங்க, இயல்பு நிலைக்கு மீள முடியாமல் இயந்திர கதியில் நடந்து என் சீட்டில் அமர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில ப்ரொஃபஸர் நுழைய வகுப்பு துவங்கியது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் ஸீசர் நாடக பாடத்தை நடத்தத் தொடங்கினார். மனம் அதில் லயிக்காமல் தருமி போல் புலம்பத் தொடங்கியது. “ஒரு MB-யா ரெண்டு MB-யா... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே.... அறுநூத்து ஐம்பது MB ஆச்சே....”&lt;br /&gt;&lt;br /&gt;ப்ரொஃபஸர், சீசரைப் போல பாடி-லாங்வேஜூடன் எதையோ சொல்ல, அவர் ஜோக் அடித்துவிட்டதாக நினைத்து, ஹஹ்ஹஹ்ஹா என்று வாய்விட்டு சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோ பரிதாபம். அறுபது பேர் இருந்த வகுப்பில் நான் மட்டுமே சிரித்திருக்கிறேன். இதனால் அடுத்த நொடியே ஒட்டு மொத்த வகுப்பும் சிரித்து அதிர்ந்து அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னாச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒண்ணுமில்ல சார். கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பாடத்தைத் தொடர, மனம் மீண்டும் அரற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயோ, அந்த டிஸ்கை விசிறிய வேகத்தில், அது டேபிளிலிருந்து கீழே விழுந்திருந்தால், துப்புரவு செய்பவர் தூக்கி போட்டிருப்பார்களே!”&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் நிலை கொள்ள முடியாமல், அடுத்த வகுப்புகளை கட் அடித்துவிட்டு சைக்கிளில் வீட்டிற்குப் பறந்தேன். என் வேகத்தில் வழியில் இருக்கும் மயான பூமிக்கடியில் இருப்பவர்களின் நீடு துயில் கூட சற்றுக் கலைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;‘டைனிங் டேபிளில் டிஸ்கைக் காணோம்’&lt;br /&gt;&lt;br /&gt;தரையில் லேசாக பினாயில் நெடி அடிக்க... போச்சு... போச்சு, வீட்டை பெருக்கி துடைத்தாகிவிட்டது. டிஸ்க்கை தூக்கி போட்டிருப்பார்கள். ஒரு நப்பாசையுடன் ஹாலின் இண்டு இடுக்கிலெல்லாம் தேடினேன். ம்ஹூம் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரம் துக்கம் தாங்கவில்லை. சரி, கல்லூரிக்குக் கிளம்ப வேண்டியதுதான் என நினைத்து சாப்பிட டைனிங் டேபிளை நெருங்க, துள்ளிக் குதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியே கிளம்பும் அவசரத்தில், சரியான தட்டு கிடைக்காததால் ஈய சொம்பின் வாய் விட்டத்திற்குச் சரியாக இருந்ததால், டிஸ்க்கினால் அதை மூடிவிட்டுச் சென்றிருக்கிறார் என் அன்னை.&lt;br /&gt;&lt;br /&gt;ரச நீர் ஆவியில் குளித்தபடி MB-களைச் சிமிட்டியது, நான் கண்ட முதல் சி.டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-7341965735260525080?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/7341965735260525080/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/12/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7341965735260525080'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7341965735260525080'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/12/blog-post.html' title='இலவச இணைப்பு'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-ReLXyRLgssg/TvrIEZwpylI/AAAAAAAAAMw/i7eEsWN_FoQ/s72-c/floppy.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-1253744795137019367</id><published>2011-11-10T12:27:00.001+05:30</published><updated>2011-11-10T12:27:47.894+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹாதேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='shiva trilogy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='amish'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புராணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நதி'/><title type='text'>நாகர்களின் ரகசியம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://shivatrilogy.com/" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-FUICu3oMOdA/Trty4eZORMI/AAAAAAAAAMU/1ehNNHWwxnk/s320/nagas-book.jpg" width="214" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வீரபத்ரனிடமிருந்து வாங்கி, தன் ஆனை முகத்தைத் தூக்கி, அதை உள்ளிழுக்க முயன்று, புகைக்கத் தெரியாமல் கணேஷ் இரும, எல்லாரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்து மத உணர்வுகளை புண்படுத்தாமல் இப்படி ஒரு காட்சி Secret of the Nagas நாவலில் மட்டுமே சாத்தியம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் நாவலான The Immortals of Meluha (விமர்சனம் இங்கே: &lt;a href="http://kanchiraghuram.blogspot.com/2011/10/blog-post_20.html"&gt;சிவா... மஹாதேவ்&lt;/a&gt;)-வில் தந்த ஆச்சரியம், திருப்தி, ஆனந்த உணர்ச்சிகளை அப்படியே இதிலும் தொடர்ந்திருக்கிறார் ஆசிரியர் அமிஷ்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சூர்ய வம்சிகளிடையே நிகழ்ந்த சிவாவின் பயணம், இந்த நாவலில் சந்திர வம்சிகளுடன். வட இந்தியாவின் பல நிலப்பரப்புகள் (காசி உட்பட) இந்நாவலில் அழகான காட்சிகளாகுகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஊழலும், வஞ்சகமும், குழப்பமும், ஏற்றத் தாழ்வுகளும், அதனுள் நல்லுள்ளங்களும், ஞானமும், திறமையும், உழைப்பும் கொண்ட இந்தியாவின் கதம்ப முகத்தை சந்திர வம்சிகளை வைத்து வெளிப்படுத்தியிருப்பது பிரமாதம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதில் ஒரு தமாஷ். இவர்களுக்கு நேர் எதிராக, அனைத்து பிரஜைகளுக்கும் சம நீதியுடன், கட்டுக் கோப்பான சட்ட ஒழுக்கங்களுடன் ஒட்டு மொத்தமாக முன்னேறிய சமுதாயமாக சூர்ய வம்சம். இதன் கோட்பாடுகளை இந்தியா முழுதும் பரப்பும் நோக்கத்துடன், தக்கன் கோலோச்சும் அதன் நிலப்பரப்புதான் இப்போது பாகிஸ்தான்!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆசிரியரைப் பாராட்ட வேண்டிய பல அம்சங்களில் ஒன்று, சிவாவை ஒன்-மேன்-ஆர்மியாக மிகைப்படுத்தாதது. என்னதான் அவரை மஹாதேவ் நிலைக்கு படிப்படியாக உயர்த்தினாலும், இக்கட்டான சமயங்களில், மந்திரமாய் வந்து குதிக்கும் தமிழ் சினிமா கதாநாயகன் போல, சிவா தோன்ற வாய்ப்பிருந்தும், காட்சிகளிலிருக்கும் பிற பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களையே கையாள விட்டிருப்பது யதார்த்தம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சில சமஸ்கிருத வார்த்தைகள், கடவுள்களின் பெயர்கள், தத்துவங்களுக்கு வரும் ஒரு வரி விளக்கங்கள் அட்டகாசம். உதாரணங்களாக: ஏழு நதிகள் பாயும் வட இந்தியாவின் பெயர் சப்த சிந்து. மற்ற இந்திய நதிகளைவிட பிரம்மாண்டமாக கரைபுரளும் அந்த ஒரு நதிக்கு மட்டுமே ஆண்பால் பெயர்: பிரம்ம புத்திரா. இந்நதியும் கங்காவும் இணைந்து காத்து வளப்படுத்தும் நிலம் பிரங்கா!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சமஸ்கிருத காரணப் பெயர்களுடன் கடும் போட்டியிட்ட மொழி நம் தமிழ். சொன்னது கண்ணதாசன், அர்த்தமுள்ள இந்துமதத்தில். காசியிலிருந்து விசாலமான இந்திய நிலப்பரப்பை ஆள்வதால், அவள் பெயர் விசாலாட்சி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இந்தியாவின் இரு கண்கள், இவ்விரு செம்மொழிகளும். அதை உணர்ந்தே, சங்கத் தமிழ் தந்த மனுதர்ம சாஸ்திரமே சூர்ய வம்ச சட்டங்களுக்கு அடிப்படை என கோடிட்டுக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புராணங்கள் கற்பனையோ, கட்டுக் கதையோ, அதில் வரும் கணக்கற்ற குணசித்திர பாத்திரங்களை நவீன படைப்புகளில் வடிப்பது துர்லபம். ஆனால் கதைக் களம் புராணத்தை அடிப்படையாகக் கொண்டதால் இதை சாதித்துக் காட்டியிருக்கிறார் அமிஷ்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முதல் நாவலில் வாயுபுத்திரர்கள் வரை வந்த பாத்திரங்கள் இதில் பகீரதன், பரசுராம், கார்த்திக், கணேஷ், காளி... என நீள்கிறது. கார்கோடன், சந்திரகேது, ஜமதக்னி, ரேணுகா, உமா... என ஒரு சில பத்தி பாத்திரங்களும் அடக்கம். புராண பாத்திரங்களின் உருவ குணங்களுடனேயே இவற்றை வடித்திருப்பது சிறப்பு.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவாவின் உருகும் மனசை, &amp;nbsp;சூழ்நிலைகளால் பின்னாளிலேயே ஏற்ற சதியின் காதல் தோசையை அப்படியே திருப்பிப் போட்டு, ஆனந்தமயி - பர்வதேஸ்வர் காதலை இங்கே சமைத்திருக்கிறார். சில இடங்கள் நாசூக்காக சிரிப்பை வரவழைக்கின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சிவாவின் பயணத்தை ஒட்டி கிட்டதட்ட ஒரே நேர்க் கோட்டில் சென்றது முதல் நாவல். ஆனால் இங்கே சிவா, சதி, நாகா... மூவரை முன்னிலைப்படுத்தி நகரும் அத்தியாயங்கள் க்ரைம் நாவலுக்கே உரிய த்ரில்லர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தீய சக்திகளை அழிப்பதே தனது கடமையென படையெடுக்கும் சிவா, சந்திர வம்சி, பரசுராம், நாகா என யாருமே தீயவராக இல்லாமல், அவரவர் சூழ்நிலை நியாயங்களுடன் வேறு ரூபத்தில் இருப்பது கண்டு திகைக்கிறார். கிட்டதட்ட எல்லாருமே தங்களைக் காக்க, இவர் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பது இவரை வெகுவாகக் குழப்புகிறது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தேவர்களுக்காக அசுரர்களை ஒடுக்கிய ருத்ரன், ஒரு கட்டத்தில் அசுரர்கள் அப்படியொன்றும் தீயவரில்லை என உணர்ந்த கதையிலிருந்து சில தெளிவுகளைப் பெறுகிறார். உண்மையான தீய சக்தியை அடையாளம் காண ருத்ரனின் கோவில்களில் வாயுபுத்திரர்களுடன், முதலில் நேரிலும், பின் டெலிபதி மூலமாகவும் சிவா மேற்கொள்ளும் உரையாடல்கள், அவருக்கு மட்டுமல்ல நமக்கும் சில பக்குவங்களைத் தருகின்றன.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நம் யூகத்தின்படியே இந்நாவல் முடிந்தாலும், மூன்றாவது நாவலுக்கு (The Oath of the Vayuputras) எந்த க்ளூவும் இல்லாதது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவசரமில்லை அமிஷ். கைலாச சிகரமாய் மூன்றாம் நாவலைத் தர காலம் எடுத்துக் கொள்ளுங்கள். காத்திருக்கிறோம்.&amp;nbsp;&lt;a href="http://shivatrilogy.com/"&gt;http://shivatrilogy.com&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-1253744795137019367?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/1253744795137019367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/1253744795137019367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/1253744795137019367'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/11/blog-post.html' title='நாகர்களின் ரகசியம்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-FUICu3oMOdA/Trty4eZORMI/AAAAAAAAAMU/1ehNNHWwxnk/s72-c/nagas-book.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-3059025267312937514</id><published>2011-10-20T12:17:00.001+05:30</published><updated>2011-10-20T16:46:31.635+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மஹாதேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கைலாஷ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இமயமலை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராமர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புராணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காஷ்மீர்'/><title type='text'>சிவா... மஹாதேவ்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://shivatrilogy.com/" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/-zyiU_fOeNsI/Tp-_3fl6orI/AAAAAAAAALI/7Pb-4L3_-mU/s320/meluha-book.jpg" width="208" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கி.மு 1900 - காஷ்மீர் - ஸ்ரீநகர்.&lt;br /&gt;&lt;br /&gt;- படுக்கையறையுடன் இணைக்கப்பட்ட குளியலறையில் சோப்பு தேய்த்துக் குளிக்கிறார்... சிவா... மஹாதேவ்!&lt;br /&gt;&lt;br /&gt;- பின் பருத்தி வேட்டியை அணிந்து கொள்ள, அவரது புலித்தோல் ஆடை hygienic காரணங்களுக்காக சுத்தம் செய்ய எடுத்துச் செல்லப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ரகளையான கற்பனைகளுடன் துவங்கும் நாவல் - Immortals of Meluha. (ஆங்கில நாவலுக்கு தமிழில் விமரிசனம் எழுதக்கூடாது என ஏதாவது விதி இருக்கிறதா?!)&lt;br /&gt;&lt;br /&gt;கைலாஷ் மலையடிவாரத்தில், ஒரு சிறு கூட்டத்திற்குத் தலைவனாக இருக்கும் சிவா, சூரியவம்ச சாம்ராஜ்யத்தின் அழைப்பை ஏற்று, தன் கூட்டத்துடன் காஷ்மீருக்குக் குடிபெயர்ந்தபின் படிப்படியாக மஹாதேவ் நிலைக்கு உயர்வதே கதைக்களம்.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கொள்ளும் கோபம், தீவிரக் காதல், கடும் வீரம், அட்டகாச நடனம், தீயதை அழிக்கும் சக்தி... அனைத்தையும் உள்ளடக்கிய மஹாதேவ், கடவுளாக இல்லாமல் நம்மைப்போல் இரத்த சதை மனிதனாக இருந்தால்... இக்கற்பனையே இக்கதையின் கரு.&lt;br /&gt;&lt;br /&gt;வானத்தின் வர்ணனையுடன், நீர்க் கரையில் இளம் கதாநாயகனுடன் துவங்கும் சாண்டில்யனின் சரித்திரக் கதை போலவே, மானசரோவரின் கரையில் சூரிய அஸ்தமனத்தை தீவிர சிந்தனையுடன் சிவா காண, முதல் காட்சி விரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அட்டைப் படத்தைப் பாருங்கள். திரிசூலத்தின் முன், ஜடாமுடியுடன், எஃகு தேகத்துடன், தோள்பட்டைகளில் தைக்கப்பட்ட நீண்ட போர் வெட்டு காயங்களுடன் சிவா... இப்பிம்பத்துடன் முதல் காட்சியை மனத்திரையில் விரித்தால்... நமக்குள் ஒரு ஆகர்ஷண சக்தி ஊற்றெடுக்கத் தொடங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில், இவர் தலைமையில் சூர்யவம்ச சேனை, சந்திர வம்சத்துடன் போரில் மோதும் போது... ‘ஹர் ஹர் மஹாதேவ்... ஹர் ஹர் மஹாதேவ்...’ என அடிநாதத்தில் கூக்குரலிடும்போது, அந்த ஆகர்ஷண சக்தி நம்முள் பிரவாகமெடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தலை வணக்கங்கள் அமிஷ். இவர்தான் நூலாசிரியர். கொல்கத்தாவைச் சேர்ந்த 35 வயது IIM பட்டதாரி. சிவ கதையின் அனுபவத்தினால், தான் வேறு மனிதனாக உணர்கிறேன் என முன்னுரையில் சொல்கிறார். உண்மைதான். படிக்கும் நமக்குள்ளும் சில மாற்றங்கள் இயல்பாக நிகழ்கின்றன. தக்க வைப்பது நம் பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;புராணம், வரலாறு, நவீன உலகம்... மூன்றையும் கலந்து கதை புனையப்பட்டிருக்கிறது. ராமயணப் பாத்திரங்களை நவீனப்படுத்தியிருப்பார் ராவணன் படத்தில் மணிரத்தினம். அது போலவே சதி (பார்வதி), தக்கன், நந்தி, வீரபத்திரன், பர்வதேஸ்வர், பிரகஸ்பதி (இவர் இங்கே விஞ்ஞானி!)... என அனைத்து பாத்திரங்களும் கச்சிதம். படத்திற்குத் தீர்ப்பு எப்படியோ?! இந்நாவல் சூப்பர் ஹிட்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் காலம் ராமனுக்குப் பின் 1200 வருடங்கள். ராமனின் சோமபானம் சர்ச்சைக்கு வித்திட்டது நினைவிருக்கும். ஆனால் அது இங்கே சோம்ராஸ் மருந்தாக, ஆயுளை நீட்டும் மருந்தாக வருகிறது. (தக்கனின் வயது 185!)&lt;br /&gt;&lt;br /&gt;ராமனால் அனைத்து சூர்யவம்ச பிரஜைகளுக்கும் கிடைக்கச் செய்யப்பட்ட இம்மருந்திற்கு முக்கிய மூலப்பொருள் சரஸ்வதி நதிநீர். நதியை சந்திரவம்சிகள் தடை செய்ய, போர் மூள்கிறது. தோல்வியடையும் சந்திரவம்சி தீவரவாதத் தாக்குதல்களில் இறங்குகிறார்கள். அடடா! இந்தியா-பாக் பிரச்சனையைக் கூட நுழைத்து விட்டார் ஆசிரியர் (பின்னே காஷ்மீரில் வேறு கதை துவங்குகிறதே!).&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத் தாக்குதல்களில் திணறும் சூர்யவம்சி, நீலகண்டர் அவதரிப்பார் என காத்திருக்க, சோம்ராஸ்-ஐப் பருகும் சிவனின் கழுத்து நீலமாகிறது! வாவ்... கற்பனை எல்லாம் மத்தாப்பு சிமிட்டல். (ஹூம்... காவரி நதிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க இன்னொரு நீலகண்டன் அவதரித்தால் நலம்)&lt;br /&gt;&lt;br /&gt;கதையோடு பிணைந்து வரும் சிவாவின் காதலும், போர்க்களத்தில் சதியிடத்து (பார்வதி) அது கனியும் விதமும் வீர அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை சாதாரண மனிதனாகவே கருதும் சிவா, சந்திரவம்சியை வீழ்த்தியபின், பல உணர்ச்சிகளுக்கு ஆளாகி, அயோதி இராமர் கோவிலில் மஹாதேவனாக உணர்ந்து பயணத்தைத் துவங்கும் போது ‘தொடரும்’ என நாவல் முடிகிறது. ஆம், இது இன்னும் இரு பகுதிகள் கொண்ட தொடர் நாவல் - The secret of the Nagas, The Oath of the Vayuputras. மூன்றாம் நாவல் இனிதான் வெளிவரும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாவல் தந்த புது ரத்தப் பாய்ச்சலில், இரண்டாவதை படிக்கத் தொடங்குகிறேன்.&amp;nbsp;&lt;a href="http://shivatrilogy.com/"&gt;http://shivatrilogy.com/&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-3059025267312937514?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/3059025267312937514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/10/blog-post_20.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3059025267312937514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3059025267312937514'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/10/blog-post_20.html' title='சிவா... மஹாதேவ்!'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-zyiU_fOeNsI/Tp-_3fl6orI/AAAAAAAAALI/7Pb-4L3_-mU/s72-c/meluha-book.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-658283304994685732</id><published>2011-10-19T12:32:00.000+05:30</published><updated>2011-10-19T12:39:40.167+05:30</updated><title type='text'>காற்றடைத்த பையடா!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;பேசும் வசதியுடன் மட்டும் பிறந்த செல்போன், இன்று பல வசதிகளைக் கொண்டு ஸ்மார்ட் ஃபோனாக வளர்ந்திருக்கிறது. ஆயிரங்கள் கொடுத்து வாங்கிய ஸ்மார்ட் போன் கீழே விழுந்து உடைந்தால் நம் மனதும் சுக்கு நூறாகாதா?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் பழைய செய்திதான். என்றாலும் சொல்கிறேன். நம் ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க, அதில் காற்றுப் பைகளைப் பொருத்தலாம் என ஓர் அசாத்தியமான அல்லது அபத்தமான(!) யோசனையை மொழிந்து அதற்குக் காப்புரிமையையும் பெற்று விட்டார் அமேசான் நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஜோஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/10/18/airbag-for-cellphone/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-658283304994685732?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/658283304994685732/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/658283304994685732'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/658283304994685732'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/10/blog-post.html' title='காற்றடைத்த பையடா!'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5800412716671722471</id><published>2011-08-29T20:42:00.000+05:30</published><updated>2011-08-29T20:42:27.051+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பார்லிமெண்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்ணாவிரதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லோக்பால்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ராம்லீலா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மகாத்மா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹசாரே'/><title type='text'>ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Lg0R7zjYcmY/TlurRKqyl6I/AAAAAAAAAK8/Em5iqBLK1qI/s1600/anna-hazare.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="133" src="http://2.bp.blogspot.com/-Lg0R7zjYcmY/TlurRKqyl6I/AAAAAAAAAK8/Em5iqBLK1qI/s200/anna-hazare.jpg" width="200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தோனி சிக்ஸர் அடித்து, இந்தியா உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட ஆரவார சந்தோஷத்தை விட அதிகமாக இருக்கிறது இப்போதைய ஒட்டு மொத்த தேசத்தின் ஆனந்தமான உற்சாகம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதன் கேப்டன், ஆல் ரவுண்டர், மேன் ஆப் தி மேட்ச், மேன் ஆப் தி சீரியஸ்... எல்லாம் அன்னா ஹசாரே.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் தோனியைப் போல சிக்ஸர்களை விளாசாமல், அமைதியாக, தீட்சண்யமாக தடுப்பாட்டம்தான் ஆடினார். இவர் மீது குற்றச்சாட்டுகள், நடவடிக்கைகள்... இன்னும் என்னன்னவோ பெளன்சர்களாக, யார்க்கர்களாக வீசப்பட்டன. ஆனால் பெயர்ந்ததென்னவோ எதிரணியின் விக்கெட்டுக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;மிக அபூர்வமாக ஒட்டு மொத்த தேசத்தின் கவனமும் பார்லிமெண்டின் மீது குவிந்திருக்கிறது என்று அங்கே நிதியமைச்சரின் குரல் ஒலித்தது. இதற்கு அடிப்படை மக்களின் இயக்கம், தர்க்கங்களைக் கண்டு பொதுவாக ஒதுங்கும் நடுத்தர வர்க்கங்களின் எழுச்சி, அதை தலைமையேற்று நடத்திய மாமனிதர் ஹசாரே.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை பார்லிமெண்டில் அமளி துமளிகளை, சட்டை பேப்பர் கிழிப்புகளை, வெளி நடப்புகளை மட்டும் செய்திச் சானலில் பார்த்திருந்த சாமான்ய இந்தியன், வரலாறு காணாத வகையில் ஒரு தீர்க்கமான விவாதம், ஒரு முழு நாளுக்குத் தொடர்ந்து நடைபெறுவதை, நேரடி ஒளிபரப்பில் பெருமை பொங்கப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுத்துக்களை விட, சொற்களை விட, மெளனமும் முறுவலும் கூட வலிமையானவை என ஹசாரே பறைசாற்றினார்.&lt;br /&gt;&lt;br /&gt;மைதான மேடையில், சோர்வை வெளிக்காட்டாமல், தலையணைமேல் அதை விட மிருதுவாகப் படுத்திருந்து அவர் போராடிய காட்சியே, மொழிகளைக் கடந்து, மாநிலங்களை இணைத்து, இந்தியனை அவர் பின் அணிவகுக்க உசுப்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அவரின் பிரதான கோரிக்கைகளுக்கு பாராளுமன்றம் முதற்படி ஒப்புதலை அளித்திருக்கிறது. மக்களின் விருப்பமே, பாராளுமன்றத்தின் விருப்பம் என பிரதமர் வழி மொழிந்திருக்கிறார். ஊழலற்ற பாரதத்திற்கான நம்பிக்கை கீற்றொளி, கடைகோடி இந்தியனுக்கு இப்போது தென்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலவித விமரிசனங்கள் ஹசாரே மீது இறைக்கப்பட்டன. ஆனால் எதற்கும் அசையாமல், எந்தவொரு அரசியல் அதிகார பலமும் இன்றி, வயோதிகத்தின் தளர்ச்சிகளையே முடிச்சுகளாக்கி, வைராக்கியத்துடன் அவர் நடத்திய போராட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் நடத்தப்பட்ட பாடம்.&lt;br /&gt;&lt;br /&gt;பூனைக்கு மணி கட்டிய ஹசாரே, தோனி சிக்ஸர் அடித்த போது காட்டிய நிதானத்தைவிட, பல மடங்கு நிதானத்தைக் கடைபிடித்து, “இப்போது உண்ணா விரத்தை முடித்துக் கொள்ளவா?” என மக்களிடம் பண்பட்ட விதத்தில் கேட்டு ஒவ்வொருவருக்காகவும் நன்றி தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், நாம்தான் கோடிகளில் நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த மகாத்மாவிற்கு.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5800412716671722471?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5800412716671722471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_29.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5800412716671722471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5800412716671722471'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_29.html' title='ஹிப் ஹிப் ஹூர்ர்ர்ரே... ஹஸாரே'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Lg0R7zjYcmY/TlurRKqyl6I/AAAAAAAAAK8/Em5iqBLK1qI/s72-c/anna-hazare.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-7397806784845978065</id><published>2011-08-25T17:05:00.000+05:30</published><updated>2011-08-25T17:05:12.820+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கம்ப்யூட்டர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபராதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லைப்ரரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>அபராதம் - இது ரொம்ப ஓவர்!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-YVERsRtqhWM/TlXPE46QR9I/AAAAAAAAAK4/sRibTjFasm8/s1600/25paise1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/-YVERsRtqhWM/TlXPE46QR9I/AAAAAAAAAK4/sRibTjFasm8/s1600/25paise1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என் கல்லூரிக் காலம் - 1993. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு மெல்ல துளிர்விட்ட காலம். டிஜிட்டல் லாஜிக் கேட்ஸ்-தான் எங்களுக்குப் பிரதான பாடம். அண்ட், ஆர், நாட் - லாஜிக் கேட்ஸ்-ஐ புரிந்து கொள்ளவே எங்களுக்குப் பல வகுப்புகள் தேவைப்பட்டது. யாரேனும் எக்ஸார், எக்ஸ்னார் என்று அடுத்த கேட்ஸ்-களைப் பற்றிப் பேசினால் அவன் பில் கேட்ஸ்-ஐ விட பெரிய பிஸ்தா!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ராணி காமிக்ஸ் அளவு இருந்த லாஜிக் கேட்ஸ் புத்தகத்தைப் படிக்கவே சக மாணவர்கள் திணறும் போது, கல்லூரி லைப்ரரி-யிலிருந்து 'டிஜிட்டல் டேட்டா கம்யூனிகேஷன்ஸ்' என்று ஒரு நானூறு பக்க புத்தகத்தை நான் எடுத்துவர, நண்பர்களின் காது சிக்கு புக்கு ரயில் பிரபுதேவா கணக்காகப் புகைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, இந்தப் புத்தகத்தை வைத்து கொஞ்சம் பந்தா பண்ணலாம் என நினைத்தேன். தினமும் கல்லூரியினுள் நுழையும் போது, &amp;nbsp;பளபள அட்டையைக் கொண்ட இப்புத்தகத்தை தகத்தகாய கதிரவனின் கதிர்கள் பட்டுத் தெறிக்கும்படி கையிலேயே பிடித்துக் கொண்டு, அன்று புரிந்தோ புரியாமலோ மனனம் செய்த ஓரிரு வாக்கியங்களை வைத்து இல்லாத பொல்லாத வியாக்கியானங்களை அளந்து பொளந்து கட்டி எல்லாருடைய மண்டையையும் காய வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எச்செயலைச் செய்தாலும் முழுமையாக செவ்வனே செய்” என்று ஆன்றோர்கள் சொல்லிக் கொடுத்தார்கள் இல்லையா! அதன்படி லைப்ரரி புத்தகத்தை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்ட பத்து நாளும் பந்தாவைத் தொடர கங்கணம் கட்டிக் கொண்டேன். துரதிஷ்டவசமாக பத்தாம் நாள் ஜூரம் அடிக்க லீவு எடுக்க வேண்டியதாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நினைத்தே லைப்ரரிக்குச் சென்றேன். உடல் நலமில்லாததால் நேற்று திருப்பித் தர முடியவில்லை என நூலகரிடம் விளக்க, அவர் சரியென புத்தத்தை வாங்கிக் கொண்டார். “ஃபைன் சார்?” என்றேன். “பாத்துக்கலாம்” என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். அடடா, எவ்வளவு நல்ல மனிதர் இவர்! உடல் நலமில்லை என்று சொன்னால் எவ்வளவு கரிசனத்துடன் நடத்துகிறார் என மெய் சிலிர்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடங்கள் சூடுபிடிக்க, தேர்வுகள் நெருங்கிவர மீண்டும் லைப்ரரியிலிருந்து புத்தகம் எடுப்பதே மறந்து போனது. &amp;nbsp;ஆண்டு தேர்வு மணியடிக்க, ஹால்-டிக்கெட் வாங்க முனைந்த போதுதான் நோ-ட்யூ சர்டிஃபிகேட்-இல் நூலகரானவர் ஒரு நாள் தாமதத்திற்கான அபராதத்தை நிரப்பியிருந்தது தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அபராதத்தை கல்லூரி வளாகத்தினுள் இயங்கும் ஒரு வங்கியின் கிளையில்தான் செலுத்த வேண்டும். வகுப்பை கட் அடித்ததற்கு ஃபைன், தேர்வில் முழுக்கு போட்டதற்கு ஃபைன், லேப்-இல் எதையாவது உடைத்ததற்கு ஃபைன் என பல காரணிகளால் க்யூ நீண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஃபைன் கட்ட நிற்பதும், செய்த முன்வினையும் (பந்தா) கல்லூரி முழுக்க பரவி விட்டது. (சில காரணங்களால் நான் பிரபலம். ஆனால் காரணத்தை இங்கே சொல்ல மாட்டேன்!). கூட்டம் கூடி விட்டது. நான் கவுண்டரை நெருங்கும் போது தரதரவென என்னை இழுத்து வந்து, மீண்டும் க்யூவின் கடைசியில் நிற்க வைத்தார்கள். ஒரு முறையல்ல, இரு முறையல்ல... எட்டு முறை!&lt;br /&gt;&lt;br /&gt;மதிய இடைவேளை குறுக்கிட, கவுண்டர் மூடப்பட்டது. அவசர அவசரமாய் உணவை முடித்து, முதல் ஆளாக வந்து கவுண்டரை கெட்டியாகக் கட்டிக் கொண்டேன். பின் வந்தவர்கள் என் இரு கால்களையும் தூக்கி தேர் வடம் போல இழுத்தார்கள். இன்னும் சில நொடிகள் கடந்தால் கவுண்டர் பெயர்ந்துவிடும். நல்லவேளை. மதிய ஷிஃப்டிற்கான கேஷியர் அம்மணி அங்கு வர அந்த இடமே கப்சிப்.&lt;br /&gt;&lt;br /&gt;நகருக்கு வெளியே இயங்கும் இந்த ஆண்கள் கல்லூரியில் அவர் மட்டுமே பூச்சூடுபவர். வகுப்பறையில் அலப்பறை செய்யும் மாணவர்கள் எல்லாம் கவுண்டரின் முன் நல்லொழுக்கம் பேணுவர். அதுவரை வாரப்படாத கேசங்கள் எல்லாம் சீப்போடு குலவிக் கொள்ளும். இஸ்திரி பெட்டியின் கதகதப்பை உணராத சட்டைகள் எல்லாம் எப்படியோ நேர் செய்யப்படும். அந்த அம்மணியின் புண்ணியத்தில் என் கால்கள் தரையிறங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பெருமூச்சு விட்டு சலானையும், தொகையையும் நீட்ட, பூவிழியாள் தீவிழியாள் ஆனார். நான் வெட்கித் தலை குனிந்தேன். அருகில் இருந்தவர்கள் குபீரென எழுந்த சிரிப்பை அடக்க முயன்றனர். ‘டொம்’ என்று குத்தப்பட்ட ரிசீவ்ட் சீல்-இன் சப்தத்தில் அம்மணியின் கோபம் தெறித்தது. தள்ளி நின்றவர்கள் வாய்விட்டு அலறி கண்ணீர் மல்கிச் சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏனென்று கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சலானை எல்லாம் நிரப்பி, கஜினி முகமது போல் படையெடுத்துப் போராடி, தீவிழி தாங்கி நான் கட்டிய ஒரு நாள் அபராதத் தொகை:&lt;br /&gt;&lt;br /&gt;இருபத்தி ஐந்து பைசா!!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-7397806784845978065?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/7397806784845978065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_25.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7397806784845978065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7397806784845978065'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post_25.html' title='அபராதம் - இது ரொம்ப ஓவர்!'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-YVERsRtqhWM/TlXPE46QR9I/AAAAAAAAAK4/sRibTjFasm8/s72-c/25paise1.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-4672745922038665831</id><published>2011-08-05T16:10:00.000+05:30</published><updated>2011-08-05T16:10:17.895+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெஸ்ட் இண்டீஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முரளீதரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லாட்ஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.பி.எல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இங்கிலாந்து'/><title type='text'>முரளீதரனின் காயின் பால்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7emutb="211"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Yt2LZ--n60o/TjvH3PBlmFI/AAAAAAAAAK0/jQuwxKh5I0A/s1600/muralidaran.jpeg" imageanchor="1" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/-Yt2LZ--n60o/TjvH3PBlmFI/AAAAAAAAAK0/jQuwxKh5I0A/s1600/muralidaran.jpeg" t$="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;“நத்திங் ஈஸ் இம்பாசிபிள் ஃபார் முரளி”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7emutb="193"&gt;&lt;div closure_uid_skuli0="271"&gt;என்.டி டிவியில் இப்படி ஒரு தலைப்புடன் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. ரிடையர் ஆன பிறகு அப்படி என்ன செய்துவிட்டார் முரளீதரன்?! சற்று அசுவாரஸ்யமாகத்தான் செய்தியைப் பார்த்தேன். இங்கிலாந்து ஸ்பின் பெளலர் ஸ்வானும் முரளீதரனும் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டனர். சுற்றிலும் வீடியோ, ஃபோட்டோகிராஃபர்கள். மூன்று ஸ்டம்புகள் நடப்பட, ஆஃப் ஸ்டம்பின் மேல் ஒரு கண்ணாடி டம்ளர் வைக்கப்பட்டது. அதன் ஆஃப் சைட் விளிம்பில் சற்று வெளித்தள்ளி ஒரு நாணயம் வைக்கப்பட்டது. புரிந்துவிட்டது! சின்ன வயசில் ஒரு கதை படித்தோமே! தன் புத்திரனின் தலையில் ஒரு ஆப்பிள் வைக்கப்பட அதை குறி தவறாமல் பிளந்த வில்லாளனின் கதை! அது மாதிரி இது ஒரு போட்டி. சுவாரஸ்யம் தட்டுப்பட சீட்டு நுனிக்கு நகர்ந்தேன். &lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இருவரும் தலா இரண்டு பந்துகள் வீசினர். பந்து எதன் மேலும் படவில்லை. மூன்றாவது முயற்சியாக முரளீதரன் பந்து வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே விழுந்த பந்து, அழகாக ஸ்பின் ஆகி, கண்ணாடி டம்ளரை உரசுவது போல் ஆனால் அதை தொட்டுவிடாமல் எழும்பி காயினை மட்டும் தட்டிச் செல்ல, அங்கு ஒரே ஆரவாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்பு விடுவதைவிட பந்து விடுவது எவ்வளவு கடினம்! குஷியில் நானும் கை தட்டி குதிக்க, சத்தம் கேட்டு அங்கு வந்த என் தந்தை, ரீ-ப்ளே-வை ரசித்து விட்டு, பழைய கிரிக்கெட் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். அவை:&lt;br /&gt;&lt;br /&gt;1950-60. பத்து வருடத்தில் இரண்டு மூன்று முறை இங்கிலாந்திற்கு இந்தியா டூர் சென்றிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம பேட்ஸ்மென்களின் வேகம் நம்மை அலற வைத்த காலம் அது. அவுட் ஆவதில்! மதிய இடைவேளைக்குள் 56 ரன்னுக்குள் சுருண்டனர். உண்ட உணவு செரிப்பதற்கு முன்பே சாயங்காலத்திற்குள் 86 ரன்கள் எடுத்து சற்று நீட்டிச் சுருண்டனர். ஒரே நாளில் தன் இரண்டு இன்னிங்ஸையும் முடித்த பெருமையெல்லாம் இந்தியா கொண்ட காலம் அது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பேட்ஸ்மேன் குலாம் அஹமது. லாட்ஸ் மைதானத்திற்கு வெளியே ஒரு மணிக்கூண்டில் கடிகாரம் தெரிய, இதனை நான் சிக்ஸர் அடித்து உடைக்கிறேன் என்று சவால் விட்டார். இங்கிலாந்து பெளலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இது தெரிய, எல்லோரும் பகபகவெனச் சிரித்தனர். அந்த டெஸ்ட் மாட்சில், இவருக்கு ஸ்பெஷலாக பெளன்சர்கள், பம்பர்கள் வீசப்பட்டன. குலாம் அசரவில்லை. உறு மீனுக்கான கொக்கு போல, சரியான பந்திற்குக் காத்திருந்து, முழு பலங்கொண்டு அடிக்க கடிகாரம் தூள் தூள். குலாம் சொல்லி அடித்த கில்லி.&lt;br /&gt;&lt;br /&gt;1963.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மாட்ச். 5-ம் நாள். இங்கிலாந்து பாட்டிங்.&lt;br /&gt;&lt;br /&gt;வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன், கண்களில் சூரிய ஒளிக்குச் சொந்தக்காரர் என வருணிக்கப்பட்ட ஃபாராங் ஒரல். தனி நபரின் அதிகபட்ச ஸ்கோராக 375 ரன்னை வெகு காலத்திற்கு முடிசூடிக் கொண்ட காரி சோபர்ஸ் அப்போது சின்னப் பையன். வெஸ்ட் இண்டீஸின் வேகப் பந்து வீச்சிற்கே முன்னோடிகளான வெஸ் ஹால் மற்றும் சார்லி கிரிஃபித்; இருவரும் கடுமையாக பந்து வீசிக் கொண்டிருந்தனர். எந்த அணியும் வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை. ஹாலின் பந்து வீச்சில், இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேன் காலின் கெளட்ரி-இன் கை உடைந்துவிட அவர் வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஹால் அசகாய சூரர். சென்னையில் நடந்த ஒரு டெஸ்ட்டில் முதல் பந்தை அவர் பெளன்சராக வீசினார். குத்தினார் என்று சொல்வதே சரி. அந்தப் பந்தை எல்லாரும் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது. ராக்கெட்டென எழும்பிய பந்து பேட்ஸ்மேனைத் தாண்டி, விக்கெட் கீப்பரைத் தாண்டி, ஏன் எல்லைக் கோட்டையையும் தாண்டி சைட் ஸ்கிரீனின் மீது மோதித்தான் விழுந்தது! கிரிக்கெட் வரலாற்றில் பை-யில் சிக்ஸர் சென்றது இது மட்டுமே என நினைக்கிறேன்!&lt;br /&gt;&lt;div closure_uid_7emutb="195"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;அப்படிப் பட்ட ஹாலும், அவருக்கு எந்த விதத்திலும் குறையாத கிரிஃபித்தும் மற்ற பெளலர்களுக்கு உடல் நலமில்லாததால் அவர்கள் இருவராகவே காலை முதல் மாறிமாறி பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஹால் சோர்ந்து போனார். ஒரல் பந்து வீச சோபர்ஸ்-ஐ அழைக்க, பெரு மூச்சு விட்ட ஹால், அந்த ஓவர் முடிந்ததுமே அதிர்ந்து போனார். சோபர்ஸ்-ஐ ஒரு ஓவர் வீச வைத்ததே, ஹாலும் கிரிஃபித்தும் தங்கள் பந்து வீசும் சைடுகளை மாற்றி மீண்டும் வீசத்தான்! ஹாலுக்கு பிலுபிலுவென கோபம் வந்துவிட்டது. தன் ஆறடி இரண்டங்குல உடலை முறுக்கிக் கொண்டு, முறைத்துக் கொண்டு ஒரலிடம் சண்டை போட்டார். பந்து வீச முடியாதென கறாராகக் கத்தினார். அவர் கத்தி முடிக்கும் வரை அமைதி காத்த ஒரல், ஒரு முறுவலைச் சிந்தி, ஹாலின் முதுகில் செல்லமாத் தட்டி, புகழ்பெற்ற வாசகத்தை உதிர்த்தார்:&lt;br /&gt;&lt;br /&gt;“ஜஸ்ட் கோ பாக் அண்ட் பெளல் அகெய்ன்”&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகளின் தொணியும், கண்களின் ஒளியும் கட்டிப் போட, நாய் வாலெனத் தலையாட்டியபடியே மீண்டும் பந்து வீசத் தொடங்கினார் ஹால்.&lt;br /&gt;&lt;br /&gt;ரன்கள் குவிந்தன. விக்கெட்டுக்கள் சரிந்தன. கடும் போட்டி. ஒன்பதாவது விக்கெட்டும் வீழ்ந்தது. இன்னமும் ஒரே ஒரு ஓவர் பாக்கி. இங்கிலாந்திற்கு வேண்டிய ரன்கள் ஐந்தோ ஆறோ. ஏற்கனவே காலின் கெளட்ரி கை உடைந்து சென்று விட்டதில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றதாகவே நினைத்தனர். ஆனால் யாருமே எதிர்பாரா வண்ணம் வலக்கை முழுக்க மாவுக் கட்டுடன், இடக்கையில் குச்சிபோல பேட்டை பிடித்துக் கொண்டு கெளட்ரி மீண்டும் களமிறங்கினார். எல்லாரும் வாய் பிளக்க ஹாலை எதிர் கொள்ளத் தயாரானார்.&lt;br /&gt;&lt;br /&gt;பந்து வீச தன் நீண்ட ரன் அப்-இல் நடக்கத் தொடங்கினார் ஹால். &lt;br /&gt;&lt;br /&gt;யாருடைய வெற்றியையும் ஜீரணிக்க முடியாது. காலை முதல் தொடந்து வீசும் ஹாலின் பந்தில் வெற்றி ரன் எடுப்பதை ஏற்க முடியாது. கை உடைந்தும் திட சித்தத்துடன் இடக் கையில் விளையாட வந்த கெளட்ரியின் விக்கெட் பெயர்வதை பார்க்கவும் முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளர்களின் இதயம் லபோதிபோ-வென அடிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;ரன் அப்-இல் கடைசி ஸ்டெப் வைத்து, பந்து வீச ஹால் திரும்ப அது நிகழ்ந்தது. அதுவரை வெளுத்திருந்த வானம் சோ-வெனக் கொட்டித் தீர்க்க, கடைசி ஓவர் வீச முடியாததில் மேட்ச் ட்ரா.&lt;br /&gt;&lt;br /&gt;ஃபிட்டிங் எண்ட். இறைவனுக்கே யார் தோற்பதும் பொறுக்கவில்லை என்றெல்லாம் பத்திரிக்கைகள் எழுதித் தள்ளின.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div closure_uid_7emutb="198"&gt;இப்படிப்பட்ட ஆச்சரியங்களும், சுவாரஸ்யங்களும் கொண்ட கிரிக்கெட்டை, வியாபாரமயமாக்கி கெடுத்துவிட்டது ஐ.பி.எல்.&lt;/div&gt;&lt;div closure_uid_7emutb="198"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div closure_uid_7emutb="198"&gt;&lt;a href="http://kanchiraghuram.blogspot.com/2010/04/blog-post.html"&gt;ஐ.பி.எல் எல்லாம் ஜுஜுபி&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-4672745922038665831?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/4672745922038665831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4672745922038665831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4672745922038665831'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/08/blog-post.html' title='முரளீதரனின் காயின் பால்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Yt2LZ--n60o/TjvH3PBlmFI/AAAAAAAAAK0/jQuwxKh5I0A/s72-c/muralidaran.jpeg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-7498877280945238859</id><published>2011-07-12T20:17:00.000+05:30</published><updated>2011-07-12T20:17:17.173+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அக்வேரியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அட்லாண்டிஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மீன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>அடடா துபாய் - 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்</title><content type='html'>அந்த ஜெல்லி மீனைப் பார்ப்பதற்கு ஆச்சர்யமாக இருந்தது! பெல்லி மீன் என்றும் சொல்லலாம். வயிறு மட்டும்தான் இருக்கிறது. கண், காது என மெய்ப்புலன்களில் நான்கைக் காணோம். மீனின் உருவம் குடை போல, பூ போல இருக்கிறது. அதன் நடுவே பஞ்சுப் பிஞ்சாய் உறுப்புகள். விளிம்புகளில் ஓரங்குல இடைவெளியில் ஓரடி நீளத்திற்கு நார் போன்ற உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிசின் இருக்கிறதா எனத் தெரியவில்லை. அசினின் ஷாம்பு விளம்பரத்தில் கூந்தல் வழுக்கிக் கொண்டுச் செல்வதைப் போல, சக மீன்களின் உறுப்புகளோடு சிக்கிக் கொள்ளாமல் வழுக்கிக் கொண்டு நீந்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/07/12/dubai-5/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-7498877280945238859?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/7498877280945238859/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/07/5.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7498877280945238859'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7498877280945238859'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/07/5.html' title='அடடா துபாய் - 5 : அட்லாண்டிஸ் அதிசயங்கள்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5758574873432412813</id><published>2011-06-29T16:36:00.000+05:30</published><updated>2011-06-29T16:36:43.009+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின் லாடன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாகிஸ்தானி'/><title type='text'>அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;லேன் மாறிச் சென்று விட்டது நான் சென்ற டாக்ஸி. அரை நொடியில் சுதாரித்த டிரைவர், படு எக்ஸ்பர்ட்டாக சரியான லேனுக்குத் திருப்பி விட்டார். இருப்பினும் சாலையைக் கண்காணிக்கும் கேமரா, ராடாரில் சிக்கியிருப்போம் என நினைத்து பெரு மூச்சு விட்டார். வேகத்திலும் கட்டுக்கோப்பாக வாகனங்கள் சீராகச் செல்லும் துபாய் சாலையில் இதுபோன்ற தவறு அபூர்வம். சற்று நிதானித்து கேட்டு விட்டேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/06/26/dubai-4/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5758574873432412813?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5758574873432412813/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/4.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5758574873432412813'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5758574873432412813'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/4.html' title='அடடா துபாய் – 4 : தமிழ் பேசிய பாகிஸ்தானி!'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-323706437877520259</id><published>2011-06-23T19:58:00.000+05:30</published><updated>2011-06-23T19:58:08.266+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலைவனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பர்ஜ் கலீபா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஒன், டூ, த்ரீ, ஃபோர்… உலகின் அதிவேக லிஃப்டினுள் மானிட்டர், வினாடியைவிட வேகமாய் எண்ணிக்கையை காட்டத் தொடங்கியது. அதன் பின்புறத்தில் மேகங்கள் கீழிறங்குவது போல் அனிமேஷன். சரி, லிஃப்ட் புறப்படப்போகிறது என நினைத்தேன். சில நொடிகளில், விமான டேக் ஆஃப்-இல் நிகழ்வது போல காதடைத்த போதுதான் லிஃப்ட் நகர்வதே உறைத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/06/22/dubai-3/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-323706437877520259?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/323706437877520259/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/323706437877520259'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/323706437877520259'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/3.html' title='அடடா துபாய்! – 3 : கலிகால இந்திரப்பிரஸ்தம்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-8399917247466670163</id><published>2011-06-15T14:53:00.000+05:30</published><updated>2011-06-15T14:53:36.360+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலைவனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;அறுபதடிக்கும் மேல் சரிவான பெரும் மணல் பள்ளம். அதன் உச்சியில் சறுக்கி சிக்கிக் கொண்டு நின்றது எங்கள் டொயோட்டா SUV கார். “எல்லாரும் இறங்கி காரை பின் பக்கமாக இழுங்க” என்றார் டிரைவர். இப்பள்ளத்தில் எப்படி இறங்க முடியும்?! உள்ளிருந்த ஐந்து பேருக்கும் வயிறு பிசைந்தது. வேறுவழியில்லை, இதோ பாருங்க என அவர் ரிவர்ஸ் எடுக்க முயல திணறித்திணறி சரியத் தொடங்கியது கார்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/06/11/dubai-2/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-8399917247466670163?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/8399917247466670163/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/2.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/8399917247466670163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/8399917247466670163'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/2.html' title='அடடா துபாய்! – 2 : பாலைவனத்தில் பெல்லி டான்ஸ்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5014361080235383695</id><published>2011-06-15T14:48:00.000+05:30</published><updated>2011-06-15T14:48:43.546+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='துபாய்'/><title type='text'>அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ஏர்போர்ட்டிலிருந்து அல் பார்ஸாவுக்கு டாக்ஸி 120km வேகத்தில் அநாயாசமாக விரைந்தது. எல்லா டாக்ஸி டிரைவர்களும் நேர்த்தியாக உடுத்தி, டை கட்டி, கூலிங்கிளாசுடன் அமீர்கான் கணக்காகத் தெரிகிறார்கள். தொலைவில் ஒரு போர்டு. டோல் கேட். ஏற்கனவே ஐந்து லேன் இருக்கும் சாலை, இன்னமும் விரிய, ஸ்பீட் பிரேக்கர்கள் தாண்டி, சுங்கம் வசூலிக்கும் பூத்துக்கள் இருக்கும் என நினைத்தேன். (நம்ம ஊரில் அப்படித்தானே இருக்கிறது). ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/05/29/dubai-1/"&gt;மேலும்...&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5014361080235383695?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5014361080235383695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/1.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5014361080235383695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5014361080235383695'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/06/1.html' title='அடடா துபாய்! -1 : துபாய் மெயின் ரோடு!!'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5162074180393326495</id><published>2011-05-09T20:45:00.001+05:30</published><updated>2011-05-09T20:46:39.412+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாடா மார்கோபோலோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வசதி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='யூஸபிலிட்டி'/><title type='text'>யூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;‘இன்று’ வலைத்தளத்தில் எனது பதிவு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;அப்பாடா… சென்னை மாநகரப் பேருந்துகளிலேயே முதன் முறையாக, முன் சீட்டில் கால் முட்டி உராய்ந்து ஜிவுஜிவுக்காமல் நிம்மதியாக அமர முடிந்தது. கால்களுக்கும் மனமுண்டு என அதற்குரிய இடவசதியைத் தந்த பேருந்து, இப்போது சென்னையில் பரவலாக ஓடத் தொடங்கியிருக்கும் டாட்டாவின் மார்கோபோலோ.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/05/08/bus-with-usability/"&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;மேலும் படிக்க...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5162074180393326495?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5162074180393326495/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/05/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5162074180393326495'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5162074180393326495'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/05/blog-post.html' title='யூஸபிலிட்டியுடன் ஒரு பேருந்து – டாடா மார்கோபோலோ'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-2403173959508017666</id><published>2011-04-15T18:08:00.000+05:30</published><updated>2011-04-15T18:08:46.770+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதிர் வீச்சு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அணு மின்நிலையம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாதுகாப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அபாயம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்பாக்கம்'/><title type='text'>கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பிரபல எழுத்தாளர்கள் எழுதும் ‘இன்று’ வலைத்தளத்தில் வெளியாகியிருக்கும் எனது கட்டுரை.&amp;nbsp; வெளியிட்டமைக்கு சத்யராஜ்குமார், சித்ரன் இருவருக்கும் நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;கான்கிரீட் கலவையைக் கொட்டியாவது அணுவின் கதிர்களைக் கட்டுப்படுத்த ஜப்பான் நினைக்கிறது.&amp;nbsp; திறமைக்கும், உழைப்பிற்கும், அரசு விசுவாசத்திற்கும் பெயர் பெற்ற ஜப்பானிற்கே இக்கதியென்றால்... நமது கூடங்குளம், கல்பாக்கத்தின் நிலை?&amp;nbsp; அதுவும் நாம் கண்ட சுனாமியின் ரணங்கள் இன்னமும் ஆறாத போது?&amp;nbsp; ஒரு சாமான்ய மனிதனாய் என் மனமும் சலனப்பட்டது.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: #b6d7a8; color: black;"&gt;சமீபத்தில் என் உறவினர் வீட்டிற்குச் சென்றபோது நடந்த ஒரு சிறு சம்பவம் என் சலனத்தை கடலாக்கியது.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span style="background-color: #b6d7a8;"&gt;&lt;a href="http://inru.wordpress.com/2011/04/05/kalpakkam-safety/"&gt;மேலும் படிக்க...&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-2403173959508017666?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/2403173959508017666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/04/blog-post_15.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/2403173959508017666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/2403173959508017666'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/04/blog-post_15.html' title='கல்பாக்கம் அணு மின் நிலையம் பாதுகாப்பானதா?'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-4630056533457838239</id><published>2011-04-01T18:39:00.000+05:30</published><updated>2011-04-01T18:39:02.313+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மென்பொருள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரா. முருகன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மூன்று விரல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாவல்'/><title type='text'>இரா. முருகனின் “மூன்று விரல்”</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html" style="clear: left; cssfloat: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" r6="true" src="http://4.bp.blogspot.com/-KwI8atOW5Xw/TZXN3e21HKI/AAAAAAAAAJk/24k-M02o1WY/s1600/moondru_viral_b.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கணினித்துறையில் இருந்தபடியே எழுத்துலகில் கோலோச்சும் இரா. முருகன் அவர்களின், அத்துறையின் வாழ்வு தழுவிய நாவலே “மூன்று விரல்”.&lt;br /&gt;&lt;br /&gt;மென்பொருள் உலகின் மாயைகளை, நிலையற்ற தன்மைகளை, குறுகிய கால ஏற்றங்களை, படுபாதாள வீழ்ச்சிகளை, கூடிப் பிரியும் நட்புகளை, ஈரமற்ற மனங்களை, நாயகன் சுதர்சனனின் பயணத்தில் கோர்வையான நிகழ்ச்சிகளாகத் தொகுத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் பக்கமே மென்பொருள் உலகின் பாதக முகத்தை, அதன் ஒப்பனையை பட்டவர்த்தனமாக வெளுக்க வைக்கிறது. நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான சாஃப்ட்வேரில் துவங்கும் கதை, பாத்திரங்களை விற்பவர்கள் கூட தங்களுக்கும் ஒரு சாஃப்ட்வேர் வேண்டுமென்பதும், அதையே சாக்கிட்டு பெட்டிக்கடைகள் கூட, சில கம்ப்யூட்டர்களை வைத்தே சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் கம்பெனியென சுயபட்டம் சூட்டிக் கொண்ட காலகட்டத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் களமும் போக்கும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. மென்பொருள் துறையைச் சார்ந்ததென்றாலும், ஒரு மென்பொருளாளன் (சுருக்கமாக... மென்னவன்!) அனுதினமும் கணினியே கதியெனக் கிடப்பது போல், அத்துறையின் வலைகளிலேயே சிக்கிவிடாமல், கிராமம், காதல், பல மனிதர்களின் முகங்கள்/மனங்கள் எனப் பல துடுப்புகளுடன் பயணிக்கிறது கதை. அதே கணம் அத்துறையின் கீழ் நிலைகளை கோடிட்டுக் காட்டவும் அது தவறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதாரணம். சுதர்சன் தன் கிராமத்து வீட்டில் நுழையுமிடம். வாழ்வு முழுவதும் ஆனந்தமாக இருக்கத்தான், சீரான இடைவெளியில் பண்டிகைகளைக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வகுத்திருக்கிறார்கள். பெற்றவரை, பிறந்த மண்ணை விட்டு வெகு தொலைவு சென்றுவிடும் மென்னவன் இவற்றை முற்றிலும் இழக்கிறான். அவன் காலண்டரில், சிகப்பில் தேதி ஒளிர்வது புராஜெக்ட் டெட்லைன் மட்டுமே. இவ்வவல நிலையைத்தான் வீட்டினுள் நுழையும் சுதர்சன் மாக்கோலக் கால்களைக் கண்டு “எப்போது கிருஷ்ண ஜெயந்தி வந்து போனது?” எனக் கேட்கும் கேள்வி கோலத்தால் கோடிட்டுக் காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் நெடுகிலும் வரும் உவமைகள் அழகு. நாயகிகள் சந்தியாவும் புஷ்பாவும் ஒருசேர தன்னை கேலி செய்வதாய் சுதர்சன் நினைக்குமிடத்தில், எந்தவொரு பூடகமும் இன்றி நுழையும் ஒற்றை வரி; “இவன் இளைய பல்லவனும் அல்ல. இது சாண்டில்யன் கதையும் அல்ல.” இந்த அட்டகாச சரித்திர உவமை தந்த பாதிப்பிலிருந்து விடுபடவே எனக்கு பல நாழிகை(!) பிடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆங்காங்கே சில விசயங்களை ஆசிரியரின் பேனா உரசுகிறது. அப்துல் கலாமிற்கு வைத்தியம் பார்த்து, அவருடன் எடுத்த படத்தை சுவரில் மாட்டி, தன் சன்மானத்தை உயர்த்தும் டாக்டரைப் போல, பில்கேட்ஸுடன் எடுத்த போட்டோவை வைத்து ட்ரெயினிங் கம்பெனி நடத்துபவர்களை நோக்கி மறைமுகமாகச் சொடுக்கிய சாட்டை சபாஷ். ATL COM கோர்ஸூக்காக நிலங்களை விற்ற நபர்களை நான் கண்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாத்திரங்கள் வெகு நுணுக்கமாகச் செதுக்கப் பட்டிருக்கின்றன. துறைமாட்சி இல்லாமல் சண்டித்தனம் செய்யும் ரங்கா, மனிதர்களை கத்திரிக்காய் கூறாய் விற்கும் கன்சல்டென்சி பலா, அபூர்வ புரொபஷலனாய் ஒளிவிடும் அவ்தார் சிங், மாற்றங்களை இழப்புகளை முறுவலித்து ஏற்கும் லண்டன் ஜெப்ரி, கிளையண்டாக இருந்தும் இக்கட்டில் முதல் நபராய் ஆதரவு நல்கும் தாய்லாந்து குன் தாங்க்லோர்... ம்ஹீம்... எவரையும் விட்டுவிட முடியவில்லை. உடல் பாதிக்கப்பட்டும் உழைக்கும் ராவை, ஒரு இரவில் பணத்தை மட்டும் பிரதானமாகக் கருதும் நீரஜ் மறந்து போகலாம். ஆனால் குழந்தை முக கண்ணாத்தா உட்பட எந்தப் பாத்திரத்தையும் படிப்பவரால் மறக்க முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலம் விட்டு நடுங்கடலில் தத்தளிக்கும் படகைப்போல், தன் புலம் விட்டு, தன் வாழ்வாதாரம் விட்டு விழி பிதுங்கும் மென்னவர்களின் வாழ்க்கையை, இந்த நூல் தெளிவாகக் காட்சிப் படுத்துகிறது. கதையின் முடிவைப் போல் நடந்தவை ஏராளம். ஆனால், இந்நூற்றாண்டின் துவக்கத்தில் நடந்ததை பார்த்தறியாத மென்னவர்கள், முடிவை ஏற்க மறுக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் வாழ்வைக் காக்கவும், இத்துறையின் அபரிமித வளர்ச்சியால் வேறு ரூபங்களில் பாதிக்கப்படும் சமுதாயத்தைக் காக்கவும் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூல்: மூன்று விரல்.&lt;br /&gt;ஆசிரியர்: இரா. முருகன்.&lt;br /&gt;வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை. &lt;br /&gt;URL: &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html"&gt;https://www.nhm.in/shop/978-81-8368-073-8.html&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-4630056533457838239?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/4630056533457838239/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4630056533457838239'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4630056533457838239'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/04/blog-post.html' title='இரா. முருகனின் “மூன்று விரல்”'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-KwI8atOW5Xw/TZXN3e21HKI/AAAAAAAAAJk/24k-M02o1WY/s72-c/moondru_viral_b.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-968647887529549749</id><published>2011-01-24T13:05:00.002+05:30</published><updated>2011-01-24T17:51:25.221+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திசை காட்டிப் பறவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேயோன்'/><title type='text'>பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TT0o66_eSkI/AAAAAAAAAI8/uKwUFpYE1sc/s1600/payon_book.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TT0o66_eSkI/AAAAAAAAAI8/uKwUFpYE1sc/s1600/payon_book.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;புத்தகங்களை வாசிக்கும் அனுபவத்தில் புதியதொரு திசையைக் காட்டுகிறது, ரைட்டர் பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;வரிகளின் ஓட்டத்தை விழிகளால் இடைவிடாமல் தொடர்ந்து, பக்கங்களைப் புரட்டிக் கொண்டேச் செல்வது ஒருவித சுகமென்றால், சில வரிகளைப் படித்ததுமே மனம் அதில் சிக்கி, சற்றுத் திகைத்து, வாய்விட்டுச் சிரித்து (பேருந்தில் படித்தால் வாய் பொத்திச் சிரித்து), பின் படிப்பைத் தொடந்து மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வது மற்றொரு சுகம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பேயோன் தரும் இந்த இரண்டாவது சுகத்தை எழுத்துலகில் கோலோச்சும் ஜெமோ, பாரா போன்றவர்களே சிலாகிக்கிறார்கள் என்றால், மேற்கொண்டு நான் எதைச் சொல்ல? &amp;nbsp;இருப்பினும் இது ஒரு கடைக்கோடி வாசகனின் வாசிப்பனுபவம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பொதுவாக ஒருவரின் தற்புகழ்ச்சியில் நமக்கு எரிச்சலே மிஞ்சும். ஆனால் இவர், எவர் மனதையும் புண்படுத்தாமல் தன்னைத்தானே புகழ்ந்து உயர்த்திக் கொள்வதெல்லாம் சிரிப்புச் சரவெடி. சர்வ நிச்சயமாக இது பேயோனுக்கு மட்டுமே சாத்தியம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பறவை நொடிமுள்ளிலிருந்து திசை காட்டத் தொடங்குகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இணையத்தில் பேயோனை நான் முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியதும், இந்த ‘நொடிமுள்ளின் கதை’-யிலிருந்துதான். எச்சூதுமறியா இளம்பிள்ளையாய் இக்கதையை வாசித்து, அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த புத்தகங்களை கூகுளில் தேடினேன். சொற்களை டைப் அடிக்கத் தொடங்கியதுமே தேடியதை சரமாரியாகக் கொட்டும் கூகுள் விழி பிதுங்கத் தொடங்கியதும்தான் இவை அனைத்துமே பகடி என்பது புரிந்தது. இப்படிக் கூட ஒருவரால் இட்டுக்கட்டி எழுத முடியுமா என்ற பிரமிப்பிலிருந்து விடுபடவே எனக்கு வெகு நேரம் பிடித்தது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அதுமுதல் அவருக்கு வாசக ரசிகனானேன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நிஜங்கள் கசக்கும்போது கற்பனை உலகே நமக்கு மீட்சி. அதை அள்ளிக் கொடுத்த கவிதைகளும் இன்று நிஜங்களுக்கு வந்துவிட்ட பிறகு, பத்திகளால் அனுமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்று நம் மனதை அலசித் தருகிறார் ரைட்டர் பேயோன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இவர் பார்த்து நடந்த ‘பிரெஞ்சுப் புரட்சி’, இவர் பாத்திரம் பிச்சை போட்ட ‘ரஷ்ய புரட்சி’ போன்றவற்றின் பத்திகள் சிரிப்பை வெடிக்க வைப்பதெல்லாம் பதிவுலகில் ஒரு புதிய புரட்சி!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;நுணுக்கமான வரி வார்த்தைகளால் நகைச்சுவையை ஊசியாய் நுழைப்பது போலவே சோகம், பயங்கரத்தையும் நுழைக்கிறார். ‘கனவினூடே’-வைப் படித்த இரவே, ஒரு ஆட்டோவின் ஒவ்வொரு சக்கரத்தின் மேல் பகுதி தனித்தனியாக கழன்று என்னுடலை ஊடுருவிக் கூறுபோடுவதுபோல் எனக்கு கனவு வந்ததென்றால், இதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பிரிமியம் பாண்ட் பேப்பரில் பிராஜெக்ட் ரிப்போர்ட்டை பிரிண்ட் எடுப்பதையே நாங்கள் பெருமையாகக் கருதிய கல்லூரிக் காலங்களுண்டு. ஆனால் ஒரு புள்ளி கூட வைக்காத ஒரு பாண்ட் பேப்பரை வைத்தே ‘அந்த வெற்று காகிதமே’ எழுதியிருப்பது இவரின் கற்பனை ஊற்றுக்குச் சாட்சி என்றால், இனி எழுத எதுவுமே இல்லை என அங்கலாய்க்கும் பதிவர்களுக்கு, இல்லை என்ற ஒரு வார்த்தையை வைத்தே, இல்லை இல்லை என்று சொல்லியே அவர் ‘இல்லை’-யை எழுதியிருப்பது பாலபாடம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பூத உடலின் பயணத்தின் கணங்கள், சிந்தனை உலவின் கணங்களை வரையறுக்க வல்லவை. குறிப்பாக ஒரு தேர்ந்த எழுத்தாளன், தன் ‘சமகால’ எழுத்தாளனை ஒரு பயணத்தில் சந்தித்து கணங்களை பரிமாறிக் கொண்டால் அக்கணமே ஒரு இலட்சத்து எழுபத்தி ஆறாயிரம் சிந்தனைச் செல்கள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்படும்.&amp;nbsp;&amp;nbsp;இப்படித்தான் ஒரு முறை, அண்டார்டிகா நீர்ப்பரப்பிலுள்ள அலக்டோரியா தீவினில் நடக்க இருந்த ‘சமகால எழுத்தரின் கணங்கள்’ மாநாட்டில் கலந்து கொள்ளப் பயணித்தேன். ஒரு ‘கேப் பெட்ரல்’ பறவை திசை காட்டிச் செல்ல, அதன் வெள்ளெச்சம் விழும் தடத்தை ஒற்றிச் சென்ற படகில் என்னுடன் பேயோனும் இருப்பதைக் கண்டு அதிசயத்து...&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஹஹ்ஹஹ்ஹா... வேறொன்றுமில்லை... ‘என்னைப் போல் பத்தி எழுதுவது எப்படி’ படித்ததன் பின்வினையே கடந்து சென்ற நிறைவேறாத பகடிப்பத்தி.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;ஒற்றிலக்க பத்திகளில் ஒரு கதையும், இரட்டையிலக்க பத்திகளில் வேறொரு கதையும் நகர்ந்து, கடைசி பத்தியின் கடைசி வரிகளில் இணையும் ‘அடுத்த வாரத் தொடர்ச்சி’ கிளாசிக்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;அவரின் நினைவுக் கூர்மையும், பார்வைக் கூர்மையுமே அவரின் எழுத்தின் கூர்மைக்கு அடிப்படை. கண்ணின் நிழலில் அசைவதற்குக் கூட சுவாரஸ்ய எழுத்து வடிவம் தருகிறார்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;‘மயிலிறகிற்கு நட்ராஜ் பென்சில் சீவல் பிடிக்கும்’&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;‘உதவுதல் நாடி சுலைமான் அபெக்கேவுக்கு கடிதம்’ போன்ற இடங்கள் இரண்டே இதற்கு அத்தாட்சி.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பறவை ‘சியாமள விகாச பட்சியாய்’ நம்மை விகாசிக்க வைத்து, சிறகுதாரியாய் நம் மனதை சிறகடிக்க வைத்து, ‘வாழும் கணங்களில்’ நிறைகிறது.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;பத்திகளின் வரிசையை மாற்றிப் படித்தாலும் தொடரும் ‘வாழும் கணங்கள்’, உண்மையில் வாசிக்கும் கணங்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;இவரெழுத்தை ஆப்சன்மைண்டட்டாக வாசிக்க முடியாது. இன்னமும் சொல்ல எண்ணிக்கை இருந்தும், இப்பதிவு ‘நெடுங்கதையாகத்’ தொடர்வதால், என்னையும் சேர்த்து ஒற்றையிலக்க வாசிப்பாகும் எனத் தயங்கி, இத்துடன் புள்ளி வைக்கிறேன்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;புத்தக கண்காட்சியில், ஆழி பதிப்பகத்தில் இவர் யாரென்ற புலன் விசாரணை அனுதினமும் நடந்திருக்கும். அங்கே நான் இப்புத்தகத்தைக் கேட்டபோது, அங்கிருந்தவர்கள் என்னை நிமிர்ந்துப் பார்த்தார்கள். ஆனால் நான் ஒரு சொல் வினவாமல், புத்தகம் வாங்கி அமைதியாக நகர்ந்தேன். ஏனெனில்...&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;கடவுளைத் தேடும் வரைதான் ஆராதனைகள். பேயோன் என்ற தேடல் உள்ளவரைதான் அவர் எழுத்து சுவை ஊற்றெடுக்கும் சுனைகளாக இருக்கும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-968647887529549749?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/968647887529549749/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/01/blog-post_24.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/968647887529549749'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/968647887529549749'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/01/blog-post_24.html' title='பேயோனின் ‘திசை காட்டிப் பறவை’'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TT0o66_eSkI/AAAAAAAAAI8/uKwUFpYE1sc/s72-c/payon_book.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-8835947382029336586</id><published>2011-01-17T16:00:00.000+05:30</published><updated>2011-01-17T16:00:43.698+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டியூசன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’</title><content type='html'>“இத்துடன் எல்லா பாடமும் முடிச்சாச்சு. இனி நீ சென்ட்டம் எடுப்பது மட்டுமே பாக்கி” என்றார் என்னுடைய பிரத்யேக டியூசன் வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானூறு பக்க லாங்-சைஸ் நோட்டில் ஸ்கேல் வைத்து அழகாக மூன்று கோடுகள் போட்டு ‘முற்றும்’ எழுதி, ஒரு குருவுக்கு உண்டான மரியாதையுடன் அவருக்கு நன்றி சொல்லி, ஆசி பெற்று, வீட்டிற்குப் புறப்படத் தயாரானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த லாங்-சைஸ் நோட்டு என்னுடைய பிரதான பொக்கிஷம். அதை எடுத்துச் செல்ல தனியாக பேண்ட் துணி வாங்கி, நோட்டின் சைஸூக்கு ஜிப்புடன் ஒரு பை தைத்துக் கொண்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் சுவாசித்த காற்றிலிருந்த ஈரம், மழை பெய்ந்து ஓய்ந்திருப்பதை எனக்கு உணர்த்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;நோட்டை இரண்டு பாலித்தீன் பைகளால் வாட்டர்-ப்ரூஃப் செய்துகொண்டு, பேண்ட்டை(பையை) அதற்கு அணிவித்து, அதை என்னுடைய &amp;nbsp;டி.வி.எஸ் சேம்ப்-பின் ஹேண்டில் பார் கொக்கியில் மாட்டிக் கொண்டு புறப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடைமழை கொட்டி இருந்திருக்கிறது. கட்டிடங்களும், காற்றும் மழையில் நினைந்திருந்தன. வீதிகள்தோறும் நீரோட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.வி.எஸ் சேம்ப்பில் அப்போதுதான் எலட்ரானிக்-ஸ்டார்ட் அறிமுகமாகியிருந்தது. அந்தக் காலத்தில் பரவலாக ஓடிக் கொண்டிருந்த டி.வி.எஸ்-50கள் ஆங்காங்கே நின்று ஸ்டார்ட் ஆகாமல் முனகிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்து, நான் ராசா(!) மிடுக்கோடு காஞ்சி ராஜவீதியில் சென்று கொண்டிருந்தேன். ராஜவீதி, சாண் உயர நீர்வீதியாக இருந்தது. சர்வ ஜாக்கிரதையாகத்தான் வண்டி ஓட்டினேன். ஆனாலும்...&lt;br /&gt;&lt;br /&gt;டொடுக் என்ற சப்தத்துடன் ஏதோ ஒரு பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் பயங்கரமாக இறங்கியது. முழு பிரேக்கையும் பிடித்தேன். வண்டி நிற்கவில்லை. திமிங்கிலம் விழுங்குவது போல எதனாலோ என் வண்டி கீழ் நோக்கி இழுக்கப் பட்டது. காலூன்ற முயன்றேன். பயங்கர அதிர்ச்சி. தரை தட்டுபடவே இல்லை. காலும் கீழே போய்க்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டெனப் புரிந்தது. கடவுளே! திறந்து வைக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடையில், நான் வண்டியுடன் செங்குத்தாக கீழிறங்கிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி உரசிக்கொண்டே சப்தம் எழுப்ப, உடல் முட்டிகள் எதனெதனுடனோ இடிபட, கண்கள் இருட்டிக் கொண்டன. அது பயத்தினாலா? நீரின் நிறத்தினாலா? &amp;nbsp;அது அந்தச் சாக்கடைக்கே வெளிச்சம்!&lt;br /&gt;&lt;br /&gt;“தூக்கு அவன” என்ற குரலைத் தொடர்ந்து திமுதிமுவென நாலைந்து பேர் ஓடி வரும் காலடியோசைக் கேட்டது. அவர்கள் என் தலையைப் பிடித்து, பின் கைகளைப் பிடித்து அலேக்காகத் தூக்கி நிலத்தில் நிறுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கணம் நின்றுவிட்ட உயிர்நாடி மீண்டும் துடிக்கத்தொடங்க, பெருமூச்சு விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதாள சாக்கடையை எதற்காகவோ நான்கு சதுரடிக்கு வெட்டி அப்படியே விட்டு விட்டார்கள். எமகாதகர்கள். வண்டியின் பின் சக்கரம் மட்டுமே தரைக்கு மேல் இருந்தது. அது மெதுவாக ரிவர்ஸில் சுத்திக் கொண்டிருந்தது. பின்விளக்கு அணைந்து அணைந்து எரிந்து என் முகத்தில் சிவப்பொளியைப் பாய்ச்சியது. (நம்பியார் முறைக்கும் போது அவர் முகத்திற்கு ஒரு ரெட்லைட் எஃபெக்ட் கொடுப்பார்களே, அது மாதிரி.)&lt;br /&gt;&lt;br /&gt;வண்டியையும் மீட்டார்கள். முன் பகுதி சற்று நசுங்கியிருக்க, ஹேண்டில் பார் அஷ்ட கோணலாக வளைந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் தம்பி, ஒரு கொம்ப நட்டு, செவப்பு கொடி வச்சிருக்குல்ல. பாத்து வரப்படாது?” ஒருவர் கடிந்துக் கொண்டார். அவருக்கு சாலை ஓரத்தைச் சுட்டினேன். பத்தடிக்கு ஒன்றாய் வரிசையாக கட்சிக் கொடிகள் நடப்பட்டு இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;‘இதுவும் ஒரு கட்சிக் கொடி. கொஞ்சம் நடு ரோட்டுல நட்டுட்டாங்கனு நெனச்சு, நான் பாட்டுக்கு வந்துட்டேன் சார்’ அப்பிராணியாகச் சொன்னேன். (நம்ம ஊர் எல்லா கட்சிக் கொடிகளிலும்தான் சிவப்பு ஒளிருதே!)&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தலையில் அடித்து கொண்டு, “சரி சரி, போய் குளி” என்றார். அப்போதுதான் கவனித்தேன். எங்கள் ஊரில் “செங்கழு நீரோடை வீதி” என்று ஒரு பிரபலமான வீதி உண்டு. ஆனால் இது என்ன கழுநீர் ஓடையோ? &amp;nbsp;அதில் தலைமூழ்கி எழுந்ததில் கார்மேக வண்ணனாகக் காட்சியளித்தேன். தார் வண்ணன் என்றும் சொல்லலாம். அவ்வளவு கருப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாறு சமாளித்து வண்டியைக் கிளப்பினேன். என்னுடல் துர்வாசனையை நாசியால் தாங்க முடியவில்லை. “சே! நம்ம கதாநாயகர்கள் சாக்கடை வழியாக, கவர்னர் / மந்திரி வீட்டுக்குள் நுழைவது, ஹீரோயினை அனாயாசமாக தூக்கிக் கொண்டு வருவது, உள்ளேயே வில்லனுடன் ஒண்டிக்கு ஒண்டி சண்டை போடுவது எல்லாம் எவ்வளவு பெரிய கப்சா?!!” என்று அந்த நிலையிலும் யோசித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிலையை கண்டு பொறுக்காத கார்மேகம் மீண்டும் அடைமழையைக் கொட்டி என்னை குளிப்பாட்டியது(!). வீதி வெறிச்சோடியதால், வண்டியை நிறுத்தி, நடு ரோட்டில் உடம்பை தேய்த்துவிட்டு ஆனந்தமாகக் குளித்தேன் (டிரஸ்சோடுதான்)!&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் பால்வண்ணனாக மாறிய சந்தோசத்தில், ஈரம் சொட்டச்சொட்ட வீடு வந்து சேர்ந்தேன். மரணச் சாக்கடையை முத்தமிட்டுத் திரும்பியவன் என எண்ணிக் கொண்டே, வண்டியை ஸ்டேண்ட் போட்டு, ஹேண்டில் பாரைப் பார்த்த நான் துல்லியமாய் அதிர்ந்தேன்...&lt;br /&gt;&lt;br /&gt;பேண்ட் போட்ட என் ‘மேத்தமேட்டிக்ஸ்’ நோட்டைக் காணோம்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-8835947382029336586?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/8835947382029336586/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/01/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/8835947382029336586'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/8835947382029336586'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2011/01/blog-post.html' title='பேண்ட் போட்டு ‘மேத்தமேட்டிக்ஸ்’'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-7382230340221361214</id><published>2010-12-29T15:48:00.003+05:30</published><updated>2011-01-17T23:20:27.675+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வயல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜல்லிக்கட்டு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><title type='text'>சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத</title><content type='html'>&lt;p$1&gt;&lt;/p$1&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TRsJWiN-zwI/AAAAAAAAAI0/lR_FD9Sowgs/s1600/cow_in_field.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TRsJWiN-zwI/AAAAAAAAAI0/lR_FD9Sowgs/s1600/cow_in_field.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;“அம்மாவ், வுங்க கழனில மாடு பூந்திடிச்சி...” வாசலில் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்திலிருக்கும் உறவினர் வீட்டுக்கு அப்போதுதான் வந்திருந்தேன். மார்கழித் திங்களால் சில்லிட்ட கிணற்று நீரில் முகம் கழுவிக் கொண்டிருந்த போதுதான் அந்தக் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“அது பொல்லாத மாடும்மா, எங்களால ஓட்ட முடியல... நடு கழனில அட்டகாசம் தாங்கலம்மா...” அடுத்தவீட்டுப் பெண்தான்(!) சொல்லிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர் வெளியூர் சென்றிருந்தார். நான் மட்டுமே ஆண்மகன். அந்தக் காளையை அடக்க... இல்லை இல்லை விரட்ட இந்தக் காளையாச்சு என, ஈர முகத்தை அவசர அவசரமாய்த் துடைத்துக் கொண்டு, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு வீராவேசமாக கழனியை நோக்கி ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் வயலும் வயல் சார்ந்த நிலம்தான். வரப்பில் ஓடியபோது அந்த வித்தியாசத்தை உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐ.டி கம்பெனியில் 24 மணிநேரமும் சாக்ஸினூடே ஷூவினுள் புழுங்கும் கால்கள், செருப்பு கூட அணியாமல் கெட்டிப்பட்ட களிமண் வரப்புகளில் பனியுடன் படர்ந்திருந்த புற்களின் மேல் ஓடியபோது, ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு என்னுடல் முழுக்கப் பரவியது.&lt;br /&gt;&lt;br /&gt;14 அங்குல மானிட்டரே உலகம் எனப் பார்க்கும் கண்களுக்கு நிஜமான உலகம் எதிரே விரிந்தது. அதன் பார்வையின் வீச்சுவரை இடுப்பளவு உயர்ந்த பயிர்கள் காற்றில் சலசலத்துக் கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பயிர் நிலங்களைத் தொடர்ந்து குன்றுகளும், அதன் மேல் நிலவை விட குளிர்ச்சியாக சிவப்புச் சூரியனும்... காட்சியின் கவர்ச்சியில் லயித்து அப்படியே நின்றுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சே! ஐ.டி-யால் எவ்வளவு இழந்து விட்டோம். இரவென்றாலும் பகலென்றாலும் டியூப் லைட்டே நமது சூரியன். காலை, மாலை, அந்தி, சந்தி... எதையுமே உணர முடிவதில்லை. சன்னல்கள்கூட அடைக்கப்பட்டுவிட்ட க்யூபிக்கிள்தான் நம்முடைய ஆறடி நிலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி வேட்டியை மடித்துக் கட்டி, துண்டை மட்டும் தோளில் போர்த்திக் கொண்டு, வெறும் கால்களை மண்ணில் ஒற்றி, காற்றை நுகர்ந்து, அண்ணாந்து வான் பார்க்கும் சுகத்தை அடியோடு இழந்துவிட்டதை நினைத்து சோககீதம் மீட்டிக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரீரென வந்த வேலை உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென சுதாரித்து கண்களைச் சுழற்றி மாட்டைத் தேடினேன். எங்கும் காணவில்லை. உறவினரின் நிலத்தை அடையாளம் காணவே சற்று நேரம் பிடித்தது. மெதுவாக அதை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென நன்கு வளர்ந்திருந்த வயல் நடுவிலிருந்து இரு கொம்புகள் சற்று எழும்பித்தாழ...&lt;br /&gt;&lt;br /&gt;‘ஆஹா... அவனா நீ...’ என்று கூச்சலிட்டபடி அங்கே பாய்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் வயலை அடைய, அதுவும் வெளி வர, நேருக்குநேர் சந்தித்துக் கொண்டதில் ஜல்லிக்கட்டு முரசு கொட்டியது. அது சாதுவான பசுதான். ஆனால் அது கண்களை உருட்டிய விதத்தில், கொம்புகளை சிலுப்பிய விதத்தில் காங்கேய நல்லூர் காளையெனத் தெரிய, எனக்கு சற்று வெடவெடத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குப் பின்னால் அப்போதுதான் உழுது நீர் இறைக்கப்பட்ட கழனி. தமிழ் சினிமாவில் மட்டுமே ஹீரோவும் வில்லனும் சேர்ந்து விழுந்து கட்டிப் புரள்வார்கள். இந்தப் பசு இன்னொரு முறை தலையை சிலுப்பினாலே, நானாகச் சென்று விழ வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;முரட்டுக் காளை ரஜினி மாதிரி ஜல்லிக்கட்டு போஸ் கொடுத்தேன் (வயலில் யாருமில்லையென்ற தைரியம் தான்!). அது அசரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;‘சொன்னபடி கேளு...’ சிங்கார வேலன் மாதிரி பாடினேன். அது முறைத்தபடி என்னை நோக்கி ஓரடி வைத்தது. அவ்வளவுதான். பின்வாங்கிய என் கால்கள் சேற்றில் வசமாகச் சிக்கிக் கொண்டதில் என் வீரம் பறந்தோடியது. கை கூப்பி...&lt;br /&gt;&lt;br /&gt;‘மாதா... கோ மாதா... போ மாதா...’ என சாவித்ரி குரலில் பாட முயல, ஸ்ருதி நாராசமாய் எழ, அது மிரண்டு ஓடி, ஒரு வீட்டின் கொல்லைப்புரத்தில் நுழைந்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உறவினர் பாடுபட்டு விதைத்த வயலின் நடு பகுதி முழுதும் பாழ். மாட்டின் மேல் கோபம் வரவில்லை. அதற்குரிய தீனியைத் தராமல் வயலில் மேய விட்ட மாட்டுக்கார வேலன் மேல்தான் கோபம் வந்தது. மாடு நுழைந்த வீட்டுத் தொழுவத்திற்குச் சென்றேன். அங்கே ஒருவர் தவிட்டைக் கலந்து மாடுகளுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஏங்க, உங்க மாட்ட கட்டி வைக்க மாட்டீங்களா?’ சண்டைக்குச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லா மாடும் கட்டிதானே இருக்கு” என்றார். உண்மைதான். அங்கே எல்லா மாடுகளும் கட்டப்பட்டுதான் இருந்தன. ஆனால் அனைத்தும் எருமை மாடுகள்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ஒரு பசு மாடு வந்துச்சே!’&lt;br /&gt;&lt;br /&gt;“அதுவா, அது எங்க வூட்டு மாடுல்ல. கோடி வூட்டு மாடு. அப்பவே வெரட்டிட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;‘ஓ! நல்லது. எந்தப் பக்கம் விரட்டினீங்க’&lt;br /&gt;&lt;br /&gt;“கழனி பக்கந்தான்”&lt;br /&gt;&lt;br /&gt;அட, தேவுடா... மீண்டும் வயலுக்கு ஓடினேன். அங்கே அந்தப் பசு, என்னைப் பார்த்ததும் ஓடிக் கொண்டே வேகவேகமாய் பயிரைத் தின்னத் தொடங்கியது.30 நிமிடம் கடும் போராட்டம். சேற்றில் இறங்கி, வேலிகளைத் தாண்டி, கிணறுகளைச் சுற்றி, வரப்புகளில் ஓடி (நான் யார் பயிரையாவது மிதித்து விட்டால், கிராமத்து வீச்சரிவாள் என்னை அறுவடை செய்துவிடும்!) ஒரு வழியாக அந்தப் பசுவை வயலை விட்டு விரட்டிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும் தீனி அகப்பட்டு விட்டதில், அதை அசை போட்டபடி அசைந்து அசைந்து நிதானமாகச் சென்றது பசு.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மேல் என்னால் நிற்க முடியவில்லை. வீடு சென்று, திண்ணையில் கால் நீட்டி, பெருமூச்சு விட்டு அமர்ந்தேன். என் மென்மையான(!) பாதங்கள் விண்விண்னென வலித்தது. குனிந்துப் பார்த்தால்...&lt;br /&gt;&lt;br /&gt;முட்கள் குத்தி கிழிபட்டதில், சொட்டுச் சொட்டாய்... திட்டுத்திட்டாய் ரத்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிணற்றடிக்குச் சென்று ஜல்லிக்கட்டு ரணங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது “அம்மாவ், கழனில மாடு....” என்று வாசலில் மறுபடி குரல் கேட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-7382230340221361214?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/7382230340221361214/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/12/blog-post_29.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7382230340221361214'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/7382230340221361214'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/12/blog-post_29.html' title='சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TRsJWiN-zwI/AAAAAAAAAI0/lR_FD9Sowgs/s72-c/cow_in_field.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5810462326417818404</id><published>2010-12-28T14:27:00.002+05:30</published><updated>2010-12-28T14:54:05.816+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கீ போர்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><title type='text'>கீ-போர்டைப் பார்க்காதே</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="color: #222222; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;தமிழோவியம்.காம் இணைய இதழில் எனது கட்டுரை...&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;&lt;a href="http://www.tamiloviam.com/site/?p=1305"&gt;மேலும் படிக்க...&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5810462326417818404?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5810462326417818404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5810462326417818404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5810462326417818404'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/12/blog-post.html' title='கீ-போர்டைப் பார்க்காதே'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-844916230381697263</id><published>2010-11-12T16:21:00.000+05:30</published><updated>2010-11-12T16:21:23.008+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஐ.டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படிப்பு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கணினி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீபாவளி மலர்'/><title type='text'>இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை</title><content type='html'>தமிழோவியம்.காம் இணைய இதழின் தீபாவளி மலரில் எனது கட்டுரை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;இது ஒரு டிப்ளமோ கோர்ஸின் விளம்பர வாசகம். இதைப் படித்து நான் ரொம்பவே வேதனை பட்டேன். இந்த வாசகத்திலிருக்கும் மனப்போக்குதான் இன்று ஐ.டி துறையில் திறமையற்ற மாணவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;&amp;nbsp;இன்றைய பெரும்பாலான ஐ.டி மாணவர்கள் சிந்திக்கும் திறனை அறவே இழந்தவர்களாக, கணினி மொழிகளில் எந்த ஒரு ஆளுமையும் இல்லாதவர்களாகத்தான் பட்டம் பெறுகிறார்கள்&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;span class="Apple-style-span" style="background-color: #b6d7a8;"&gt;&amp;nbsp;&lt;a href="http://www.tamiloviam.com/site/?p=1006"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;மேலும் படிக்க...&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/blockquote&gt;&lt;blockquote&gt;&lt;br /&gt;&lt;/blockquote&gt;கட்டுரையை வெளியிட்டதற்காக தமிழோவியம் கணேஷ்... அவரிடம் என்னை அறிமுகப்படுத்தியதற்காக &lt;a href="http://chithran.blogspot.com/"&gt;சித்ரன்&lt;/a&gt;... இருவருக்கும் என் நன்றிகள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-844916230381697263?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/844916230381697263/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/844916230381697263'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/844916230381697263'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/11/blog-post.html' title='இந்த ஆண்டு கல்வி, அடுத்த ஆண்டு வேலை'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5233722752271000729</id><published>2010-09-22T17:06:00.000+05:30</published><updated>2010-09-22T17:06:53.127+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குரங்கு'/><title type='text'>குரங்கு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TJnkKUxtG7I/AAAAAAAAAIA/sqshZ7KkBQY/s1600/baby-monkey.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TJnkKUxtG7I/AAAAAAAAAIA/sqshZ7KkBQY/s320/baby-monkey.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என் உறவினரின் கிராமத்திற்கு நான் அடிக்கடிச் செல்வதுண்டு. எங்கள் வீட்டைச் சுற்றி மரங்களும், பின் பகுதியில் வயல்களும், சற்றுத் தள்ளி குன்றுகளும் சூழ்ந்த ரம்மியமான கிராமம்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தினமும் குரங்குக் கூட்டம் எங்கள் வீட்டை கடந்துச் செல்லும். எங்கள் வீடு மாடியில் உள்ளதால் அதன் சன்னல்களில் வசதியாக அமர்ந்துகொண்டு கம்பிகளுக்கிடையே தலையை நுழைத்து எட்டிப் பார்க்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;U-வடிவத்தில் இருக்கும் கம்பிகளுக்கிடையே, கீழே இரண்டு குரங்குகளும், மேலே ஒரு குரங்கும் நெருக்கிக் கொண்டு தலையை நுழைக்கும்போது, அவை மூன்று முகத்தான் போல அழகாகத் தேரியும். ஆனால் அதன் கண்களில் பசியும், ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கமும் பட்டவர்த்தனமாகத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவைகளுக்குக் கொடுப்பதற்கென்றே வாழைப்பழம், பிரெட், பிஸ்கெட் ஆகியவை வீட்டில் இருக்கும். அதைக் கொண்டுவர உள்ளே சென்றால், கம்பியில் தலைசாய்த்து படுத்துக் கொண்டு எங்களை நோக்கி விழி வைத்து ஆவலாய்க் காத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்றுப் பெரிய குரங்காய் இருந்தால், கொடுப்பதை கை நீட்டி வாங்கி, நிதானமாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்லும். சின்ன வாலுக்(!) குரங்குகள் ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு, கொடுக்கும் முன்பே பிடுங்கிக் கொண்டு, சண்டையும் போட்டுக் கொண்டு, வாங்கியதை கீழேயும் போட்டு ரகளை செய்துதான் சாப்பிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய குரங்குகள் பெரிய மனிதர்களைப் போல பக்குவம் அடைந்தவை. ஒரு முறை மொட்டை மாடியில், கைப்பிடிச் சுவரில் சாய்ந்துகொண்டு சாண்டில்யனின் “யவன ராணி” படித்துக் கொண்டிருந்தேன். அருகில் ஏதோ நிழலாடியது. படிக்கும் சுவாரஸ்யத்தில் அதைச் சட்டை செய்யவில்லை. இரு நிமிடங்கள் கழித்துதான் திரும்பிப் பார்த்தேன். ஐயோ... நிழலாடவில்லை... வாலாடியிருக்கிறது... ஒரு திம்மாங் குரங்கு என் அருகில் அமர்ந்து கொண்டு நான் படிப்பதை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்கு இடப்பக்கம் அதன் சகாக்கள் வேறு அமர்ந்து கொண்டிருந்தனர். எனக்கு சப்தநாடியும் ஒடுங்கிப்போனது. அலறவோ, ஓடவோ வாய்ப்பின்றி வெலவெலத்துப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், அவை அமைதியாக இருந்தன. இக்கலிகால சாமியார்களிடம் காணமுடியாத சாந்தமும், நிதானமும் அதன் முகங்களிலும், கண்களிலும் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;”இப்பத்தான் இதெல்லாம் படிக்கிறயா?” என்பதுபோல என்னை ஒரு அற்பப் பார்வை பார்த்துவிட்டு, திம்மாங் குரங்கு கைப்பிடிச் சுவருக்குத் தாவி, வாலை ஆட்டியபடி செல்ல, அதன் சகாக்களும் ரயில்பெட்டி போல வரிசையாகத் தொடர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் எனக்கு குரங்குகளின் மேல் பாசம் அதிகரித்தது. (பின்னே, என் பெயரில் வேறு ’ராம்’ இருக்கிறதே!). அவைகளுக்கு அன்னமிட்ட கையனாய் அதனுடன் நட்பு கொண்டொழுக, ஒருநாள்...&lt;br /&gt;&lt;br /&gt;பால்கனியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தேன். எதிர்வீட்டு மாடியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் குரங்குக் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு மூன்று குரங்குகள் பேன் பார்த்துக் கொண்டிருந்தன (அட, கர்ப்பிணியும் குரங்குதான்). வாலைக் கடித்து, காலைக் கடித்து, காதைக் கடித்துக் கொண்டு குட்டிக் குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன.&amp;nbsp;அந்த வீட்டைச் சுற்றியிருந்த தென்னை, புளி, முருங்கை, மா மரங்களில் பல குரங்குகள் போட்டி போட்டுத் தாவிக் கொண்டிருந்தன. மரங்களின் கிளைகள் காற்றினால் அசைந்ததைவிட குரங்குகளின் தாவலால், பறவைகளின் இறக்கைபோல படபடவென அசைந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் டவரிலும் சில குரங்குகள். அவை விறுவிறுவென உச்சிக்கு ஏறுவதும், பின் அங்கிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒயரில் சர்ர்ர்...ரென இறங்குவதுமாக பரமபதம் ஆடிக்கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு குரங்கின் சேஷ்டையையும் நான் அணுவணுவாக ரசித்துக் கொண்டிருந்தபோது, அந்த விபரீதம் நிகழ்ந்தது...&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டு மாடியில் துணிக் கொடியை குரங்குகள் பிடித்துக்கொண்டு ஆடியபோது, பட்டென்று அறுந்த கொடி, ஒரு குட்டிக் குரங்கின் கழுத்தில் சுருக்கிட்டு இழுபட, நொடியில் மூச்சு நின்று அது சடலமாய்த் தொங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அதிர்ச்சியில் உறைந்தேன். தெருவில் இருந்தவர்கள் இதைக் கவனித்துவிட, மாடியை நோக்கி விரைந்தனர். ஆனால் அதற்குள் குரங்குகளுக்குள் எப்படியோ தகவல் பரிமாறிவிட்டது. அனைத்து குரங்குகளும் அந்த மாடியில் குவிந்து விட்டன. அவை குட்டியைச் சக்கரவட்டமாய்ச் சுற்றிக் கொண்டன. எந்த மனிதரையும் நெருங்கவிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கீழே ஊர் சனம் கூடிவிட்டது. அவர்கள் பேசிக் கொண்டனர். குரங்குகளும் மனிதர்களைப் போலவே, அதற்கென தனி இடத்தில் தகனம் செய்யும் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;இரு பெரிய குரங்குகள் கொடியிலிருந்து குட்டியை விடுவிக்கப் பார்த்தன. முடியவில்லை. பின் அவை குட்டியைத் தொட்டுத்தொட்டுப் பார்க்க, அதைக் காணத் திராணியற்று குலுங்கியது என்னுடல்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து குரங்குகளும் நடந்ததை ஏற்றுக் கொண்டது போல அமைதியாக அமர்ந்தன. சில நிமிடங்களுக்கு முன்வரை அதகளப்பட்ட மாடியில் இப்போது கனத்த நிசப்தம். அழு குரல்கள் இல்லை. போலியான ஒப்பாரிகள் இல்லை. மெளனமாக ஒரு அஞ்சலி மட்டுமே நடந்தது. பின் தலைவன் குரங்கு எழுந்து நடந்தது. அதைத் தொடர்ந்து அனைத்து குரங்குகளும் எந்தவொரு ஆர்ப்பாட்டமுமின்றி கலைந்து சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஊர் சனம் செயல்பட்டது. ஒருவர் குரங்கை ஜாக்கிரதையாக விடுவித்து கீழே படுக்கவைத்தார். இருவர் தென்னை மட்டையை உடைத்துக்கொண்டு வர, மடமடவென பாடை தயாரானது. பூமாலைகளும் வந்து சேர்ந்தது. அருகிலிருக்கும் பெருமாள் கோயிலின் பட்டர் வரவைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மந்திரங்கள் ஓதி, ஊர் மயானத்திற்குக் குரங்கை எடுத்துச் சென்று சகல மரியாதைகளுடன் தகனம் செய்துவிட்டு திரும்பியது சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றிரவு உறக்கம் பிடிபடாமல் பால்கனியில் அமர்திருந்தேன். எதிர்வீட்டில் குரங்கு ஊஞ்சலாடி அறுந்த கொடி, காற்றில் ஊசலாடிக் கொண்டிருப்பது நிலவொளியில் தெரிய, அதையே வேகு நேரம் வெறித்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5233722752271000729?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5233722752271000729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/09/blog-post_22.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5233722752271000729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5233722752271000729'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/09/blog-post_22.html' title='குரங்கு'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TJnkKUxtG7I/AAAAAAAAAIA/sqshZ7KkBQY/s72-c/baby-monkey.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-2822579632562860189</id><published>2010-09-06T15:39:00.003+05:30</published><updated>2010-12-11T20:03:56.504+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாமல்லபுரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வெள்ளைக்காரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நரிக் குறவர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செங்கல்பட்டு'/><title type='text'>வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்</title><content type='html'>செங்கல்பட்டு பஸ் நிலையத்தில், மாமல்லபுரம் செல்லும் பஸ்ஸூக்காகக் காத்துக் கொண்டிருக்கும்போது சற்றுத் தள்ளி இரண்டு வெள்ளைக்காரிகள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்நிய நாட்டினரைப் பார்த்தால் சிறு வயது முதல் ஏற்படும் சுவாரஸ்யத்துடன் அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம்!&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாட்பாரத்தில், தனக்கே உரிய பாணியில் அமர்ந்திருந்த நரிக்குறவர்களுடன் அவர்கள் வெகு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தனர். குறவர்களின் தலைவன் - தலைவி போன்று தெரிந்தவர்கள், இவர்களிடம் எந்த அந்நியமும் பார்க்காமல், தங்கள் கூட்டதின் அங்கமாகவே கருதிப் பேசிக் கொண்டிருந்தது எனக்கு படா படா ஆச்சரியம்!&lt;br /&gt;&lt;br /&gt;(இவர்களில் ஒருவரை எமி என்றும், மற்றொருவரை லிண்டா என்றும், இப்பதிவின் வசதிக்காக அழைக்கப் போகிறேன்!... சரிதானே!...)&lt;br /&gt;&lt;br /&gt;எமியும், லிண்டாவும் மாமல்லபுரத்திற்கு வந்த டூரிஸ்ட் என்பதும், அங்கே இந்தக் குறவர்களுடன் எப்படியோ நட்பு ஏற்பட்டு, அவர்களுடன் செங்கல்பட்டிற்கு வந்து, இப்போது திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒருவாறு புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஒரு பஸ், நிலையத்தினுள் நுழைய, லிண்டா என்னிடம் வந்து...&lt;br /&gt;&lt;br /&gt;“டஸ் இட் கோ டு மாமல்லபுரம்?” என வினவினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் “எஸ்” என்றதுதான் தாமதம்... தன் இருகைகளையும் தன் உதட்டருகே குவித்து...&lt;br /&gt;&lt;br /&gt;“எவ்ரூரூரூ...... ப...ஸ்...” என்று குறவர்களைப் பார்த்து அவர்களைப் போலவே கூவ, நான் அசந்து போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் வளைவில் திரும்பிக் கொண்டு வரும்போதே ரன்னிங்கில் ஏறினால்தான் இடம் கிடைக்கும். ஓடத் தயாரான நான் ஸ்தம்பித்து நின்றேன். என்னை முந்திக்கொண்டு, பஸ்ஸில் இடம் பிடிக்க அதிவேகமாகப் பாய்ந்தாள் லிண்டா. அவள் சற்று வாட்டசாட்டமாக இருந்தாள். வாலிபால் எல்லாம் ஆடுவாள் போல! &amp;nbsp;பஸ்ஸைத் தாவிப் பிடித்த கையில் உறுதி தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வேட்டியை மடித்துக்கட்டி பஸ்ஸில் ஏற முற்பட்ட உள்ளூர் வீரர்கள் சற்று சோப்ளாங்கிகள். லிண்டாவிடம் இடிபட்டதில், நிலை தடுமாறி தொபுக்கடீரென கீழே விழுந்து விழி பிதுங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட ஒருவர் ”ஏம்மா, இப்டி முட்ற” என்று கத்த...&lt;br /&gt;&lt;br /&gt;“எலே... கோ...” என லிண்டா பதில் சவுண்ட் விட, அவர் அரண்டு போய்...&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா.. தாயீ... ஆள வுடு” என கும்பிடுபோட்டு நகர, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக நானும் பஸ்ஸில் ஏறினேன். ஒரு மூன்றுபேர் சீட்டைப் பிடித்திருந்தாள் லிண்டா. ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;அடடா... நம்ப ஊர் டெக்னிக் முழுமையாக அவருக்குத் தெரியவில்லை. சன்னல் வழியாக கூடையைப் போட்டு அதில் ஒரு சீட்டைப் பிடித்திருந்த நபர், அங்கே வந்து கூடையைக் காட்டி, “அது என் சீட்” என்று அங்கலாய்த்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ, இட் ஈஸ் யுவர் பேக்?” என்று லிண்டா கூடையை எடுத்து அவரிடம் கொடுக்க, அந்த இடமே ஏக ரகளையானது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் குறுக்கிட்டு விளக்க, “ஓ சாரி, டேக் யுவர் சீட்” என்று பார்டிக்குப் பெருந்தன்மையுடன் வழிவிட்டார். எமியும், குறவர்களும் வந்து சேர்ந்தனர். முதல் சீட்டில் எமி அமர, லிண்டா குறவப் பெண்ணின் குழந்தையை வாங்கி, வாஞ்சையோடு அதன் தலையைக் கோதி தன் மடியில் அமர்த்திக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சன்-சில்க் காணா கேசங்களும், ரின் காணா உடைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. மதர் தெரசாவைப் படித்திருப்பார்களோ?! பெரிய விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் புறப்படத் தாமதமாக, உள்ளே கூட்ட நெரிசலால் புழுங்கத் தொடங்கியது. எமியின் டி-சர்ட் வேர்வையில் நனைந்தது. அருகில் நின்று கொண்டிருந்த குறவப் பெண், &amp;nbsp;எமியின் டி-சர்டின் முதுகுப்பகுதி U-கட்டை லேசாக இழுத்து (லேசாகத்தான்) &amp;nbsp; உள்ளே பூ... பூ... என்று ஊதத் தொடங்கினாள். எமியின் முகமும் வேர்க்கத் தொடங்க, குறவப் பெண் தன் முந்தானையால் விசிறவும் செய்தாள். இப்போது எமியின் முகத்தில் வேர்வைக்குப் பதில் கொள்ளை சந்தோசம். இந்த அபூர்வக் காட்சியில் என் மனம் லயித்தது. (விசிறியதில் எனக்குக் கூட கொஞ்சம் காற்று வந்தது!).&lt;br /&gt;&lt;br /&gt;பஸ் புறப்பட இருவரும் பள்ளித் தோழிகள் போல அன்னியோன்யமாய்ப் பேசத் தொடங்கினர். எமி ஆங்கிலத்தில் எதையோ கேட்க, குறவப் பெண் அதற்கு தமிழில் பதில் கூறித் தன்பங்குக்கு எதையோ கேட்க அதற்கு எமி ஆங்கிலத்தில் பதில் சொல்ல, எனக்கு மண்டை கிறுகிறுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எமியின் ஆக்சென்ட் எனக்கு பிடிபடவில்லை. குறவப் பெண்ணின் தமிழ் உச்சரிப்பும் என் செவிக்குள் நுழையவே இல்லை. இருவரும் கேட்டுக்கேட்டு, கூறிக்கூறி, மாறிமாறிப் பேசியதில் எனக்கு மயக்கமே வந்தது. என்னத்தான் பேசுகிறார்கள்?! எப்படித்தான் இது சாத்தியம்?!...&lt;br /&gt;&lt;br /&gt;மெல்ல உண்மை புரியத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வார்த்தைகள் உச்சரிக்கவே தெரியாத குழந்தைப் பருவத்தில், நாம் தாயிடம் இப்படித்தானே பேசினோம்!&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கள்ளமற்ற மனங்களின் உணர்வுகள் ஒன்றிவிட்டால், &amp;nbsp;அது அன்பினில் நிறைந்து விட்டால், மொழிகளுக்கிடையே பேதமில்லை. வார்த்தைகளினூடே அர்த்தங்கள் இல்லை. நயன பாஷை, மெளன பாஷை, டெலிபதி ஆகியவை இதன் அடுத்தடுத்த நிலைகளே.&lt;br /&gt;&lt;br /&gt;நிறம், மொழி, மதம், நாடு கடந்து அவர்கள் கொண்ட நட்பை மானசீகமாய்க் கைகூப்பி வணங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் ஊர் வந்துவிட, படியில் இறங்கிக் கொண்டே அவர்களை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குறவப் பெண்ணின் குழந்தை, தன் தாய்மடி எனக் கருதியே, லிண்டாவின் மடியில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-2822579632562860189?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/2822579632562860189/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/2822579632562860189'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/2822579632562860189'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/09/blog-post.html' title='வெள்ளைக்காரியும் குருவிக்காரியும்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-608482994295603042</id><published>2010-08-24T17:03:00.003+05:30</published><updated>2010-09-03T15:27:43.370+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாவா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டாட்நெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கடவுள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமஸ்கிருதம்'/><title type='text'>சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TIDGgcv4b2I/AAAAAAAAAH4/wuA2TIASx8Y/s1600/sanstamil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TIDGgcv4b2I/AAAAAAAAAH4/wuA2TIASx8Y/s320/sanstamil.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கோவில்களில் சமஸ்கிருதமா தமிழா என்ற சர்ச்சை பல நாட்களாகத் தொடர்கிறது. என்னைப் பொருத்தவரை இரண்டையும் சமவிகிதத்தில் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். இதை, கணினி மொழிகளான ஜாவா (Java) மற்றும் டாட்நெட்டைக் (.Net) கொண்டு விளக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் கல்லூரிகளுக்குச் செமினார் எடுக்கச் செல்லும்போது (அதைப்பற்றி ஒரு நகைச்சுவைப் பதிவு: &lt;a href="http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post.html"&gt;முனியின் செமினார்&lt;/a&gt;) &amp;nbsp;மாணவக் கண்மணிகள் (இருபாலரையும் குறிப்பிட இதுதான் வசதியாக இருக்கிறது!) என்முன் வைக்கும் பிரதான கேள்வி: ஜாவா, டாட்நெட் இந்த இரண்டில் எதைப் படிப்பது? &lt;br /&gt;&lt;br /&gt;இதில் எந்த மொழியில் ப்ரோக்ராம் எழுதினாலும் அவை ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள மொழி கடந்த ப்ரோட்டோகால்கள் (Protocol) வந்து விட்ட நிலையில், நான் இரண்டையுமே படிக்கச் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் எந்த ப்ராஜெக்ட்டானாலும் சர்வர் கம்ப்யூட்டரில் (Server Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும், க்ளையண்ட் கம்ப்யூட்டரில் (Client Computer) இயங்கும் ப்ரோக்ராம்களும் எழுதி அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும் வகையில் வடிவமைக்க வேண்டியிருக்கிறது. (Web ப்ராஜெக்ட்கள் விதிவிலக்கு).&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான க்ளையண்ட் கம்ப்யூட்டர்கள் விண்டோஸில்தான் இயங்குகின்றன. இதில் நாம் பயன்படுத்துவதற்கு வசதியாக ப்ரோக்ராம் எழுத டாட்நெட் சிறப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வர் கம்ப்யூட்டர்களை இன்விசிபிள் (Invisible) கம்ப்யூட்டர் என்றும் சொல்வார்கள். எங்கே இருக்கின்றன, எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பார்க்க முடியாது. அவற்றின் பெயர் கொண்டு (உதா: yahoo.com) தொடர்பு கொள்ளலாம். அவை நீங்கள் கேட்கும் சர்வீஸைத் தரும். உதா: இமெயில்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சர்வர்கள், இதில் பயன்படுத்தும் ஆபரேட்டிங் சிஸ்டம், கம்பெனிக்கு கம்பெனி மாறுபடும். அதனால் அனைத்திலும் இயங்கும்படி சர்வீஸ் ப்ரோக்ராம்களை வடிவமைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ஜாவா சிறப்பாக உதவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நான் கையாளும் ப்ராஜெக்ட்களில் இரண்டையுமே பாகுபாடின்றி சரியான விகிதத்தில் பயன்படுத்துகிறேன். அவை வெற்றியும் கண்டு கோலோச்சுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, கோவிலுக்கு வருகிறேன். இங்கே இறைவன்தான் சர்வர். &amp;nbsp;இவரும் கண்ணுக்குத் தெரிய மாட்டார். எப்படி இருப்பார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. நாம் கேட்கும் வரத்தை சர்வ் செய்வதால் இறைவனும் சர்வரே.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் நீக்கமற இருக்கும், சர்வ வல்லமை படைத்த, உருவம் கடந்த பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட சக்தியாக சிவனாகவோ, விஷ்ணுவாகவோ (yahoo, google மாதிரி), ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் டியூன் செய்ய சமஸ்கிருதம் சிறப்பாக இருக்கிறது. இங்கே செய்யப்படும் ப்ரோக்ராம்கள்தான் யாகங்கள், யக்ஞங்கள், குடமுழுக்குகள். இவை சமஸ்கிருததில் இருக்கலாம் என்பது என் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;பக்தர்களான நாம்தான் க்ளையண்ட். நம் சார்பில் செய்யப்படும் அர்ச்சனைகள், பூசைகள் தமிழில் நடந்தால் அது நமக்கு ரொம்ப வசதி.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னிலை மறந்து மனமுருகிச் செய்யும் மொழி கடந்த பிரார்த்தனையே, நம்மையும் இறைவனையும் இணைக்கும் ப்ரோட்டோகால்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, கடவுளென்றாலும் கணினியென்றாலும் எச்செம்மொழியும் நமக்குச் சம்மதமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-608482994295603042?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/608482994295603042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/08/blog-post_24.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/608482994295603042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/608482994295603042'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/08/blog-post_24.html' title='சமஸ்கிருதமும் ஜாவாவும், தமிழும் டாட்நெட்டும்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TIDGgcv4b2I/AAAAAAAAAH4/wuA2TIASx8Y/s72-c/sanstamil.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-6214369012000677754</id><published>2010-08-16T16:16:00.003+05:30</published><updated>2010-08-17T09:56:24.349+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சேரன் சோழன் பாண்டியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிழக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முத்தொள்ளாயிரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சொக்கன்'/><title type='text'>என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/TGkUrg9ZIeI/AAAAAAAAAHg/-MnprAwEyRw/s1600/muththollayiram.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/TGkUrg9ZIeI/AAAAAAAAAHg/-MnprAwEyRw/s320/muththollayiram.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div&gt;மதராசபட்டினம் ஒரு கவிதையாய் நம்பளை அறுபது வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்லுமென்றால், செம்மொழிக் கவிதைகள் ஆயிரம் வருடங்கள் கூட பின்னோக்கி அழைத்துச் செல்லும். அப்படி சங்ககாலத்திற்கு அழைத்துச் செல்ல &lt;a href="http://nchokkan.wordpress.com/"&gt;என்.சொக்கன்&lt;/a&gt; பயன்படுத்தியிருக்கும் காலயந்திரம் &lt;a href="https://www.nhm.in/shop/978-81-8493-455-7.html"&gt;முத்தொள்ளாயிரம்&lt;/a&gt;.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சேர சோழ பாண்டிய மன்னர்கள் குறித்து பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பே முத்தொள்ளாயிரம். இலக்கியச் சுவை மிகுந்த இந்த நூலை, எஸ்.எம்.எஸ் மட்டுமே படிக்கும் இந்த தலைமுறைக்கும் புரியும்படி மறுபிறப்பெடுக்க வைத்திருக்கிறார் சொக்கன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;”ஐயோ, வெண்பாவா? அதெல்லாம் நமக்கு ஒவ்வா!” என அலறி ஓடும் தமிழ்தாசர்களை நிறுத்தி, படித்துதான் பாரேன் எனச் சவால் விடுகிறது சொக்கனின் எளிய தமிழ் நடை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பாடல்களின் மையக்கருத்தினைக் குழைத்து ஓரிரு வார்த்தைகளில் சுவாரஸ்யமாக இவர் வைத்திருக்கும் தலைப்புகளே இச்சவாலுக்கான அறைகூவல். உதாரணங்கள்: தீப்பிடித்த தண்ணீர், தரையில் வானவில், யானையின் வெட்கம், சிலந்தி (க)வலை, கவிதை எழுதும் யானைகள், சாவித்துளைக்கு நன்றி!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இதைத் தொடர்ந்து உடனடியாக பாடலுக்குச் சென்றுவிடாமல், ஒரு பக்கக் கதைகளைப் புனைந்திருக்கிறார். சங்கப் புலவர்களின் கற்பனைகளை சிறிதும் காயப்படுத்திவிடாமல், பாடல்களின் ஓட்டத்திலேயே தனது கற்பனை, நகைச்சுவை மற்றும் தற்கால மேற்கோள்களையும் அளவாக பதமாகக் கலந்து கதைகளை/விளக்கங்களை புனைந்திருக்கிறார்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;புலவர்களிடம் கற்பனை வளம் செழித்திருந்திருக்கிறது. அதில் சில புன்னகைக்க வைக்கின்றன. சில ”அட!” போட வைக்கின்றன. சில ”வாவ்!” சொல்ல வைக்கின்றன. அத்தனைக்கும் அடித்தளமமைப்பது சொக்கனின் விளக்கக் கதை.&amp;nbsp;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணமாக இமையார் என்று தேவர்களைக் குறிப்பதை, எந்நேரமும் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை என்று பேரழகிகளைப் பார்த்துப் பழகியதாலோ என்னவோ, தேவர்களின் கண்கள் எப்போதும் இமைப்பதில்லை என்று சுவையாக விரித்திருக்கிறார் (ஏனோ மேனகையை டீலில் விட்டுவிட்டார்).&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கதையைத் தொடர்ந்து பாடலையும், அதன் பின் சில சொற்களுக்கான அர்த்தங்களை குட்டி டிக்ஸனரி போலவும் கொடுத்திருக்கிறார்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சுவையான விளக்கத்தை படித்தபின் பாடலைப் படிக்கும்போது, அது தெளிவாகப் புரிகிறது. அறியாத சொற்களின் அர்த்தத்தையும் ஊகிக்க முடிகிறது. பின்தொடரும் டிக்ஸனரியில் அதைச் சரிபார்க்கும்போது, அட நமக்கும் தமிழ்ப்புலமை கிட்டுகிறதோ என்று துள்ளிக் குதிக்கத் தோன்றுகிறது. நன்றி சொக்கன். நிச்சயம், பாடலெழுதிய புலவர்களின் ஆன்மா தங்களை வாழ்த்தும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்புத்தகத்தைப் படிக்க தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை. விளக்கங்கள் ஜெட் வேகத்தில் பறப்பதால் கிடைக்கும் ஐந்து நிமிட அவகாசத்திலும் ஒரு பாடலைப் படித்துவிடலாம். சொக்கனின் கைவண்ணத்தில்... ஸாரி... எழுத்து வண்ணத்தில் பாடலின் நல்ல சொற்றொடர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகின்றன. சமயத்தில் அவை பயன்படும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;உதாரணமாக, உங்கள் மனைவி பொட்டிட்டு வருகையில், “திலகம் கிடந்த நல்நுதலாய்” எனக்கொஞ்சி செல்லமாகக் குட்டு வாங்கலாம். (மாறாக, “ஐயோ என் புருஷனுக்கு கிறுக்கு புடிச்சிடுச்சு” என்று உங்கள் அன்பு நாயகி அலறினால் அதற்கு சொக்கனோ, நானோ பொறுப்பல்ல!)&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அனைத்து பாடல்களும் நான்கடி (நான்கு வரிகள்) கொண்ட பாக்கள். ஆனால் பல பாடல்களில் கருத்து இரண்டு அடிகளிலேயே முடிந்து விடுகிறது. ஓரடி மன்னனை, &amp;nbsp;தேர்ந்தெடுத்த மலர்மாலையை அணிந்தவனே, ஆய்ந்தெடுத்த மணிகளைச் சூடியவனே, கடல்சூழ் உலகை ஆள்பவனே என்றெல்லாம் புகழ்ந்து பாராட்டவும் (சேனைத் தலைவனுக்குப் பாராட்டு விழா!) அடுத்த அடி இணைப்புச் சங்கிலியாகவும் செலவிடப்பட்டிருக்கிறது. இத்தகைய குறுகிய பாடல்களை ஒரு பக்கக் கதைகளாக வடித்திருப்பது சொக்கனின் தனித்திறமை. வணக்கங்கள் சொக்கன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இக்கதைகள் குழந்தைகளுக்குச் சொல்ல பெரிதும் பயன்படும். அன்றைய அன்னை குழந்தைக்கு வீரம் ஊட்டினாள். இன்றோ செரிலாக்தான் ஊட்டுகிறாள். நாம் குறைந்த பட்சம் வீரக் கதைகளைச் சொல்லி சோறும் உடன் கொஞ்சம் தமிழையும் ஊட்டலாம் (பசலை படியும், சங்கு வளையல்கள் கழன்று விழும் காதல் கதைகள் சொல்வதற்கில்லை, அவை நமக்கு மட்டும்!) .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இவ்வளவு பயனுடன் எளிமையாக சொக்கன் எழுதினாலும், அவரது பணி எளிமையானதல்ல என உணரமுடிகிறது. ஒவ்வொரு பாடலையும் தீவிரமாகப் படித்து அலசியிருக்கிறார். காதல் பாடல்களுக்கு, திருக்குறள் கா. பாலிலிருந்து வரும் மேற்கோள்களும், ஓரிடத்தில் வரும் குறுந்தொகை, கலிங்கத்துப்பரணி மேற்கோள்களும் அவரது உழைப்பை பளிச்சிடுகின்றன. வாழ்த்துக்கள் சொக்கன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சேரனைவிட (கோதை) சோழனிடத்திலும் (கிள்ளி), சோழனைவிட பாண்டியனிடத்திலும் (மாறன்) பலவகைகளில் பாடல்கள் இருக்கின்றன. அவற்றை ஒரே மூச்சில் படித்துவிட்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;முடித்தபோது சந்தோஷத்துடன் ஒரு ஏக்கமும் இணைந்தது. மூன்று தொள்ளாயிரம் பாடல்களில் வெறும் 108 மட்டுமே கிடைத்திருக்கிறதாம். அவையே இவ்வளவு சுவையென்றால்....&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மற்ற பாடல்களில் சில நூறாவது கிடைக்க காலமும், அவற்றை சொக்கன் எழுத தமிழன்னையும் அருள வேண்டுகிறேன் தொழுது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-6214369012000677754?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/6214369012000677754/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/6214369012000677754'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/6214369012000677754'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/08/blog-post.html' title='என். சொக்கனின் ‘முத்தொள்ளாயிரம்’'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/TGkUrg9ZIeI/AAAAAAAAAHg/-MnprAwEyRw/s72-c/muththollayiram.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-276387432618389183</id><published>2010-07-08T15:02:00.001+05:30</published><updated>2010-07-08T15:11:15.998+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜப்பான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரெஞ்சுப் புரட்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பிரெஞ்சுப் புரட்சி</title><content type='html'>நாங்கள் படித்த யுனிவெர்சிட்டியில் பல வசதிகள்.  ஒரே சமயத்தில் இரண்டு மூன்று கோர்ஸ்கள் படிக்கலாம்.  அல்லது குறைந்த பட்சம் மற்ற டிபார்ட்மெண்ட்களுக்குச் சென்று பிடித்தமான பேப்பர்களைத் தேர்ந்தெடுத்தும் படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும் ஐ.டி துறைமூலம் விரைவிலேயே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, உலகம் சுற்றும் வாலிபர்களாகப் போகிறோம் என்ற கனவில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்ததால், லிங்குஸ்டிக் டிபார்ட்மெண்ட் சென்று ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு உலக மொழியைக் கற்கலாம் என்று முடிவெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசி செமஸ்டரில் கேம்பஸ் இண்டர்வியுவிற்கு வரும் முதல் கம்பெனிக்கு ஜப்பானில் கிளை இருப்பதால் முதலில் ஜப்பானிய மொழியைத் தேர்ந்தெடுத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்... ஸாரி... ஜப்பானிய ஆசிரியை மிக அழகாக அம்மொழியைக் கற்றுக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TDWYS5S92RI/AAAAAAAAAG8/0E1013UiLvw/s1600/poochi.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TDWYS5S92RI/AAAAAAAAAG8/0E1013UiLvw/s320/poochi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;போஸ்ட் கிராஜுவேட் படிக்கும் வயதில் கிள்ளை பிள்ளைகளாட்டம் ”எ ஃபார் ஆப்பிள், பி ஃபார் பனானா” என்ற ரீதியில் கோரஸாகப் படிப்பதும், முதன் முதலாக ஸ்லேட்டில் பலப்பம் பிடித்து எழுதுவது போல மொழியின் எழுத்துக்களை வரைவதும் (அம்மொழியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பூச்சியின் படம் போல வேறு இருந்தது) தமாஷாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம்.  அவருக்கு ’ர’ உச்சரிப்பு வராமல், என்னை ”லகுலாம், லகுலாம்” என்று அழைத்துக் கொண்டிருந்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;(ஆனால், கணையாழியின் கடைசி பக்கங்களில் தன் ஜப்பானிய பயண அனுபவத்தைச் சொல்லும் சுஜாதா, அவர்களுக்கு ’ல’ க்கு பதில் ’ர’ தான் வருகிறது என்கிறார்.   “புர்ரட் ட்ரெயின், புர்ரட் ட்ரெயின்” என்று அவர்கள் சொன்னது “புல்லட் ட்ரெயின்” என்று வெகு நேரத்திற்குப் பின்பே தனக்கு புரிந்தது என்றும் சொல்கிறார்.  ஒரு வேளை அந்த ஆசிரியை இந்தியா வந்துவிட்டதால் லகரமும், ரகரமும் இடமாறிவிட்டதோ?!)&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்சிறு கண்களுடன், எப்போதும் சிந்தும் புன்னகையுடன், ஒரு குழந்தைக்கு கற்றுத் தரும் கனிவுடன் அவர் பாடம் நடத்தியவிதம் எங்களை பிரைமரி ஸ்கூலின் கபடமற்ற நினைவுகளில் தாலாட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு ஜப்பானிய வார்த்தைகள் கற்றுக் கொண்ட குஷியில், ‘அனதாவா ஜென்கி தேசுகா (நீங்கள் சௌக்கியமா)?, சயோனாரா மாதாஆய் மாசோ (டாடா பை பை) ’ என்றெல்லாம் எதிர்பட்டவர்களிடம் பேசி, அவர்கள் முகம் வெளிர வைத்தோம்!&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மொழியைக் கற்கும்போது பரிசயமற்ற உச்சரிப்புகளில் நா பிறழ்வதும்,  புதிய புதிய வார்த்தைகளின் நளினத்தில் மனம் புரள்வதும் ஒரு சுகானுபவம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அனுபவம் தந்த உற்சாகத்தில், அடுத்த செமஸ்டரில் எந்த மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று, நண்பர்கள் ஒன்று கூடி விவாதித்தோம். அப்போது, என்னுடைய &lt;a href="http://kanchiraghuram.blogspot.com/2010/04/blog-post.html"&gt;ஐ.பி.எல் பதிவின்&lt;/a&gt;&amp;nbsp;நாயகன் கிருஷ்ணன் எங்கள் முன் தோன்றி, பிரெஞ்சு மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.  தான் பிளஸ்ஒன் முதலே அதைப் படித்ததாகச் சொல்லி, அம்மொழியின் அருமை பெருமைகளையெல்லாம் சிலாகித்துச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TDWYrWanxwI/AAAAAAAAAHE/dXktqPDC3HA/s1600/paris.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TDWYrWanxwI/AAAAAAAAAHE/dXktqPDC3HA/s320/paris.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;ஆஹா, பிரெஞ்சு மொழியைக் கற்று, அப்படியே கன்கார்ட் விமானத்தில் லண்டனிலிருந்து பாரிஸூக்குப் பறந்து, ஈஃபிள் டவர் அருகே நின்று எதிர்ப்படுபவர்களிடம் ”மான்சியூர்” சொல்லி போட்டோவெல்லாம் எடுத்துக் கொள்ளலாம் எனக் கனவு கண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் நாள் வகுப்பு.  பிரெஞ்சு ஆசிரியையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.  ஆனால் வந்ததோ ஒரு உள்ளூர் ஆசாமி.  சிரிப்பை பாதாள லோகத்தில் புதைத்து விட்டார் போல; சுரத்தே இல்லாமல் வகுப்பெடுத்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானிய பாஷை கடினமாக இருந்தாலும் கற்க முடிந்தது.  ஆனால் பிரெஞ்சு பாஷை  ரெண்டுங்கெட்டானாக இருந்தது. சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் ரொம்பவே மெனக்கெட வேண்டியிருந்தது.  எண்ணிக்கையைச்  சொல்ல இருபதுக்கு மேல் வார்த்தைகளே இல்லை.  உதாரணமாக 97 என்பதை ‘குவாதர் வான் திசெப்ட்” என்று சொல்ல வேண்டும்.  குவாதர் என்றால் நான்கு, வான் என்றால் இருபது, திசெப்ட் என்றால் பதினேழு.  அதாவது நான்கு இருபது பதினேழு என்று சொல்ல வேண்டும்.  என்ன கொ. சரவணா இது?!&lt;br /&gt;&lt;br /&gt;இதைவிடக் கொடுமை, எழுத்துக்கள் ஆங்கிலம் போன்றே இருந்தாலும், உச்சரிப்பிற்கும் ஸ்பெல்லிங்கிற்கும் சம்பந்தமே இல்லை.  இந்த வான்-னுக்கான ஸ்பெல்லிங் Vingt. பொதுவாக எழுத்தைக் கூட்டி படிக்கச் சொல்வார்கள்.  இங்கே சில எழுத்துக்களை கழித்துப் படித்தாலும் உச்சரிப்பு வரவில்லை. உச்சரிப்பைப் படித்தால் தியரி எக்ஸாமிலும், ஸ்பெல்லிங்கைப் படித்தால் வைவாவிலும் பெயிலாகி அழ வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை பெயிலின் பாதைக்கு அழைத்துச் சென்ற கிருஷ்ணனை பார்க்கும் போதெல்லாம் காது புகைந்தது. பரீட்சையும் வந்து விட்டது. முதலில் வருவது தியரியாதலால், டைப்ரைட்டிங் கிளாசில் ஆங்கிலமே தெரியாமல் ஒவ்வொரு எழுத்தாக டைப் அடித்தது போல, உருப்போட்டு மனனம் செய்து பரீட்சையை எழுதிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் வைவா.  ஹாஸ்டலில் கிருஷ்ணன் மடையான தண்ணி குடித்து சொல்லிக் கொடுத்தார்.  மற்றவர்களெல்லாம் தட்டுத்தடுமாறி கற்க, நம்ம மூளைக்கு உச்சரிப்பு ஏறவே இல்லை.  இரண்டாவது பக்கத்தை படிக்கும் முன்பே முதல் பக்கம் அடியோடு மறந்து போனது.  ”போடா, நீயும் உன் பிரெஞ்சும்” என்று சலித்துக் கொண்டு தூங்கச் சென்றேன். “டேய், பொறுப்பில்லாமல் படுக்காதே, நிச்சயம் பெயிலாயிடுவே” என்று அவர் திட்டிக் கொண்டிருக்க, அதை சட்டை செய்யாமல் தூங்கியே விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்தது வைவா தினம். முதலில் சென்றுவந்த நண்பன், ”நமது பிரெஞ்சு புத்தகத்திலிருந்து ரேண்டமாக ஒரு பக்கத்தைப் பிரித்து, அதைப் படித்து அர்த்தமும் சொல்லச் சொல்கிறார்கள்” என்றான்.  அட அவ்வளவுதானா... ஒரு சுலபமான பக்கத்தை தேர்ந்தெடுத்து, அதை சொல்லிக் கொடுக்க கிருஷ்ணனை விளித்தேன். “இத மட்டும் படிச்சு என்னடா பண்ணபோற?” எனப் புலம்பிக் கொண்டே சொல்லிக் கொடுத்தார்.  அந்த பக்கத்தை ஒரு பத்து தடவை நன்றாக படித்துக் கொண்டேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;என் திட்டம் இதுதான்.  சுண்டு விரலை புக்மார்க்காக வைத்து புத்தகத்தை மூடிக் கொள்வது.  எப்பக்கத்தைக் கேட்டாலும், இப்பக்கத்தை தற்செயலாக திறப்பது போல் நடித்து படிக்கத் தொடங்கிவிடுவது.  பிறகு நடப்பது அந்த சாட்சாத் கிருஷ்ணன் விட்ட வழி (வேறு என்னதான் செய்ய?!).  &lt;br /&gt;&lt;br /&gt;என் முறை வர உள்ளே சென்றேன். அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வருவது அதுதானோ? நான் படித்த இருபத்தி ஏழாவது பக்கத்தைதான் எக்ஸ்டர்னல் திறந்து வைத்தார்.  அதை ஓரக் கண்ணால் கவனித்துவிட்ட நான், டக்கென சுண்டுவிரலை எடுத்து விட்டு, நிதானமாக அமர்ந்து... &lt;br /&gt;&lt;br /&gt;’வார்ம் கீரீட்டிங்ஸ் இன் திஸ் பிளசண்ட் மானிங்’ என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹொ... வெல்கம்.. யு லுக் ஸோ ரிலாக்ஸ்ட்” என்றார். (பின்னே இருக்காதா?)&lt;br /&gt;&lt;br /&gt;’வாட்ஸ் தி பேஜ் நம்பர் சார், ஈஸ் ட் ட்வெண்டி செவன்? ஜஸ்ட் எ செகண்ட்’... அப்பக்கத்தை புரட்டி, நெப்போலியன் பூமியில் பிறந்தவன் போல் மடமடவென படித்து அர்த்தத்துடன் அடுக்க...&lt;br /&gt;&lt;br /&gt;”ஹோ.. ஹவ் ஃபுலூயண்ட் யு ஆர்... தட்ஸ் இனஃப்” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;”தட் ஈஸ் யுவர் ஜெனராசிட்டி, அதர்வைஸ் வாட் ஆம் ஐ?” என்று நன்றி கூறி, ‘கிருஷ்ணா, இதுவல்லவோ உன் லீலா’ என்று புல்லரித்தபடி வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது நண்பர் கிருஷ்ணனின் முறை.  அவருக்கு மிகக் கடுமையான பகுதி வர, அவர் தன் புலமையைக் காட்டப் போக, ஏதோ களேபரம் ஆகியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ரிசல்டைப் பார்த்தால், ஐந்து வருடம் படித்த அவருக்கு C கிரேடும், ஐந்து நிமிடம் படித்த எனக்கு B கிரேடும் கிடைத்திருந்தன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-276387432618389183?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/276387432618389183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/276387432618389183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/276387432618389183'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/07/blog-post.html' title='பிரெஞ்சுப் புரட்சி'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_UIjlywobDuI/TDWYS5S92RI/AAAAAAAAAG8/0E1013UiLvw/s72-c/poochi.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-1363678937092539188</id><published>2010-06-25T18:24:00.003+05:30</published><updated>2010-12-11T20:13:36.451+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Cassandra'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Facebook'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Open Source'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Database'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Twitter'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Oracle'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Google'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Digg'/><title type='text'>ட்விட்டருக்கு ஆபத்து?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSkwHi_6tI/AAAAAAAAAGk/a-qb86mGrFs/s1600/twitter.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSkwHi_6tI/AAAAAAAAAGk/a-qb86mGrFs/s320/twitter.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;உலக கோப்பை கால்பந்தாட்ட ஜூரத்தின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதன் ரசிகர்கள் எழுதும் ட்வீட்ஸ் (Tweets)-களின் எண்ணிக்கையை தாக்குப் பிடிக்க முடியாமல் ட்விட்டர் நிலைகுலையக் கூடும் என்று சில மென்பொருள் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;இதைப் படிக்கையில் எனக்கு சிரிப்புதான் வந்தது. ஏனென்றால், "எத்தனை கோடி டேட்டா (data) தந்தாய் உலகே" என்று ஜாலியாகப் பாடிக் கொண்டிருக்கும் ட்விட்டர், இன்னும் எத்தனை கோடி டேட்டா தந்தாலும், இது எனக்கு கவுரவப் பிரசாதம் என்று ஸ்வாஹா செய்து விடும். காரணம் அது ட்வீட்ஸ்களை சேமிக்கும் டேட்டாபேஸ் (Database)-ஐ கட்டிக் காப்பது சர்வ வல்லமை பொருந்திய இளவரசி காசண்ட்ரா (Cassandra).&lt;br /&gt;&lt;br /&gt;பண்டைய துருக்கி நாட்டின் புகழ்பெற்ற ட்ராய் (Troy) நகரின் இளவரசி காசண்ட்ராவிற்கும் ட்விட்டருக்கும் என்ன சம்பந்தம்?  இதன் நதிமூலம் கூகுள். அங்கிருந்தே விளக்குகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSlQe0SYHI/AAAAAAAAAGs/hoveWrNha4g/s1600/google.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSlQe0SYHI/AAAAAAAAAGs/hoveWrNha4g/s320/google.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;இன்று இன்டர்நெட்டின் மொத்த ட்ராஃபிக்-இல் 45 சதவீதம் கூகுளை நோக்கியே. கூகுள் எப்படி இதைத் தாக்கு பிடிக்கிறது? அது எப்படி அதன் டேட்டாவை சேமித்து வைக்கிறது? எதைக் கேட்டாலும் எப்படி அதனால் உடனே தர முடிகிறது என்றெல்லாம் யோசித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று வாங்கினால் இன்னொன்று ஃப்ரீ,  மாடு வாங்கினால் ஆடு ஃப்ரீ, ஆடு வாங்கினால் வாத்து ஃப்ரீ என்ற ரீதியில் மற்ற நிறுவனங்களெல்லாம் செயல்பட, நீ எதுவுமே வாங்க வேண்டாம் ராசா, உனக்கு எல்லாமே ஃப்ரீ என்று எப்படி கூகுளால் தர முடிகிறது என்றாவது யோசித்ததுண்டா?&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக பெருமளவு டேட்டாவை சேமிக்க பெரிய பெரிய ஹார்ட்வேர் (hardware), டேட்டாபேஸ் சர்வர்கள் (database servers), சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஆகியவற்றில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் கூகுள் தனக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை இதற்கு வீணடிக்காமல் மாத்தியோசித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;டேட்டா தின்று கொட்டை போட்ட Oracle, SQL Server ஆகியவற்றை ஒதுக்கித்தள்ளி பிக் டேபிள் (Big Table) என்ற புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கிக் களமிறக்கியது. இது மின்னல் வேகத்தில் செயல்படக் கூடியது. ஆனால் இதனை சாதாரண கம்ப்யூட்டரில் கூட நிறுவ முடியும். மலிவான சிறிய சிறிய கம்ப்யூட்டர்களை பிக் டேபிளுடன் உலகெங்கும் நிறுவி அவற்றை மேகம் போன்ற ஒரு நெட்வொர்க்-கில் இணைத்தது. &amp;nbsp;இதற்கு க்ளவுட் கம்யூட்டிங் (Cloud Computing) என்று பெயர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் க்ளவுடில் இருக்கும்&amp;nbsp;கம்ப்யூட்டர்கள், "என்கிட்ட இது இருக்கு, உன்கிட்ட என்ன இருக்கு, நீ இத வச்சுக்கோ, நான் இத வச்சுக்கிறேன்" என்றெல்லாம் வளவள லொடலொட எனப் பேசி டேட்டாவை பண்டமாற்றிக் கொள்ளும். இதற்கு காஸிப் ப்ரோட்டோகால் (Gossip Protocol) என்று பெயர். இதன் மூலம் இந்த நெட்வொர்க்கில் ஒரு கோடியில் நுழையும் டேட்டாவானது சில நிமிடங்களிலேயே மேகமாக ஆனால் சற்று வேகமாக நகர்ந்து, வழியெங்கும் பிரதி (copy) எடுத்தபடியே, மறு கோடிக்குச் சென்று விடும். இதனால், உலகின் எந்த மூலையிலிருந்து கேட்டாலும், உங்களுக்கு அருகிலுள்ள கூகுளின் கம்யூட்டர் "இதானே கேட்டீங்க, இந்தாங்க வெச்சுக்கோங்க" என உடனே கொடுத்துவிடும். இதுவே கூகுள் வெற்றியின் ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSkZtiMZuI/AAAAAAAAAGc/Qnz0JYzQtHo/s1600/cassandra.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSkZtiMZuI/AAAAAAAAAGc/Qnz0JYzQtHo/s320/cassandra.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;கூகுள் தன் பிக் டேபிளின் சூட்சுமங்களை வெளி உலகிற்குக் கோடிட்டுக்காட்ட, அதை வைத்து ஃபேஸ்புக் (Facebook), கணினிச் செம்மொழியான ஜாவாவைப் (Java) பயன்படுத்தி, பிக் டேபிள் என்ற சக்ரவர்த்திக்கு மகளாக ஒரு புதிய டேட்டாபேஸ்-ஐ உருவாக்கியது. அதற்கு காசண்ட்ரா என்ற நாமகரணமும் சூட்டியது. ஆக துருக்கி தேச இளவரசி, இப்பிறவியில் டேட்டாபேஸ்-ஆக அவதரித்து விட்டாள். ஆனால்&amp;nbsp;ஃபேஸ்புக்கில் அவள் வளர போதுமான வசதிகளில்லை. &amp;nbsp;Apache.org என்ற ஓபன் ஸோர்ஸ் (Open Source) அரண்மனைக்கு அவள் அனுப்பப்பட்டாள். அங்கே அவள் சகல வித்தைகளையும் கற்று, யௌவனங்கள் நிறைந்த அரசிளங்குமரியாய்த் திரும்பி ஃபேஸ்புக்கில் அரியணை ஏறினாள். &amp;nbsp;அன்று முதல்&amp;nbsp;ஃபேஸ்புக்கின் முகம் மேலும் பிரகாசிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;காசண்ட்ராவின் கொடியிடை அழகிலும் (Smallest Database), ஆட்சித் திறத்திலும் (Replicating the database), மாட்சித் திறத்திலும் (Maintaining the database) மயங்கிய ட்விட்டர் அவள் தலைமையை ஏற்றது (அப்பாடா!! கூகுளில் தொடங்கி ஃபேஸ்புக் வழியாக ட்விட்டரில் முடித்து விட்டேன்!). Digg.com, Outbrain.com போன்ற ஜாம்பவான்களும் தங்களை காசண்ட்ராவுடன் இணைத்துக் கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காசண்ட்ராவின் ஆட்சி விரியத் தொடங்கியது. அவள் சாம்ராஜ்யத்தில் கால்பந்தாட்ட மைதானங்களெல்லாம் கால் தூசிற்குச் சமம். இப்போது நான் சிரித்ததன் அர்த்தம் புரிகிறதா?!!&lt;br /&gt;&lt;br /&gt;பெரும் ராஜ்ஜியங்களைப் பிடித்தபின், குழந்தையிடம் விளையாட வருவது போல் காசண்ட்ரா இப்போது என்னிடம் வந்துள்ளாள். டெரா பைட்ஸ் (Tera Bytes) கணக்கில் டெட்டா புரளும் என் ப்ராஜெக்ட்-ன் அடுத்த கட்ட நடவடிக்கையாக நான் பணிபுரியும் கம்பெனியில் இளவரசியை களமிறக்கிக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-1363678937092539188?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/1363678937092539188/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_25.html#comment-form' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/1363678937092539188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/1363678937092539188'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_25.html' title='ட்விட்டருக்கு ஆபத்து?'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/TCSkwHi_6tI/AAAAAAAAAGk/a-qb86mGrFs/s72-c/twitter.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-4968838775333078261</id><published>2010-06-12T19:12:00.003+05:30</published><updated>2010-06-12T23:43:56.923+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேர் சொல்லாத பிள்ளை</title><content type='html'>மறதி ஒரு வரப்பிரசாதம்.  சிலவற்றை மறக்க முடிவதால்தான் வாழ்க்கை தொடர்கிறது.  ஆனால், இதெல்லாம் மறக்கும், இப்படியெல்லாம் மறக்கும் என்ற நிலைகளையெல்லாம் தவிடுபொடியாக்கி, மறக்கவே கூடாத, மறக்கவே முடியாததை நான் மறந்திருக்கிறேன். குழம்புகிறதா? சொல்கிறேன்!&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது நான் ஏழாங் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தேன். வேறொரு பள்ளியில் கட்டுரை போட்டி.  அப்பள்ளியின் பி.டி மாஸ்டர் தான் போட்டிக்குச் சூப்பர்வைசர்.  அவர் மிலிட்டரியிலிருந்து ரிடையர் ஆனவராம்.  இன்னமும் அதே மிடுக்குடன் அறிவித்தார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"போட்டி நேரம் இருபது நிமிடம் மட்டுமே.  அதற்குள் கண்டிப்பாக எழுதி முடித்து விட வேண்டும்" என கட்டளையிட்டு விசிலடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய கட்டுரைக்கு இருபது நிமிடம் ரொம்ப குறைவு என்பதால்,  உடனடியாக பரபரவென எழுதத் தொடங்கினேன்.  மிலிட்டரி அடுத்த அறிவிப்பை செய்திருக்கிறார்.  “இப்பொழுதே உங்கள் பெயர்,  வகுப்பு, பள்ளி ஆகியவற்றை,  பேப்பரின் வலது ஓரத்தில் எழுதி வைத்து விட வேண்டும்.”  இருபது நிமிடம் முடிந்த உடனேயே பேப்பரை வாங்கி விடுவேன் என சொல்லியிருக்கிறார்.  ஆனால் எழுதும் மும்முரத்தில் அதை நான் கவனிக்கத் தவறியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டொரு முறைதான் கண் சிமிட்டியிருப்பேன்.  அதற்குள் இருபது நிமிடம் கரைந்து விட்டது.  மிலிட்டரி மீண்டும் விசிலடித்து "ஸ்டாப்... ஸ்டாப்..." என கத்தியதோடு மட்டுமில்லாமல் எல்லோரிடமிருந்து பேப்பரை பிடுங்கவும் தொடங்கியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஒரு பத்தி மட்டுமே பாக்கி.  எப்படியாவது முடித்து விட பெஞ்ச் அதிர எழுதிக் கொண்டிருந்தேன்.  அதற்குள் என் பேப்பரை பிடுங்கி விட்டார்.  &lt;br /&gt;&lt;br /&gt;”சார்.. சார்.. பேர் எழுதல.... ”    &lt;br /&gt;&lt;br /&gt;பளார்!!!!!!&lt;br /&gt;&lt;br /&gt;”எழுதுடா... எழுத சொன்னபோது என்ன பண்ணிட்டிருந்த” என கர்ஜித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;வாங்கிய அறையில் உடம்பு நடுங்கியது...  கன்னம் ஜிவுஜிவுத்தது... கையில் உதறல் எடுக்க, பேனா பூரானாய் நெளிந்தது... பெயரெழுத முனைந்தேன்... ர... ர... ர.... அதற்கு மேல் எழுத்து வரவில்லை... விழி பிதுங்கியது...  மூச்சு ஸ்தம்பித்தது... ஐயோ கடவுளே...&lt;br /&gt;&lt;br /&gt;”டேய், சீக்கரம் எழுதுடா...”&lt;br /&gt;&lt;br /&gt;”சார்... சார்... பேர் மறந்து போச்சு சார்....”&lt;br /&gt;&lt;br /&gt;”என்னது??” மீண்டும் அவர் உறும எனக்கு அழுகையே வந்து விட்டது...&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் பின்னாலிருந்த பையன் இன்னமும் எழுதிக் கொண்டிருக்க அவனை நோக்கி பாய்ந்துவிட்டார்.  நின்ற மூச்சு வந்தது.  ஆனால் போன பெயர்தான் நினைவிற்கு வரவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் நிதானமாக கிளம்பிக் கொண்டிருந்த நண்பனை அழைத்து கேட்டேன்... ”டேய்.. என் பேர் என்னடா?”&lt;br /&gt;&lt;br /&gt;அவன் என்னை வினோதமாக பார்த்துவிட்டு ஒன்றும் புரியாமல் சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயோ.. என்பேர் என்ன?'.. மண்டை கிறுகிறுத்தது... ஏதாவது ஒரு பாட புத்தகம் எடுத்துப் போயிருந்தால் லேபிள் பார்த்துக் கண்டுபிடித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது எனக்காக வாயிலில் காத்துக் கொண்டிருந்த மற்றொரு நண்பன் சொன்னான்...&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் ரகு, என் அப்பா வந்துட்டார்... நான் கிளப்பறேன்..." &lt;br /&gt;&lt;br /&gt;'ஆங்.. ரகு...' எழுதி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;'ஐயோ, இது பாதி பேர் தானே... மீதி பேர் என்ன?'&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் மிலிட்டரி திரும்பி வர இன்னொரு அறைக்கு பயந்து பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு திரும்பி பார்க்காமல் வெளியே ஓட்டமாய் ஓடி வந்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில் பாதி பெயர் கொண்ட பையனாய் நடந்து கொண்டிருந்தேன்.  கன்னம் இன்னமும் வலித்துக் கொண்டிருந்தது.  அதைவிட பெயரைத் தேடி மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.  ஐயோ.. நான் யாரு, எனக்கு வைத்த பெயர் யாது?  என்றெல்லாம் எழுதலாம் தான்.  ஆனால், அந்த வயதில் கவிதையாவது, மோனையாவது... என் பெயரில் யாராவது கடை வைத்திருக்கிறார்களா என்று ஒவ்வொரு கடையின் பெயர் பலகையை படித்துக் கொண்டே நடந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;அப்போது என் பக்கத்து வீட்டுக்காரர் எதிரே வந்தார்.  அவருக்கு நான் போட்டிக்குச் சென்றது தெரியும்.  அவரிடம் என் மீதிப் பெயரை கேட்கலாமா என யோசித்தேன்.  எப்படி கேட்பது என தயங்கினேன்.  ஆனால் அவரோ நிலைமை தெரியாமல் திருவிளையாடல் படத்தில் சிவபெருமான் தருமியிடம் கேட்பது போல..&lt;br /&gt;&lt;br /&gt;”தம்பியே.. பரிசு கிடைத்ததா..?” என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;”அறை ஒண்ணுதான் கெடச்சுது...” என கடுப்பில் முணுமுணுத்துவிட்டு நகர்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தூரத்தில் கோதண்ட ராமர் பஜனை கோயிலை கடந்தேன். 'ராமா... இது என்ன சோத... ஹாங்... ராமன்...'&lt;br /&gt;&lt;br /&gt;“யுரேகாஆஆஆ... கண்டு பிடிச்சிட்டேன்... கண்டு பிடிச்சிட்டேன்... நான் ராமன்.. ரகுராமன்...” என கத்தியபடியே ஓடி என் வீட்டுக் கண்ணாடி முன் மூச்சிறைக்க நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;‘ரகுராமா... கொஞ்ச நேரம் காணாம போய்ட்டியேப்பா’ என சந்தோசத்தில் கதறினேன்.  உற்றுப் பார்த்தால், மிலிட்டரியின் மூன்று விரல்கள், செவ்வரிகளாய் என் கன்னத்தில் பதிந்திருந்தன.  &lt;br /&gt;&lt;br /&gt;ஹூம், அந்த ராமன் பரிவுடன் தடவியதில், அணிலுக்கு மூன்று கோடு விழுந்ததாம்.  என் கன்னத்தில் விழுந்த மூன்று கோடுகளை ரகுராமனாகிய நான் பரிவுடன் வெகுநேரம் தடவிக்கொண்டிருந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-4968838775333078261?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/4968838775333078261/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_12.html#comment-form' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4968838775333078261'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4968838775333078261'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_12.html' title='பேர் சொல்லாத பிள்ளை'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-6720704596202511652</id><published>2010-06-08T16:54:00.000+05:30</published><updated>2010-06-08T16:54:23.015+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='லிஃப்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>இடி அமீன்கள்...</title><content type='html'>இன்று காலை நான் வேலை செய்யும் ஐ.டி பார்க்கினுள் நுழையும் போது, எதிரில் வந்தவர் பலமாக இடித்து விட்டார். தினமும் ஒரு நூறு பஸ்கி எடுப்பார் போல. அவரின் ”திண்”ணென்ற தோள் இடித்ததில் எனக்கு ”விண்”ணென்று வலித்தது. ஆனால் அவரோ, எதையும் சட்டை செய்யாமல், தன் பாட்டுக்கு ஏதோவொரு கனவுலகில் சஞ்சரித்தபடி சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த பத்து நாட்களில், இந்த ஐ.டி பார்க்கினுள்ளேயே நான் படும் மூன்றாவது இடி இது. நான்கு நாட்களுக்கு முன், லிஃப்டில் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தேன். அருகில் யாருமில்லாததால், ஹாயாக நின்று கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;அடடா மழடா... அட மழடா...&lt;br /&gt;&lt;br /&gt;என்று சன்னமான குரலில் முணுமுணுக்க, தரை தளத்தில் லிஃப்ட் திறந்தது. ஒரு பத்து பேர், தரையையே பார்த்தபடி ஒருவரை ஒருவர் முண்டிக் கொண்டு, என்னையும் முட்டிக்  கொண்டு உள்ளே நுழைந்தனர். கர்ச்சீப் போட்டு சீட்டா பிடிக்கப் போகிறார்கள்?  அட! ஒருவர் கூட நான் வெளியே போக வழியே விடவில்லை!&lt;br /&gt;&lt;br /&gt;ஆபீஸாக இருந்தாலும் சரி, ஹாஸ்பிட்டலாக இருந்தாலும் சரி, சொல்லி வைத்தது மாதிரி, வெளியே போக வழி விடாமல், டவுன் பஸ்ஸில் ஏறுவது போலத்தான், பெரும்பாலானவர்கள் லிஃப்டினுள் நுழைகிறார்கள். ஒரு பக்கம் வழி விட்டபடியாவது நுழையலாம்!  இந்த அடிப்படை யோசனை கூட இல்லாமல் ஏதோ கோட்டையைப் பிடிப்பது போல வாயிலை அடைத்தபடி நுழைகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக வெளியே வந்து பெருமூச்சு விட்டேன். கதவு மூடிக் கொள்வதற்குள் நுழைந்து விட, மேலும் இரண்டு பேர் வேகமாக ஓடி வந்து, Y ஷேப்பில் பிரிந்து, என் இரு தோள்களையும் ஆளுக்கு ஒன்றாக இடித்துத் தள்ளி, லிஃப்டினுள் பாய்ந்து விட்டனர். அவர்களை பிடித்து சண்டை போடுவதற்குள், லிஃப்ட் மூடிக் கொண்டது. லிஃப்ட் மீண்டும் வர அரை மணியா ஆகப் போகிறது? ஏன் இந்த அவசரம்!? என்ன மனிதர்கள் இவர்கள் என நொந்தபடி நடக்க, ஈனமான குரலில் உதடு முணுமுணுத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;அடடா இடிடா... இடி மழடா...&lt;br /&gt;&lt;br /&gt;இதெல்லாம் பரவாயில்லை. முதல் இடிதான்... இல்லை மிதிதான் ரொம்ப மோசம். என் ஆபீஸுக்குள்ளேயே நடந்தது. ஆபீஸ் வளாகம் என்ற இங்கிதம் கூட இல்லாமல், இரண்டு பேர் சத்தம் போட்டு அட்டகாசமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், மானாட மயிலாட எல்லாம் தோற்கும்படி கை காலை உதைத்தபடி தன்னிலை மறந்து பேசிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் சற்று எச்சரிக்கையாகத்தான் அவர்களை கடந்தேன். இருந்தும் அந்த மானானவர் பின்னாலே ஆடி நகர்ந்ததில் ஓங்கி என் காலை மிதித்து விட்டார். என் ஷூவையும் மீறி, சுண்டு விரல் எறும்பாய் நசுங்கிவிட்டது. வலி பொறுக்காமல் ஷூவைக் கழற்றி, சாக்ஸைக் கழற்றி விரலை தேய்த்துவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிமிடம் கழித்துதான், அந்த மானுக்கு தான் உதைத்தது தரையல்ல என உறைத்திருக்கிறது. திரும்பி பார்த்து விட்டார். ஸாரி கேட்கப் போகிறார் போல! வலியையும் மீறி பரவாயில்லை என்று சொல்ல என்னை திடப்படுத்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரோ, என்னை ஒரு அப்பிராணியாய்ப் பார்த்துவிட்டு, தன் மானாட்டத்தை செவ்வனே தொடர்ந்தார். தலையிலடித்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;டை கட்டினாலும் சரி, நிஜாரின் மேல் கைலி கட்டினாலும் சரி. ஐ.டி பார்க்கானாலும் சரி, பேட்டையானலும் சரி. பெரும்பாலானவர்களுக்கு மற்றவரைப் பற்றி அக்கறையில்லை. தங்களால் மற்றவருக்கு ஏற்படும் இடைஞ்சல்கள் பற்றியோ, துன்பங்கள் பற்றியோ அணுவளவும் கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கசப்பான உண்மையை நினைத்த போது, இருபது வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்த ஜோக் ஞாபகத்திற்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;முதலாமவர்:   ஸாரி சார், கவனிக்காம இடிச்சுட்டேன்.&lt;br /&gt;இரண்டாமவர்:  நீங்க ஊருக்கு புதுசா?&lt;br /&gt;முதலாமவர்:   அட, எப்படி கண்டுபிடிச்சீங்க?&lt;br /&gt;இரண்டாமவர்:  ஹிஹி... நாங்கெல்லாம் இடிச்சுட்டா, ஸாரியெல்லாம் சொல்லிக்கிறதில்லை...&lt;br /&gt;&lt;br /&gt;ஓ அப்பவே சென்னை இப்படித்தானா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-6720704596202511652?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/6720704596202511652/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_08.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/6720704596202511652'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/6720704596202511652'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post_08.html' title='இடி அமீன்கள்...'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5589509272132042028</id><published>2010-06-01T17:51:00.013+05:30</published><updated>2010-06-01T18:28:08.059+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='செமினார்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புரொபசர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்லூரி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜோக்'/><title type='text'>முனியின் செமினார்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/TAT-cN_ijhI/AAAAAAAAAFw/ZxV4JFf6Fms/s1600/seminar-hall-2.JPG" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/TAT-cN_ijhI/AAAAAAAAAFw/ZxV4JFf6Fms/s320/seminar-hall-2.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana; font-size: 13px;"&gt;சில சமயம், கல்லூரிகளில் ஐ.டி டிபார்ட்மெண்டிற்கு செமினார் எடுக்க எனக்கு அழைப்பு வரும். அவர்கள் கேட்கும் தலைப்பில் அல்லது நானே ஒரு தலைப்பில் செமினார் எடுப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போர் அடிக்காமல் இருக்க, ஜோக்குகள், சிறு கதைகள், கிளைக் கதைகள் எல்லாம் சொல்லி, அதிலிருந்து டெக்னிகல் சமாச்சாரத்திற்குத் தாவி செமினார் எடுத்து வந்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;எப்படிப்பட்ட கல்லூரியாக இருந்தாலும், வம்பு செய்வதற்கென்றே சில மாணவர்கள் இருப்பதுதானே விதி. இவர்கள் செய்த அலம்பலில் செமினார் அடிக்கடி தடைபட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை வழிக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்கை கையாண்டேன். ராஜேஷ்குமார் கதைகளில், விவேக் கேள்வி கேட்கும்போது மாட்டிக் கொண்ட குற்றவாளிக்கு அந்த ஏசியிலும் வியர்க்குமே! அது மாதிரி சுலபமான, ஆனால் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டு அவர்களை வியர்க்க வைத்தேன். அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று, அன்னியோன்னியமாக அவர்களின் தோளில் கைபோட்டு, நடு சந்திக்கு இழுத்துவிட்டு, கேள்வியைக் கேட்டு, பதில் சொல்ல அவர்கள் கையில் மைக்கையும் திணித்து விடுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் அபிமான ஃபிகர்கள் மத்தியில், மானம் பறிபோவதால், அந்த மாணவர்கள் கப்சிப்பென அடங்கினர். மேடையிலேயே நிற்காமல், ஹால் முழுக்க ரவுண்ட் அடித்தபடியே செமினார் எடுத்ததால், கேள்விக்கு பயந்து, சலசலப்புகள் தானே அடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை ஒரு பெரிய கல்லூரியில் செமினார் எடுக்க வேண்டியிருந்தது. ஒட்டுமொத்த ஐ.டி டிபார்டிமெண்டும் பங்கு பெற்றதால், எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருந்தது. ஒரு ஜோக்குடன் துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இப்படித்தான், ஒரு மத்யான நேரம். எல்லாரும் வயிறுமுட்ட சாப்ட்ட பிறகு செமினாருக்கு வந்தாங்க. ஆரம்பிக்கிறதுக்குள்ளயே முதல் ரோல டொபுக்-னு ஒரு தல சாஞ்சு விழுந்துச்சு. பயந்து வேற பக்கம் போனா, அங்க கொர்ர்ர்ர்...னு சத்தம். உடனே பக்கத்திலிருந்த பையனுக்கு செம கோவம் வந்துடுச்சு. அவன் சொன்னான்.. டேய்... எவ்ளோ பெரிய செமினார் நடக்குது. நீ இவ்ளோ சத்தம் போட்டு குறட்ட உட்ற... நாங்கெல்லாம் தூங்க வேணா...?&lt;br /&gt;&lt;br /&gt;அரங்கம் கலகலக்க, செமினார் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்திலேயே கேள்வி பாணிக்குத் தாவினேன். இரண்டாவது வரிசையில் இருந்த ஒரு மாணவரை கேள்வி கேட்க, அவர் மலங்க மலங்க முழித்தபடி தப்பாக பதிலளிக்க, ஒட்டு மொத்த அரங்கமும் சுவாரஸ்யமானது. தூக்கம் கலைந்து அனைவரும் சடுதியில் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். இதைக் கவனித்துவிட்ட நான், அந்த மாணவரையே குறிவைத்து அடிக்கடி கேள்விகளைக் கேட்க, ஒவ்வொருமுறையும் அவர் சொதப்ப செமினார் டாப் கியரில் சென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு படு சுலபமான கேள்வியைக் கேட்க, அதற்கு அவர் சரியான விடையளித்துவிட, “அப்பாடா, ஃபைனலி ஐ காட் எ ரைட் ஆன்ஸர் ஃப்ரம் யு” என்று நான் அவரை பாராட்ட அரங்கமே அதிர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செமினார் இனிதே முடிந்தது. முதல்வர் அறையில் (அட, பிரின்சிபால் ரூமுங்க) டீ பார்ட்டி. ஹாலில் இருந்த கேமிரா மூலம், தன் இடத்திலேயே செமினாரைப் பார்த்திருந்த முதல்வர் என்னை பெரிதும் பாராட்டினார் (பாராட்டு விழாவெல்லாம் இல்லீங்க).&amp;nbsp;“படு ஜோவியலாகவும், டெக்னிக்கலாகவும் நடத்தினீர்கள். அதைவிட எங்கள் ஸ்டூடண்ட்சை கட்டுக் கோப்பாக வைத்திருந்தீர்கள். நீங்க அடிக்கடி வந்து செமினார் எடுக்கணும்” என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, ஹெச்.ஓ.டி என் காதருகே கிசுகிசுத்தார். “சார், எல்லாம் பிரமாதம். ஆனா ஒரு சின்ன வருத்தம்”.&lt;br /&gt;&lt;br /&gt;“ஐயோ, என்னாச்சு சார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க கேள்வி கேட்டு தெணறடிச்சது ஸ்டூடண்ட் இல்ல சார், எங்க டிபார்ட்மெண்டில் ஒரு புரொபசர். அங்க பாருங்க முனி அடிச்சதுபோல நிக்கறாரு” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடப் பாவமே!&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5589509272132042028?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5589509272132042028/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5589509272132042028'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5589509272132042028'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/06/blog-post.html' title='முனியின் செமினார்'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/TAT-cN_ijhI/AAAAAAAAAFw/ZxV4JFf6Fms/s72-c/seminar-hall-2.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-3585345973087633015</id><published>2010-05-24T15:52:00.002+05:30</published><updated>2010-05-24T15:59:21.253+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தீக்குச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கியாஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாக்கிச்சான்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>தீக்குச்சியுடன் ஓர் இரவு...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/S_pTLuprV_I/AAAAAAAAAFY/fMs9CwkNCis/s1600/matchstick-1.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/S_pTLuprV_I/AAAAAAAAAFY/fMs9CwkNCis/s320/matchstick-1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;என் பேச்சுலர் பருவத்தில் அவ்வவப்போது நானே சமைத்துக் கொள்வேன். ஒரு முறை, வீடு மாற வேண்டியிருந்தது. உறவினர் ஒருவர் அவர் வீட்டுக்கு எதிர் வீடு காலியாக இருப்பதைச் சொல்ல, எல்லாவற்றையும் மூட்டை கட்டிக் கொண்டு அந்த வீட்டுக்கு வந்து விட்டேன். ஆபிஸிலிருந்து இரவு வெகு நேரம் கழித்து வீடு திரும்பிக் கொண்டிருந்ததால், எந்த மூட்டையையும் பிரிக்காமல் இரண்டு மாதத்திற்கு அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;சமையல் எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் இரவு (முதலிரவு என்று படிக்காதீர்கள்!) குடிப்பதற்கும், மறு நாள் காலை காப்பிக்கும் பால் வாங்கிக் காய்ச்சலாம் என முடிவெடுத்து, கியாஸ் ஸ்டவ்வையும் சிலிண்டரையும் செட் பண்ணி வைத்தேன். ஆனால் கியாஸ் பற்ற வைக்கும் லைட்டரைக் காணவில்லை. &amp;nbsp;இரண்டு நாட்கள் ஒவ்வொரு மூட்டையாகத் தேடினேன். &amp;nbsp;ம்ஹும், கிடைக்கவில்லை. &amp;nbsp;சே! கியாஸ் ஸ்டவ்வோடு லைட்டரையும் சேர்த்துக் கட்டி வைத்திருக்கலாம். &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;எல்லா மூட்டையையும் பிரித்து விட்டதால், ஒவ்வொரு பொருளுக்கும் புதுவீட்டில் இடமறிந்து அடுக்கி வைத்தேன். இந்த லைட்டர் புண்ணியத்தில் வீட்டை செட் பண்ணி விட்டேன். ஆனால் லைட்டர்தான் கிடைத்தபாடில்லை. சரி, நாளைக்கு தீப்பெட்டி வாங்கிக் கொள்ளலாம் என நினைத்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;மறுநாள் இரவு, வழக்கமான மெஸ்ஸில் உணவை முடித்துக் கொண்டு ஒரு பாக்கெட் ஆவின் பால் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன். பதினோரு மணிவரை, நண்பர்களிடம் செல்போனில் பேசிவிட்டு, பால் காய்ச்ச முனைந்தபோதுதான் தீப்பெட்டி வாங்க மறந்து போனதை உணர்ந்தேன். சே! இந்த கியாஸை பற்ற வைப்பதற்குள் மறதி என்னமாய்ப் படுத்துகிறது என சலித்துக் கொண்டேன். சரி, எதிர் வீட்டு உறவினரிடம் வாங்கலாம் என நினைத்து வெளியே வந்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;பதினோரு மணி ஆகிவிட்டதால், வீட்டுக்காரர் கேட்டை பூட்டிவிட்டிருந்தார். எதிர் வீட்டு கேட்டும் பூட்டப்பட்டிருந்தது. என்ன செய்வது, பால் கெட்டுவிடுமே! கேட் ஏறிக் குதித்தேன். என்னை திருடன் என்று யாரவது பிடிக்கிறார்களா என நிதானித்தேன். வீதி வெறிசோடி இருந்தது. அப்பாடா! எதிர் வீட்டு கேட்டையும் தாண்டிக் குதித்து, காலிங் பெல் அழுத்தி தீப்பெட்டியை வாங்கி விட்டேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;சிறு வயதில், ஜாக்கிச்சான் படத்தில், அவர் அனாயசமாக கேட் தாண்டுவதை பிரமிப்புடன் பார்த்தது ஞாபகதிற்கு வர, அது மாதிரி செய்து பார்க்கும் ஆசையும் வந்து தொலைத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;இரண்டடி பின்னோக்கி, ஒரு ஜம்ப் செய்து, இடது காலை கேட்டில் ஊன்றி, அலேக்காக தாவி தெருவில் குதித்தேன். ஆஹா! நாம் ஜாக்கிச்சானின் சீடனாகி விட்டோம் என்று சிலாகித்தபோதுதான் அதன் விபரீதம் புரிந்தது. நான் முன்பு கேட் தாண்டியதை மோப்பம் பிடித்துவிட்ட தெரு நாய்கள், ஒன்று கூடி எனக்காக காத்துக் கொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;ஒரு கணம் அதிர்ந்தேன். அவை என்னை நோக்கி முன்னேற, சட்டென்று சுதாரித்து படக்கென்று ஒரு தீக்குச்சியை பற்ற வைத்துக் காண்பித்தேன். என்னவோ ஏதோ என்று பயந்த நாய்ப் படை சற்று பின் வாங்கியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சும்மாவா சொன்னார்கள். எப்படி நமது சமயோசித்தம் என்று எனை நானே மெச்சிக் கொள்வதற்க்குள் தீக்குச்சி அணைந்து போனது. நாய்ப் படை மீண்டும் முன்னேற, அவசர அவசரமாய் இன்னொரு குச்சியைப் பற்ற வைத்தேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;நாமெல்லாம் தீபாவளியன்று, ஒரு மத்தாப்பிலிருந்து வரிசையாக பல மத்தாப்புகளை பற்ற வைத்த டெக்னிக் ஞாபகத்திற்கு வர, அது போல தீக்குச்சிகளை ஒன்றன்பின் ஒன்றாக பற்ற வைத்து, என்னைச் சுற்றி ஒரு ஒளி வட்டம் ஏற்படுத்திக் கொண்டு நாய்களை பயமுறுத்தி என் வீட்டு கேட் ஏறி உள்ளே குதித்து விட்டேன். ஏமாந்து நின்ற நாய்களைப் பார்த்து “இப்ப இன்னா பண்ணுவ! இப்ப இன்னா பண்ணுவ!“ என்று கத்தி விட்டு, என்னை யாரும் பார்த்து பைத்தியமென்று நினைக்கவில்லை என உறுதி படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;தீப்பெட்டி கணிசமாக காலியாகியிருந்தது. நாளை அதை திருப்பிக் கொடுக்கும் போது, சே! ஒரு கியாஸ் பத்த வைக்க இத்தனை குச்சி செலவழித்திருக்கிறானே! இவன் எதற்கும் உருப்படமாட்டான் என்று உறவினர் நினைப்பாரே எனத் தோன்றியது. &amp;nbsp;நாய் கடிக்கும், நாய் கடி ஊசிக்கும் இது பரவாயில்லை என தேற்றிக் கொண்டேன். &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;மீண்டும் ஒரு குச்சியைப் பற்ற வைத்து, இடது கையால் ஸ்டவ் நாப்-பை திறந்தேன். &amp;nbsp;திறந்ததுதான் தாமதம்; டப்-பென்ற ஒலியுடன் ஸ்டவ் தானாகவே ஜிகுஜிகுவென எரியத் தொடங்கியது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;அட தேவுடா!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;என் ஸ்டவ் ஆட்டோமேட்டிக் என்பதும், நான் லைட்டரே வாங்கவில்லை (தேவையில்லாததால்) என்பதும் அப்போதுதான் என் மண்டையில் உறைத்தது.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;கொள்-ளென்று நாயின் சப்தம் வேளியே கேட்டது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-3585345973087633015?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/3585345973087633015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3585345973087633015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/3585345973087633015'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/05/blog-post.html' title='தீக்குச்சியுடன் ஓர் இரவு...'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_UIjlywobDuI/S_pTLuprV_I/AAAAAAAAAFY/fMs9CwkNCis/s72-c/matchstick-1.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-5363263538766195543</id><published>2010-04-07T16:53:00.068+05:30</published><updated>2010-12-11T21:53:56.479+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிரிக்கெட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபில்தேவ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='twenty-20'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='20-20'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ட்வெண்டி-20'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கபில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='IPL'/><title type='text'>ஐ.பி.எல் எல்லாம் ஜுஜுபி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana; font-size: 13px;"&gt;ஐ.பி.எல்-3 பாதிதூரம் கடந்து விட்டது. சில போட்டிகள் சுவாரஸ்யமாகவும், சில போட்டிகள் படு டென்ஷனாகவும் சென்று கொண்டிருக்கின்றன. இன்று இருபது-இருபது ஓவர்களைக் கொண்டு விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் உலகெங்கும் மிகப் பிரபலமடைந்து விட்டன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;நண்பர்களே, நாம் கல்லூரியில் படிக்கும் போது இருபது-இருபது ஓவர்கள் கொண்ட மேட்சுக்கள்தாம் விளையாடியிருக்கிறோம் இல்லையா? என்ன அதனை ட்வெண்டி-20 என்று அழைக்காமல் பொதுவாக மேட்ச் என்று மட்டுமே அழைத்துக் கொண்டோம். ஆனால் அவை, இன்று நடக்கும் போட்டிகளுக்கு எந்த விதத்திலும் குறையாத ரகளைகளுடன் நடந்தன இல்லையா? அப்படி நடந்த ஒரு மேட்சின் ஒரு பகுதியை இங்கே பகிர்கிறேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;நாங்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட். எங்களுக்கும் பயோ-கெமிஸ்ட்ரிக்கும் மேட்ச். முதலில் பேட் செய்த அவர்கள், நாங்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் நல்லவர்கள் எனக் கருதி, அடி அடி என அடித்து 140 ரன்களுக்கு மேல் குவித்து விட்டார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் நாங்களும் சளைக்காமல் ரன் குவித்தோம்.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;ஹாஸ்டலிலிருந்து கொண்டுவந்த பக்கெட்டுகளை கவிழ்த்து வைத்து அதை ட்ரம்ஸாகப் பாவித்து, அருகிலிருந்த மரத்திலிருந்து உடைத்த கிளைகளால் அதில் மேளம் அடித்துக் கொண்டு...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;பயோவுக்கு சவாலே! கம்ப்யூட்டர்னா சும்மாவா!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;இந்த பேட்டிங் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா!&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;தில்லானா, தில்லானா கம்ப்யூட்டர்னா தூள்னா!&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;என்றெல்லாம், கத்தி எங்கள் அணியை ஊக்குவித்துக் கொண்டிருந்தோம். &amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;மேட்சின் க்ளைமேக்ஸ் நெருங்கியது. 13 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் மூன்று விக்கெட்டுக்கள் இருந்தன. கேப்டன் வினோத்தும், ஆல்ரவுண்டர் மதனும் ஆடிக்கொண்டிருந்தனர். கிருஷ்ணன் என்பவரும், நானுமே பாக்கி. இந்தக் கிருஷ்ணன், நாங்கள் படிக்கும் யுனிவெர்சிட்டியில் மிகப் பிரபலமானவர். சகல திறமைகளையும் தன்னுள் கொண்டவர். ஆனால், அவரை கலாய்ப்பதில் எங்களுக்கெல்லாம் அவ்வளவு பிரியம். &amp;nbsp;இவர்தான் இப்பதிவின் நாயகன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;18வது ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் அவுட்டாக, கிருஷ்ணன் விளையாட இறங்கினார். &amp;nbsp;19வது ஓவரை அவர்தான் எதிர் கொண்டார். இந்த ஓவரை வீசுவது எங்கள் யுனிவெர்சிட்டியின் அதிவேகப் பந்து வீச்சாளர் வசந்த் என்பவர். அதுவரை எந்த பேட்ஸ்மெனும் காட் எடுக்கவில்லை. ஆனால் இந்தக் கிருஷ்ணன், அம்பயரை அழைத்து லெக் ஸ்டெம்ப்புக்கும், மிடில் ஸ்டெம்ப்புக்கும் காட் எடுத்துக் கொண்டார். சுற்றிப் பார்த்து பீல்டிங்கை சர்வே செயதார். சந்தேகம் வந்து 11 பேர்தான் இருக்கிறார்களா என்றும் எண்ணிச் சரி பார்த்துக்கொண்டு படு நேர்த்தியாக ஸ்டேன்ஸ் எடுத்தார். ஆஹா, வசந்தை தொலைத்து விடுவார் தொலைத்து என்று நாங்கள் எல்லாம் எழுந்து நின்று கரகோஷம் செய்தோம்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;12 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;முதல் பந்து. மிக வேகமாக பேட்டை வீசி ஸ்கொயர் கட் அடித்தார் கிருஷ்ணன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷாட்..ரா... கிருஷ்ணா... என ஆரவாரித்த நாங்கள்,&amp;nbsp;பந்து எந்தப் பக்கம் சென்றது எனத் தேடினோம். அப்புறம்தான் புரிந்தது, அது பேட்டில் படவே இல்லை என்று. &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;இரண்டாவது பந்து. முன்பை விட படு வேகமாக பேட்டை வீசினார். இம்முறை பறந்தே விட்டது. ஆனால் அது பந்தல்ல. கை நழுவிப் பறந்த பேட், ஒரு இருபது அடி தள்ளி விழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ச்சீ! இந்த கிளவுஸ் சரியில்லை என்று அதைக் கழற்றி வீசி, வெறுங்கையுடன் பேட் பிடித்தார். “ஐயோ, கிருஷ்ணா! பால் போடறது வசந்துப்பா!. ஸ்டெம்ப் ஒடைஞ்சாலும் பரவால்ல! உன் கை ஒடைஞ்சா, நாளைக்கு எப்படிப்பா எக்ஸாம் எழுதுவே?. நீ எழுதாட்டி, நாங்களெல்லாம் எப்படி காப்பி அடித்து பாஸ் பண்றது” என்று கத்தினோம்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;மூன்றாவது பந்து. எங்கள் கத்தலில் வெறிபிடித்து விட்டது அவருக்கு. ஏறி அடிப்பது என்று முடிவெடுத்து விட்டார் போலும். வசந்த் ஓடிவரத் துவங்க, இவரும் ஏறிவரத் துவங்கினார். &amp;nbsp;அவர் ஓட, இவர் ஏற... ஓவராக வெறி பிடித்ததில், தன்னிலை மறந்து, கிட்ட தட்ட பாதி பிட்ச் ஏறிவந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ கிருஷ்ணா! என்ன பண்றே?!! என்று நாங்கள் கத்த, திரும்பிப் பார்த்த அவருக்கு அந்த விபரீதம் புரிந்தது. ஸ்டெம்பிற்கு அருகே வந்து விட்ட விக்கெட் கீப்பர், ஸ்டெப்பிங் செய்ய பவுலரைப் பார்த்து பந்தைத் தா.. தா.. எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரண்டு போன கிருஷ்ணன் பவுலரைப் பார்த்துக் கொண்டே மீண்டும் கிரீசுக்கு ரிவர்ஸில் ஓடத் தொடங்கினார். பவுலரும், பேட்ஸ்மெனும் ஒரே திசையில் ஓடும் இந்த வினோத காட்சியை இங்கு மட்டுமே காண முடியும். பவுலரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. கண்களில் குபுக்கென நீர் தளும்ப பந்தை போட முடியாமல், வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே திரும்பிச் சென்று விட்டார்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;இப்போது மதன் கத்திக் கொண்டிருந்தார். கிருஷ்ணா, நீ அடிக்கவே வேணாம். பந்தைப் போட்டதுமே நான் ஓடிவந்து விடுகிறேன். நீ எப்படியாவது ஒரு ரன் ஓடி வந்துவிடு. மத்ததை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று. &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;மீண்டும் மூன்றாவது பந்து. பந்து போடப்பட்டதுமே ஓடத் தொடங்கிய மதன் அப்படியே திகைத்து நின்று விட்டார். &amp;nbsp;காரணம், அந்தப் பந்தை அடிக்க கிருஷ்ணன் பேட்டை கண்ணை மூடிக் கொண்டு சுத்தினார். சுத்திய வேகத்தில், பேட்டுடன் சேர்ந்து அவரும் சுத்தினார். &amp;nbsp;தலையும் சுத்த நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், எழுந்த வேகத்தில் திசை மாறி விக்கெட் கீப்பரை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார். இம்முறை விக்கெட் கீப்பரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அருகில் வந்து விட்ட கிருஷ்ணணை கட்டி பிடித்துக் கொண்டு வயிறு வலிக்க குலுங்கிக் குலுங்கி சிரித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் தப்படைகளின் சப்தம் சுத்தமாக நின்று போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;அடுத்த மூன்று பந்துகள். &amp;nbsp;என்னென்னமோ மாய்மாலங்கள் செய்தார் கிருஷ்ணன். ம்ஹும்... பந்து பேட்டிலும் படவில்லை. ஸ்டெம்பிலும் படவில்லை. &amp;nbsp;ஒவ்வொரு பந்திற்கும் ரன்னிற்காக ஓடோடி வந்து, பின் ஏமாந்து திரும்பிச் சென்ற மதன் வெறுத்துப் போய் கால் நீட்டி கீழே அமர்ந்து விட்டார். &amp;nbsp;12 பந்து 12 ரன் என்ற நிலையை, தன் அற்புதத்தால் 6 பந்து 12 ரன் என்று மாற்றிவிட்டார் கிருஷ்ணன். &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;நாங்கள் செய்வதறியாது தவித்து பக்கெட்டுகளை தலையில் கவிழ்த்துக் கொண்டு அம்போவென்று உட்கார்ந்து விட்டோம். சரி, இந்த ஓவரை மதன் பார்த்துக் கொள்வார், அதை கிருஷ்ணன் கெடுக்காமல் இருந்தால் சரி என்று தேற்றிக் கொண்டோம்.&lt;/div&gt;&lt;br /&gt;ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் நொடிப்பொழுதில் துடைத்துக் கொண்டு, ஒரு உறுதியுடன் அந்த ஓவரை எதிர் கொண்டார் மதன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;முதல் பந்து. இரண்டு ரன்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;இரண்டாவது பந்து. நா..ன்கு ரன்கள்.&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;மூன்றாவது பந்து. மீண்டும்... இரண்டு ரன்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக 8 ரன்கள் எடுத்தாகி விட்டது. மீண்டும் தப்படைகள் முழங்கத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;மதனிருக்க பயம் ஏன்...&amp;nbsp;மதனிருக்க பயம் ஏன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;நான்காவது பந்து. ரன் எடுக்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;ஐந்தாவது பந்து. தூக்கி அடித்தார் மதன். துரதிஷ்டவசமாக அது கேட்ச் பிடிக்கப்பட அவுட்டானார் மதன். &amp;nbsp;அதைவிட துரதிஷ்டம், பேட்டிங் சைடுக்குச் சென்று விட்டார் கிருஷ்ணன். ரன்னர் சைடிலில் நான் நிற்க வேண்டிய நிலை. &amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;கடைசி பந்து. நான்கு ரன்கள் வேண்டும்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;"கிருஷ்ணா, அன்னைக்கு ஷார்ஜா-ல சேட்டன் ஷர்மாவோட கடைசி பந்தை மியான்தாத் சிக்ஸர் அடிச்சது போல அடிப்பா. யுனிவெர்சிட்டி முழுக்க உன்னை தோளில் சுமந்து சுத்தி வர்ரேன்" என்று கத்தினேன்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;பவுலர் ஓடி வரத் தொடங்கினார்... ஸ்டேடியமே கத்தியது...&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;கிருஷ்ணாஆஆஆஆஆஆ.........!!!&amp;nbsp;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/S7xq5mXUIBI/AAAAAAAAAFQ/6oscPGhRAQk/s1600/kapil.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/S7xq5mXUIBI/AAAAAAAAAFQ/6oscPGhRAQk/s320/kapil.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;பவுலர் மிக ஆக்ரோஷமாகப் பந்தை வீசினார். அது ஒரு பீரங்கி குண்டை போல அதிபயங்கரமாக கிருஷ்ணனின் மார்பை நோக்கி எழும்பியது. அவ்வளவுதான், தொலைந்தார் கிருஷ்ணன் என்றே நினைத்தேன். ஆனால்...&lt;br /&gt;&lt;br /&gt;ஆஹா, அந்த அற்புத்தை என்னவென்று சொல்ல. அதைக் காண கண்கள் நூறு வேண்டும். எவர் ஆவி அவர் உடலில் புகுந்து கொண்டதோ... மிக அற்புதமாக கபில்தேவின் ட்ரேட் மார்க் மிட் விக்கெட் புல் ஷாட்டை அடித்தார். காற்றைக் கிழித்து, விண்ணை நோக்கி எழும்பிய பந்து அனாயசமாக எல்லைக் கோட்டைத் தாண்டி விழுந்தது.&amp;nbsp;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;சிக்ஸர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;கிருஷ்ணா... சாதிச்சுட்டபா... என்று கத்திக் கொண்டே அவரை நோக்கி ஓடிய நான், அப்படியே&amp;nbsp;ஸ்தம்பித்து&amp;nbsp;நின்றேன். காரணம், கபில்தேவ் போல ஒற்றைக் காலில் நின்று அடித்தபின், அவரைப் போல் பேலன்ஸ் செய்யாததால், நிலை தடுமாறி ஸ்டெம்பின் மேல் குப்புற விழுந்திருந்தார் கிருஷ்ணன். அவர் பளு தாங்காமல் மூன்று திசைக்கு ஸ்டெம்புகள் சிதறி இருந்தன. பெயில்சுகளைக் காணவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;திரும்பிப் பார்த்தால், இரு கைகளையும் உயர்த்தி சிக்ஸர் என்பதற்குப் பதில், ஒரு கையை மட்டுமே உயர்த்தி அவுட் என்றார் அம்பயர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-5363263538766195543?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/5363263538766195543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/04/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5363263538766195543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/5363263538766195543'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/04/blog-post.html' title='ஐ.பி.எல் எல்லாம் ஜுஜுபி'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_UIjlywobDuI/S7xq5mXUIBI/AAAAAAAAAFQ/6oscPGhRAQk/s72-c/kapil.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5207758271645224380.post-4678797858939142982</id><published>2010-03-29T17:14:00.000+05:30</published><updated>2010-03-29T17:32:53.589+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='டைடல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோயம்பேடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பஸ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழைக்காய்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பேருந்து'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கல்பாக்கம்'/><title type='text'>வாழைக்காய்க்கு இப்படி ஒரு உபயோகமா?</title><content type='html'>இரண்டு மாதத்திற்கு முன்பு கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சற்று அருகில் குடி வந்த பிறகு, டைடல் பார்க்கிலுள்ள எனது ஆஃபீஸூக்கு வருவது பெரும் பாடகிவிட்டது.  இரண்டு ஸ்டாப்பிங் தொலைவிலுள்ள பஸ் ஸ்டாண்டுக்கு டவுன் பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ வந்து, பிறகு வேளச்சேரி வழியாக திருவான்மியூர் செல்லும் M70-யைப் பிடித்து டைடல் வருவதற்குள் 2 மணி நேரம் வீணாகி விடுகிறது.  &lt;br /&gt;&lt;br /&gt;எட்டு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பியும் (ஐ.டி மக்களுக்கு 8 மணி என்பது நிலாக் காயும் நேரம் தானே!), ஊரைச் சுற்றிச் செல்லும் M70-யைத் தவிர வேறு நேரடி பஸ் எதுவும் இல்லாததால் பத்தரை மணியைத் தாண்டியே ஆஃபீஸூக்கு செல்ல முடிந்தது.  ECR வழியாக பாண்டிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் பஸ்கள் டைடல் வழியாகச் சென்றாலும் அதன் கண்டக்டர்கள், டைடல் டிக்கெட்டெல்லாம் ஏற்ற மறுத்து விட்டார்கள்.  பத்து வருடங்களுக்கும் மேலாக, சென்னையில் நினைத்த இடங்களுக்கு நினைத்த நேரத்தில் பைக்கிலேயே சென்று பழகிவிட்ட எனக்கு, அளவே இல்லாமல் பஸ்ஸூக்காக காத்திருப்பதும், செல்லும் இடத்திற்கு அதைவிட அளவே இல்லாமல் பஸ்ஸினுள் காத்திருப்பதும் பெரும் அலுப்பைத் தந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/S7CWz1ZdNgI/AAAAAAAAAFA/VKbVSybecXs/s1600/volvo.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/S7CWz1ZdNgI/AAAAAAAAAFA/VKbVSybecXs/s320/volvo.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;விரைவிலேயே சென்னை மாநகர பேருந்துக் கழகம், OMR வழி மாமல்லபுரம் செல்லும் 586C - AC பஸ்ஸை காலை 8 மணிக்கு அறிமுகப்படுத்தியது.  அதன் மூலம் 9 மணிக்கே ஆஃபீஸூக்கு வந்து சேர்ந்தேன்.  அப்பாடா ஒரு வழியாக எனக்கு விடிவு கிடைத்து விட்டது என்று நினைத்தேன். ஆனால் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.  OMR-லிலுள்ள ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் மக்கள் இந்த பஸ்ஸிற்குப் படையெடுக்கத் தொடங்கியதும், பஸ்ஸினுள் நிற்கவே இடமில்லாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் இந்த குளுகுளு பேருந்தில் கால் நீட்டி அமர்ந்து இந்து பேப்பர் படித்தேன். பிறகு டயருக்கு மேல் இருக்கும் சிறிய கட்டை சீட்டுதான் கிடைத்தது. பிறகு அதுவும் கிடைக்காமல் நிற்க வேண்டி வந்தது.  பிறகு கொக்கு பொல ஒற்றைக் காலிலெல்லாம் நிற்க வேண்டி வந்தது.  கொக்கிற்காவது உறுமீன் கிடைக்கும்.  எனக்கு கால் வலிதான் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களிலிலேயே நிலைமை படுமோசமானது.  சொகுசு பேருந்து, தாழ்தள சொகுசு பேருந்து, குளிர்சாதன சொகுசு பேருந்து என எதுவும் இந்த சிங்காரச் சென்னை நகரில் பிரேக்டவுனுக்கு விதிவிலக்கல்ல என்பதுபோல் இந்த புத்தம் புது பேருந்தும் பிரேக்டவுனாகி என்னை வடபழனியிலேயே இறக்கி விட்டது.  தலையிலடித்துக் கொண்டு தேமே என்று நின்றுகொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ECR வழி கல்பாக்கம் செல்லும் 118 வந்தது.  ஒரு நப்பாசையுடனும், ஒரு ஏக்கத்துடனும் அதன் கண்டக்டரிடம் டைடல் என்றேன்.  அவர் வாங்க என்றார்.  அடடா, அந்த அழைப்பு, கல்யாண வீட்டில் வெற்றிலை பாக்கு வைத்து, பன்னீர் தெளித்து, சர்க்கரை தந்து வரவேற்பது போல் இனித்தது.  இது பஸ் ஸ்டாண்டிலிருந்து 7.50க்கு கிளம்புகிறது,  டைடல், திருவான்மியூர் டிக்கெட்டெல்லாம் ஏற்றுவோம் என்று அவர் தேவகானமாய்க் கூறினார்.  இது OMR வழி செல்லாததால் 586-Cயில் வந்த பெரும்பாலானவர்கள் இதில் ஏறவில்லை.  அதனால் இதில் தாராளமாக இடமிருந்தது.  அப்பாடா எனக்கு ஒரு நல்ல பஸ் கிடைத்து விட்டது.  ஆனால் வேறொரு பிரச்சனை.  இதைப்பிடிக்க 7.15-க்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டும்.  பஸ் ஸ்டாண்டில் அது நிற்கும் இடத்திற்கு சிறிது தூரம் வேறு நடக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் முயற்சித்தேன். பிடிக்க முடியவில்லை.  7.50-க்கு கிளம்பினால் அது பின்புற வாயில் வழியாக வெளியில் வர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகும்.  நான் வீட்டிலிருந்து வரும் போது பின்புற வாயிலைக் கடந்துதான் வருகிறேன்.  அங்கேயே பஸ்ஸைப் பிடிப்பது எனக்கு எளிது என்றாலும், பஸ் சென்று விட்டால் அது தெரியாது என்பதால் அங்கே நிற்கத் தயங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ச்சே! என்ன கவர்மண்ட் இது! கொஞ்சம்கூட முன்னேறவே மாட்டேன் என்கிறார்களே!  இந்த பஸ்ஸில் ஒரு GPRS டிவைஸைப் பொருத்தினால் அதற்கு SMS பண்ணி, வரும் பதிலை வைத்து, லேட்டிட்யூட், லாங்கிட்டியூட் எல்லாம் தெரிந்து கொண்டு, அதை கூகுள் மேப்பில் பிளாட் செய்து, பஸ் உள்ளே இருக்கிறதா? வந்து கோண்டிருக்கிறதா அல்லது சென்று விட்டதா என்று சுலபமாத் தெரிந்து கொள்ளலாம் என என் டெக்னாலஜி புலமை எல்லாம் பயன்படுத்தி ஒரு ஐடியா பண்ணிப் பார்த்தேன்.  அது எனக்கே அபத்தமாய்ப் பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;சரி, என்னைப் போல் யாரேனும் டைடல் பார்க்கிற்கு இந்த பஸ்ஸில் செல்லக்கூடும். அவரை நண்பராக்கிக் கொண்டு அவருக்கு SMS பண்ணித் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தேன்.  மறுநாள் அதிகாலையில் எழுந்து, காலைச் சிற்றுண்டியைத் தியாகம் செய்து, ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பி அந்த பஸ்ஸைப் பிடித்து விட்டேன்.  அதில் நான்கு பேர் மட்டுமே இருந்தனர்.  அவர்கள் டைடல் செல்வது பொலவும் தெரியவில்லை, அவர்களிடம் மொபைல் போன் இருப்பது போலவும் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, பஸ் டிரைவரையே சிநேகம் பண்ணிக் கொண்டு அவருக்கு SMS பண்ணலாம் என்று முடிவெடுத்து (எப்படி எல்லாம் யோசனை பாருங்கள்), அவர் சீட்டுக்கு அருகில் இருக்கும் ஒற்றைச் சீட்டிற்குச் சென்று அமர்ந்தேன்.  சற்று நேரத்திற்கெல்லாம் பஸ்ஸில் ஏறிய டிரைவர், பஸ் முழுக்க காலியாக இருக்க இவன் ஏன் இங்கு உட்கார்ந்திருக்கிறான் என்பதுபோல் என்னை விநோதமாகப் பார்த்தார்.  என் எண்ணம் அவருக்கு புரிந்துவிட்டதோ எண்ணமோ, அவர் பார்வையில் சிநேகம் தென்படவில்லை.  ஆக அவரிடம் என் ஜகதலப்பிரதாப பேச்சைக் கொடுப்பது இன்று சாலச் சிறந்தது அல்ல என்று புரிந்து கொண்டு அமைதி காத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/S7CW4pROBBI/AAAAAAAAAFI/tJFDdOMJVw0/s1600/green_banana.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/S7CW4pROBBI/AAAAAAAAAFI/tJFDdOMJVw0/s320/green_banana.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;சரியாக 7.50-க்கு புறப்பட்ட பஸ் தொடர்ச்சியாக ஏர் ஹாரன் அடித்து (ஏன்தான் அந்தச் சீட்டில் உட்கார்ந்தோம் என்றாகிவிட்டது) குறுக்கும் நெடுக்குமாக நின்றிருந்த மற்ற பஸ்ஸையெல்லாம் வழி விட வைத்து 8.05-க்கு பின்புற வாயில் வழியாக வெளியில் வந்ததும் ரோடு ஓரமாக ஒதுங்கி நின்றது.  அங்கே ஒரு இருபது வாழைத்தார்களுடன் ஒரு ட்ரைசைக்கிள் நின்று கொண்டிருந்தது.  இரண்டு பேர் அதை கடகடவென பஸ்ஸில் ஏற்றி என் சீட்டிக்கு அருகில் அடுக்கி வைத்ததும், பஸ் புறப்பட்டது.  திடீரென என் மண்டையில் ஒரு மின்னல் பளிச்சிட்டது.  அன்று வடபழனியில் இந்த பஸ்ஸில் ஏறிய போது இதே சீட்டுக்கருகில் வாழைத்தார்கள் இருந்ததைப் பார்த்த ஞாபகம் வந்தது.  புரிந்துவிட்டது.  அருகிலுள்ள கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வாழைத்தார்களை வாங்கி இந்த பஸ்ஸில் அதை கல்பாக்கத்திற்கு யாரோ ஒருவர் தினமும் அனுப்புகிறார் என்பதும் புரிந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, அந்த வாழைத்தார் ட்ரைசைக்கிள் அங்கே இருந்தால், அந்த பஸ் இனிமேல்தான் வரப்போகிறது என்று அர்த்தம்.  இல்லையென்றால் போயே போய்விட்டது. மொபைல் சிஸ்டம், GPRS சிஸ்டமெல்லாம் இந்த வாழைத்தாரிடம் தோற்றது போங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அன்று முதல் இந்த ட்ரைசைக்கிள் அருகில் நின்று, வாழைக்காய் பஸ்ஸை சரியாகப் பிடித்து 9 மணிக்கெல்லாம் ஆஃபீஸூக்கு வந்து லேட்டாக வருபவர்களை பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5207758271645224380-4678797858939142982?l=kanchiraghuram.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kanchiraghuram.blogspot.com/feeds/4678797858939142982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4678797858939142982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5207758271645224380/posts/default/4678797858939142982'/><link rel='alternate' type='text/html' href='http://kanchiraghuram.blogspot.com/2010/03/blog-post.html' title='வாழைக்காய்க்கு இப்படி ஒரு உபயோகமா?'/><author><name>காஞ்சி ரகுராம்</name><uri>http://www.blogger.com/profile/03351804888963244481</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://4.bp.blogspot.com/-8SvWUYbWp7A/Thxc_lq_g-I/AAAAAAAAAKU/XNEYsu9RwME/s220/raghuram.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_UIjlywobDuI/S7CWz1ZdNgI/AAAAAAAAAFA/VKbVSybecXs/s72-c/volvo.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry></feed>
